Tuesday, March 26, 2013

கோவில்பட்டி சிலை உடைப்பு: திடுக்கிடும் பின்னணி

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சங்கரலிங்கபுரம் மெயின் ரோட்டில் பசும்பொன் முத்துராமலிங்க தேவர் சிலை உள்ளது. இந்த சிலையை சுற்றிலும் இரும்பு கூண்டு அமைக்கப்பட்டு கிரில் கேட் போடப்பட்டிருந்தது. நேற்று நள்ளிரவில் மர்மநபர்கள் சிலர் கிரில் பதித்துள்ள சுவரை சுத்தியலால் உடைத்து கேட்டை கழற்றி உள்ளே புகுந்து தேவர் சிலையை சேதப்படுத்தி விட்டுச் சென்றனர். இன்று காலை சிலை உடைக்கப்பட்டிருப்பதை கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சியடைந்தனர். தகவல்

இதன் பின்னணியை சற்று அலசுவோம்.

* உடைக்கப்பட்டதாக சொல்லப்பட்ட அந்த சிலை இருக்கும் இடம் மறவர்கள் அதிகம் வாழும் இடம். இரும்பு கதவு போடப்பட்டு மிகவும் பாதுகாப்பாக உள்ளது சிலை. எனவே சிலையை சேதப்படுத்தியவர்கள் மாற்று சாதி ஆட்களாக இருக்க வாய்ப்பு குறைவு.

* அந்த சிலையானது மண்ணால் செய்யப்பட பழைய சிலை. அதை அகற்றிவிட்டு வெண்கல சிலை நிறுவ வேண்டும் என்பது அப்பகுதி மக்களின் நீண்ட நாளைய கனவு.

* ஈழத்திற்காக மாணவர்கள் போராட்டம் உச்சத்தில் இருக்கும் இந்நேரம், அதை திசை திருப்ப, கயவர்கள் கட்டவிழ்த்து உள்ள சதி வேலை இது என்று என்ன வேண்டியுள்ளது. இதற்க்கு அப்பாவி மறவர்கள் அவர்களின் வலையில் வீழ்ந்து  பலியாவது தான் பரிதாபம்.

* அப்படியானால் சிலையை உடைத்தது யார்..? வேறு யாரும் அல்ல. அந்த பகுதியை சேர்ந்த இரண்டு மறவர்கள் தான். சம்பந்த பட்ட இடத்தில் இருக்கும் எந்த சாதி ஆட்களையும் (மறவர்கள் உட்பட) தொடர்பு கொண்டு கேட்டால் இந்த உண்மையை தெரிந்து கொள்ளலாம். இது உளவுத்துறை வாயிலாக தமிழக அரசுக்கும் தெரிவிக்கப்பட்ட செய்தி. அப்படி என்றால் அந்த இரண்டு மறவர்கள் யார்? எங்கே அவர்கள்?

* அவர்கள் பற்றிய தகவலை இது வரை தமிழக அரசு வெளியிட வில்லை. இன்னும் சொல்லப்போனால், சிலை உடைப்பு சம்பந்தமாக இது வரை (மாற்று சாதியினர் உட்பட) யாரும் கைது செய்யப்பட வில்லை. தொடர்ந்து எழுந்த கலவரம் காரணமாகவே மாற்று சாதியினர் சிலரை காவல்துறை கைது செய்துள்ளது.அவ்வளவே...!!! சிலை உடைத்ததாக சொல்லப்படும் அந்த மறவர்கள் தற்போது உயிரோடு இல்லை.

* அதில் ஒருவர் விஷம் குடித்தும், மற்றொருவர் தூக்கில் தொங்கியும் இறந்துள்ளதாக பிரேத பரிசோதனை தகவல்கள் தெரிவிக்கின்றன. இதையும் அரசியலாக்க முயன்ற தமிழர் விரோத சக்திகளின்,கட்சிகளின் கைகூலியாய் செயல்படும் சில மறவர்கள், கடை அடைப்பு, சாலை மறியல், கடை உடைப்பு என்ற வன்முறை செயல்களில் இறங்கியுள்ளனர்.

* நாடார்,நாயக்கர் சாதி மக்கள் வணிகம் செய்யும் கோவில்பட்டியின் ஒரு பகுதியில் தனது அராஜக கடை அடைப்பை நடத்திய மறவர் வன்முறை கும்பல், பள்ளர்கள் அதிகம் வாழும் பகுதியில் உள்ள கடைகளை அடைக்க சொல்லி வற்புறித்திய போது, அவர்கள் எதிர்த்ததால் திரும்பி விட்டனர். இருப்பினும் மேலும் எந்த அசம்பாவிதம் நடக்காமல் தடுக்க, அவர்களை கைது செய்தது காவல்துறை.

* மறவருக்கும், பள்ளருக்குமான பல காலத்திய வன்மம் இற்றுப்போய் பல ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில், இங்கொன்றும் அங்கொன்றுமாய் 1950 தொடங்கி ஒரு சில திராவிட கட்சிகளின் தூண்டுதலின் பேரில் சாதி மோதல்கள் தொடர்கின்றன. இதை இரு தரப்பு மக்களும் புரிந்து கொள்ள வேண்டும்.

    எனவே இரு தரப்பு மக்கள் சார்பாகவும் தமிழக அரசுக்கு வைக்கப்படும் கோரிக்கை இது தான். 'சிலை உடைப்பு' என்ற போர்வையில், ஈழ ஆதரவு போராட்டங்களை திசை திருப்ப, சில விசமிகள் செயலாற்றி வருகிறனர். இதை உடனடியாக தடுத்து திருத்தவும், இது போன்ற அசம்பாவித சம்பவங்கள் மேற்கொண்டு நிகழாமலும் தடுக்கவும் வேண்டுகிறோம்.

4 comments:

  1. konjam kooda sambandamae illa news

    ReplyDelete
  2. தேவர்சிலை உடைப்பு அனைத்துமே மு க் குல த் தோ ர் தான் உடைப்பதே

    ReplyDelete

பின்னூட்டமிடுவதற்கு நன்றி