Tuesday, September 17, 2013

பட்டமா,சாதியா? ஒரு அலசல்

வருடம்: 2013
--------------------
> டாக்டர்.கருணாநிதி
> டாக்டர்.ராமதாஸ்
> டாக்டர்.கிரிஷ்ணசாமி
> டாக்டர்.விஜய்

"இதில் யார் டாக்டர்? "
"எல்லாருமே டாக்டர் தான். "

"இதில் யார் பல்கலை கழகத்தில் இருந்து பட்டம் பெற்றவர்கள்?"
"எல்லாருமே தான்."

"இதில் யார் ஊசி போடுவார்கள்?"
"ராமதாஸ் அவர்களும், கிரிஷ்ணசாமி அவர்களும்."

ஆக, அவர்களின் தொழில்,பின்னணி,பூர்வீகம் போன்றவற்றின் அடிப்படையில் தான் ஒருவரை அணுக வேண்டும். மாறாக, டாக்டர் என்ற அடிப்படையில் அணுகினால் குழப்பம் தான் வரும். இல்லை என்றால் 'என் மகனை காப்பாத்துங்க என்று விஜய்யிடம் போய் நிற்க வேண்டி வரும்'.

வருடம் 2100:
-------------------
"டாக்டர் என்று பட்டம் வைத்து இருந்தவர்கள் (சும்மா பட்டம், MBBS பட்டம் என எல்லாமே) அனைவரையும் ஒருங்கிணைத்து,டாக்டர் என்ற சாதி உருவாக்கப்படுகிறது. இவர்கள் OBC பட்டியலில் வருவார்கள்" --- அரசு அறிவிப்பு.

வருடம் 2200:
--------------------
"டாக்டர் சாதி தான் ஆண்ட சாதி, மற்ற சாதி எல்லாம் அவர்களுக்கு பணி செய்த சாதி".


இது எத்தனை அபத்தம்? பட்டத்தை வைத்து மக்களை அணுகும் அங்குமுறை எத்தனை அபத்தமானது. இது தான் இன்றும் நடக்கிறது. எப்படி?

கவுண்டர் என்ற பட்டம் வைத்தவர்கள் எல்லாம் 'கவுண்டர்' சாதி.
படையாச்சி/வன்னியர் என்ற பட்டம் வைத்தவர்கள் எல்லாம் 'வன்னியர்' சாதி.
தேவர் என்ற பட்டம் எம்முடையது என்று சொல்பவர்கள் எல்லாம் 'தேவர்' சாதியினர்.
வேளாளர் என்ற பட்டம் வைத்தவர்கள் எல்லாம் 'வெள்ளாளர்' சாதி.
நாயக்கர் என்ற பட்டம் வைத்தவர்கள் எல்லாம் 'நாயக்கர்' சாதி.
அரையன் என்ற பட்டம் வைத்தவர்கள் எல்லாம் 'முத்தரையர்' சாதி.

பட்டத்தை வைத்து மக்களை அணுகும் அணுகுமுறை அபத்தமானது என்றால், அவர்களை SC / FC / பிசி என பிரித்து அடுக்கியது அதை விட அபத்தமானது. இதன் நோக்கம் ஒன்றே ஒன்று தான்.

"எந்த காரணத்தை கொண்டும், யாரும் யாருடனும் ஒன்று இணையக் கூடாது என்ற எதிரியின் சதி திட்டம் தான்".

இந்த காரணத்தினால் தான், தான் ஏன் FC / பிசி / SC பட்டியலில் இருக்கிறோம் என்று சம்பந்த பட்டவர்களுக்கே தெரியாத குழப்பம் நடக்கிறது. பட்டங்களை விட்டுவிட்டு, மக்களை எப்படி தான் ஆராய்வது?

* குறைந்த பட்சம் சம்பந்த பட்ட பட்டங்களை யார் யார் வைத்து இருந்தார்கள் என்றாவது ஆராய வேண்டும்.
* அந்த பட்டங்களை யார் யார் அவர்களுக்கு வழங்கினார்கள் என்றும் ஆராய வேண்டும்.
* அப்படி பட்டங்கள் உருவான காலம்,அதன் பின்னணி போன்றவை ஆராயப்பட வேண்டும்.
* பட்டங்கள் பெறுவதற்கு முன்பு, அதில் சம்பந்தப்பட்ட மக்கள் எவ்வாறு வழங்கப்பட்டனர்? அவர்கள் ஒருவரா இல்லை பலரா? பல்வேறு இனக்குழுக்களை சேர்ந்தவர்களா என்று பார்க்க வேண்டும்?
* எல்லாவருக்கும் மேலாக, பட்டங்களை பெரும் போதும், கொள்ளும் போதும், ஏதேனும் வன்முறைகள் நடந்தனவா என்றும், இன்று போல அன்று மக்களை ஒன்றோடு ஒன்று ஒட்டாமல் இருக்கத் தான் பட்டங்கள் வழங்கப்பட்டனவா என்பதை கூர்ந்து ஆராய வேண்டும்.

அப்படி செய்வதன் மூலம், சாதி என்றால் என்ன, சாதியா பட்டமா, ஏன் பிரிந்தோம், ஏன் சேர்ந்தோம், ஏன் வகைப்படுத்தப்பட்டோம் என்ற ஒரு தெளிவு கிடைக்கும். இதன் மூலம், வரலாற்று ரீதியாகவும், இன ரீதியாகவும் பிரிந்து கிடக்கும் மக்கள், சேர்ந்து இயங்க ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

இவண்
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

Friday, July 19, 2013

தென் தமிழகத்தில் சாதிய மோதல்கள்: உண்மையும், பின்னணியும்: பாகம் 1

முற்சேர்க்கை: தமிழகத்தில் சாதி கோர தாண்டவங்கள் வடக்கு தெற்கு பக்கத்தில் மித மிஞ்சி கிடப்பது அனைவரும் அறிந்ததே. அதற்க்கு மூல காரணங்களாக நாம் இத்தனை நாள் நினைத்து கொண்டிருக்கும் சில அடிப்படை கருத்துகள் எத்துனை அபத்தமானது என்பதையும், உண்மையான காரணங்களை தேடியும் எழுதப்பட்டவை இந்த பதிவுகள்.

நாம், மறவரான திரு.முத்துராம லிங்கம் அவர்களின் தேர்தல் உரைகளை ஒவ்வொன்றாக காண இருக்கிறோம். தொடர்ச்சியாக, அந்த கால கட்டத்தில் நடந்த அரசியல் காய் நகர்த்தல்களையும் நுணுக்கமாக காண இருக்கிறோம். இந்த பதிவின் மூலம், மறவர் சமூகத்துக்கும் பள்ளர் சமூகத்துக்கும் தான் தென் தமிழகத்தில் சண்டையும் சச்சரவும் தொன்று தொட்டு இருந்து வருகிறது என்ற பொய் பிம்பம் உடையும்.

இனி திரு. முத்துராமலிங்கம் அவர்கள் பேசுகிறார்.



முதுகுளத்தூர் வட்டம், பேரையூரில், 28.6.1957 அன்று மாலை 7 மணியளவில் நடைபெற்ற மறவர்களின் கூட்டத்தில் முத்துராமலிங்கத் தேவர் ஆற்றிய உரை.

    பராசக்தியின் பிரதிபிம்பமாக வீற்றிருக்கும் தாய்க்குலமே! மனித சட்டை தாங்கிய உள்ளே தெய்வத்தை மறைத்து நிற்கும் தெய்வத் திருகுலமே! இன்று இந்த கூட்டம் கூட்டியதன் நோக்கம், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு இந்த பிராந்தியத்தில் ஒரு தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தல் அடிப்படையில் காங்கிரசை உற்பத்தி பண்ணிய அசல் காங்கிரஸ் தலைவர்களுக்கும் காங்கிரஸ் பிழைப்பு கிடைக்கிறது என்பதன் பிறகு உள்ளே நுழைந்த நகல் காங்கிரசு காரனுக்கும் நடந்த போராட்டம், அந்த போராட்டம். உண்மையில் வெள்ளைக்காரன் அளித்த சுதந்திரம் சுத்த சுதந்திரம் அல்ல என்று கருதுகிறவர்களுக்கும் அது பிழைப்புக்காக நாய் போல் பதவிக்கு வந்த மிதவாதிகளுக்கும் நடந்த ஒரு போராட்டம். ஒழுக்கத்தோடு வாழ வேண்டும் என்று சொல்லுகிற ஒரு கூட்டத்துக்கும் காந்தி வளர்த்த மகாசபைக்கு ஓட்டுப் போடுங்கள் என்று சொல்லுகிற அறிவுகெட்ட காங்கிரஸ்காரகளுக்கும் நடந்த போராட்டம். காந்திஜியின் வணக்கத்துக்கு உரியவர் இராமர் ராஜ்ஜியம் வேண்டும் என்று விரும்பினார்.ஆனால் கீமாயணம் நாடகம் (எம்.ஆர்) இராதா என்பவன் அவன் தாய் விபச்சாரியா,பதி விரதையா என்று தெரியாத தாசி மகன் லோகமாதாவாகிய சீதையை விபச்சாரி,இராமர் கூட்டி கொடுத்தார் என்று நாடகம் நடத்த, அதற்க்கு போலிஸ் பந்தோபஸ்து கொடுத்து நன்றாக பாருங்கள் என்று சொல்லுகிற அளவுக்கு ஒரு தறுதலை பிரதம மந்திரி இருந்தால், அவன் சார்பாக நின்ற ஒரு கூட்டத்துக்கும் தெய்வம் உண்டு என்று நினைத்த ஒரு கூட்டமான நமக்கும் நடந்த போட்டி. அந்த போட்டி விவசாய மக்கள் வாழ வேண்டும் என்று கருதுகிற உத்தம தியாகிகளுக்கும் விவசாயிகளைப் பகலில் திருடி கொள்ளையடிக்கும் கள்ள மார்க்கெட் வியாபாரிகளுக்கும் நடந்த போட்டியாகும். அந்த போட்டியானது நேர்மைக்கும் லஞ்சத்துக்கும் நடந்த போட்டியாகும். அந்த போட்டியில் அடியேன் இந்த பிராந்தியத்துக்கு வர முடியவில்லை. நீங்கள் இன்னது செய்ய வேண்டும் என்றும் கேட்கவில்லை.இருந்த போதிலும் சும்மா இருக்கவில்லை. தூங்கவில்லை. காங்கிரசை உற்பத்தி பண்ணி நேர்மையாக கண்ணீர் விட்டு வளர்த்து நல்ல நிலைக்குக் கொண்டு வந்தோம். அந்த காலத்தில் தண்ணீர் விட்டு உண்டாக்கவில்லை. போலீஸ்காரர்கள் வேகமாக அடிக்கிற பொழுது இரத்தம் வடித்துக் காத்தோம். எத்தனையோ பதிவிரதைகள் போலீஸ்காரர்களால் மானபங்கப் படுத்தப்பட்டார்கள். லாரியில் ஏற்றிக் கொண்டு போய் சேலையை அவிழ்த்து பெரிய பாவம் புரிந்தவன் முன்னாள் டி.எஸ்.பி.யாக இருந்து கடந்த ஐ.ஜி.யாக இருந்த தேவசகாயம் என்ற ஒரு நாடான். சாணான் என்பதற்காக ஐ.ஜி. வேலை கொடுத்தான் இன்னொரு சாணான். அந்த பெண்கள் சேலையை உரித்த காலத்தில் அங்கு போய் அந்த பெண்களுக்கு மேல் துண்டையும் எங்கள் ஆடையையும் கொடுத்து வந்தது பழைய சரித்திரம்.

    இந்த நிலையில் சிரமப்பட்டு வளர்த்த காங்கிரஸ் இன்றைக்கு என்னவாக இருக்கிறது என்று கேட்டால், கரையான் புத்தில் பாம்பு நுழைந்தது போல். அன்றைக்கு வேலை செய்யும் போது பல்லாயிரக்கணக்கான தொண்டர்கள் வேலை செய்தார்கள். அந்தத் தொண்டர்களில் சாதாரண முட்டாள் தொண்டன் தான் இன்றைய காமராஜ் நாடான். அன்று இருந்த நிலையில் இந்த நபருக்கு வோட்டர் ஆவதற்குக் கூட யோக்கிதை இல்லை. இப்போது இருக்கிற சட்டத்தைப் போல் வயது வந்தவர்களுக்கு வோட் அல்ல, சொத்து இருந்து வரி செலுத்துபவனுக்குத் தான் வோட், அது தான் சட்டம். அப்போது காமராசுக்குச் சொத்துக் கிடையாது. வரி செலுத்தவுமில்லை. அவனுக்கு வோட்டே கிடையாது. இவன் ஜாதியில் எல்லாரும் வியாபாரம் பண்ணுகிறான். இவனுக்கு ஒன்றும் கிடையாது (யாரும்) பெண்கூட கொடுக்கவில்லை. அந்த நேரத்தில் ஒரு வெள்ளாட்டை வாங்கி லைசன்ஸ் கட்டி தகரவில்லை போட்டு காமராஜ் கையில் கொடுத்து வோட்டராவதற்க்கு யோக்கிதையை உண்டாக்கினோம்.இந்த மாதிரி அரசியல் சூழ்நிலையில் தேசம் போய் கொண்டிருந்த வேகத்தில் ஒரு அரசாலும் பதவிக்கு வர முடிந்தது. எப்படி திருவிழாவுக்குப் போகிறவன் எல்லாம் சாமி கும்பிடப் போவது இல்லையோ, அதுபோல் காங்கிரசில் சேர்ந்தவன் எல்லாம் வெள்ளைக்காரனை அழிக்கப் போவதில்லை. மதுரை திருவிழாவுக்கு சாமி கும்பிடப் போகிறவர்களில் சிலர் வானவேடிக்கை பார்ப்பதற்காக போகிறான். சூத்தாட்டம் ஆடப் போகிறவனும் உண்டு. ஆண்கள் பெண்களைப் பார்க்கவும், பெண்கள் ஆண்களைப் பார்க்க போவதும் உண்டு. அங்கு போய் சினிமா பார்ப்போம். தூக்கம் வராமல் இருக்கும் என்று நினைக்கிறவனும் உண்டு. எதையும் வாங்கித் தின்னலாமா  என்றும் நினைக்கிற கூட்டம் உண்டு. இத்தனை முறையில் ஒதுங்கின கூட்டம் போக ஒரு சின்னக் கூட்டம் தெய்வத்தைப் பார்க்க பக்தியோடு போகும். அங்கே போன நேரத்திலும் வாங்க, வாங்க, சாமியைச் சட்னு கும்பிட்டுட்டுப் போகலாம் என்று போகிறவனும் உண்டு.

   ஆகவே, காங்கிரசில் சேர்ந்தவன் எல்லாரும் வெள்ளைக்காரனை அழிக்க சேரவில்லை. பெரும்பாலும் தங்களுக்கு ஒரு பிழைப்புக் கிடைக்கும், பதவி கிடைக்கும், தாங்கள் ஒரு மனிதன் ஆகலாம் என்று சேர்ந்தார்கள். வந்தவன் அவனவன் காரியம் முடிந்தவுடன் வெளியேறி விட்டான். பழைய கால சாஸ்திரம் சரித்திரம் அப்படித்தான். எத்தனையோ பேர் இராமாயணத்தில் சண்டைக்குப் போனார்கள். கடைசியாக அனுமார் உட்பட ஓடிப் போனார்கள். வீரத்தின் பேரால் நிற்க இராமர்,லட்சுமணர்கள். கடைசியில் நின்றது இராமன். பெரும் காரியங்கள் எல்லாம் அதற்க்கதற்க்குப் பிறந்தவர்களால் தான் செய்ய முடியும். ஆசை இருக்கலாம். இருந்தாலும் செய்ய முடியாது. எல்லாவற்றையும் விட உயிர் பெரியது. எவனும் இதை இழக்கத் தயாரில்லை. உயிரை இழக்க தயாராய் இருக்கணும். அந்த நிலை வரும்போது சாதாரண காலிப் பயல்கள்  தன்னாலே ஓடி விடுவான்.

    உதாரணத்துக்கு சொல்கிறேன். இந்த பிரதேசத்தில் இவ்வளவு பெரிய ஒரு கூட்டம் நடத்தக்கூடிய இடம் அல்ல இது. முதுகுளத்தூரில் போட்டால் தாலுகா தலைநகரம் நன்றாக இருக்கும். இந்த பிரதேச மக்களுக்கு அறிவில்லை. இங்கே குடி இருக்கிற சாணாணுக்கும் அறிவில்லை. இங்கே குடியிருக்கிற சாணான் நான் யார் என்று விளங்காமல் லைசன்ஸ் இல்லாத ஓட்டைத் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு ஏதோ சொன்னான் என்று தரத்தை இழந்து இந்தக் காலிப் பயல்களுக்காக இவ்வளவு பெரிதாக ஒரு கூட்டம் நம்மவர்கள் கூட்டுவது என்றால் வருந்துவதற்குரிய விசயமாகும். இதில் எந்த வித்தாரமும் கிடையாது.

    இந்த வேலுச்சாமி நாடான் முந்தாநாள் பள்ளர்கள் விரட்டியதைக் கண்டு அழுது ஓடிய பயல். கூரை வீடு வைத்திருந்தான். இன்று மாடி வீட்டில் இருக்க காமராஜ் அரசாங்கம் தான் காரணம். இந்தக் காலிப் பயல்களுக்காகக் சக்களத்திப் போராட்டத்துக்கு தயாராகக் கூடாது. அவனுடைய அறிவு எவ்வளவு மோசமோ அவ்வளவு மோசம் நம்முடைய அறிவு. அவன் நாய் உளறுகிற மாதிரி உளறுகிறான். இங்கு வேண்டுமென்றால், கம்பு, அரிவாள் கொண்டு வரலாம். அடியேன் பம்பாய்க்குப் போகும் போதே டில்லிக்கு போகும் போதோ நீங்கள் வருகிறீர்களா? இந்த காங்கிரஸ் அரசாங்கம் ஒரு தரம்கெட்ட ஒருவனைப் பெரிய மனிதனாக்கி இருக்கிறது. அவன் அவ்வளவு பெரிய மனிதன் அல்ல. அவன் தரங்கெட்டவன் சொன்னால் பெரிதாக்கலாமா? இந்தப் புத்தியை விட்டு விடுங்கள் தரத்துக்குத் தரம் சண்டை போடணும். ஒரு காலிப்பயலைப் பெரிய மனிதனாய் இழுத்து வைப்பது அவமானம். இந்த அறிவு இந்த பிராந்திய மக்களுக்கு வரவேணும்.

   இந்த நாடு எவ்வளவு தரம் கேட்டு இருக்கிறது. காலிப் பயலை மனிதனாக்கி இருக்கிறது. காமராஜ் ஆட்சி என்பதற்கு இதுதான் அடையாளம். அவன் பிதற்றியதைக் கண்டு நீங்கள் கூட்டம் போட்டது மடத்தனம். பேரையூரில் கூட்டம் போட முடியாது என்பதற்காக இவங்களைப் பெரிய மனிதனாக்கும் நினைப்பை இன்றுடன் மறந்து விடனும். எவனும் பேசலாம். வெள்ளைக் காரன் 30 வருசமாக முக்கிப் பார்த்து விட்டும் அந்த துப்பாக்கி பீரங்கிக்கு அசராத மனிதன். என் மீது இதுவரை போட்ட கேஸ்கள் 1927இல் இருந்து நாளது வரை ஓசியாக வக்கீல்கள் ஆஜரானது. வக்கீல்களுக்குப் பணம் கொடுத்தது போக 3 அணா காப்பி, இஸ்டாம்பு வாங்கியது மட்டும் ரூ.1,27,000. இத்தனை கேஸ் வெள்ளைக்காரன் பார்த்து முடியாது என்று ஒதுங்கினான். அப்படிப்பட்டவன் இங்கு ஒருவன் ஏதோ பேசினான் என்று கருதி இங்கு வருவது என்றால் கேவலம். இந்த குணம் வேண்டாம். அதற்க்கு மேல் காங்கிரஸ் அரசாங்கம் இந்த காலிகளை சின்னத்த் தனமாக போக விட்டால், ரகசியமாக ஆயுதங்கள், ரிவால்வர்கள், துப்பாக்கிகள் இதை வைத்துப் பெரிய காரியங்கள் நடத்தப் போவதாகவும் கேள்விப்ப் பட்டேன். இது வெட்கக் கேடான விஷயம். இலண்டனில் அமெரிக்காவில் இருக்கும் ஆயுதங்களை விடவா இந்தப் பேரையூரில் சாணான் ஆயுதம் வைத்திருக்கப் போகிறான்? இதைப் பொருட்படுத்தக் கூடாது. இது பெருமை என்று கருதினால், சிறுமையைக் காட்டுகிறது என்று சொல்லுகிறேன்.

    சாதரணமாக இந்த ஊருக்கு வர ஒத்துக் கொள்ளமாட்டேன். நான் வராமல் அலட்சியப் படுத்தினால் கோழை என்று பைத்தியக்காரத்தனமாக நினைப்பீர்கள் என்று நினைத்துத்தான் இந்த சாணான் ஊருக்கு வந்தது. இல்லையேல் இந்த சின்னப்பயல் ஊரை பெரிதாக கருதவில்லை. இந்தக் கூட்டம் பெரிய தலைநகரில் கூட்ட வேண்டும். இந்த கிராமத்தில் கூட்டியது உங்கள் கோழைத் தனத்தைக் காட்டுகிறது. நாய்கள் எத்தனையோ குலைக்கும். யானை திரும்பிப் பார்க்கக் கூடாது. உண்மையில் யானை திரும்பி பார்த்தால் நடுங்கிக் கழிஞ்சு செத்துவிடும். நாய், யானை மிதிக்க வேண்டியதில்லை. இந்த நிலைமையில் நீங்கள் இந்த மாதிரி குணத்தை விட்டு விடுங்கள். இன்றுடன் நாம் இருக்கும் நிலை வேறு, சக்தி வேறு. பின்னால் இருக்கிற ஆயுதம் வேறு, ஆண்டவன் அருள் வேறு.  இது தெரியாமல் நின்னால் மிகப் பெரிய தவறு இழைத்தவர்கள் ஆவோம். அணுகுண்டு சண்டை நடைபெறும் போது வேல் கம்பு என்ன காப்பாற்றும்?

   இன்று நேதாஜி ஒரு படை ஆயுதத்துடன் போகிறார். அவரை விட ஆபத்தான இடத்தில் நான் போர் புரிய இருக்கிறேன். ஆனால் என்னிடம் ஒரு ஆயுதமும் கிடையாது. நேதாஜி செய்யக் கூடிய காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறேன். இந்த நிலைமையில் இருக்கும் போது சர்க்கார் பயமுறுத்திக் கொண்டு ஏதோ பாச்சல் எல்லாம் காட்டுகிறான். உங்கள் ஆடம்பரத்தால் இந்தக் காலிப்பயல்கலுக்குத் தரத்தை உண்டாக்க கூடாது. காங்கிரஸ் இவ்வளவு கேவலமான நிலைமைக்குப் போய் விட்டதால் அதை சீர்படுத்தி ஒழுங்குபடுத்த இந்தியாவில் ஒரு எதிர்ப்பு அணி அமைத்தோம். மறுநாள் தமிழ் நாட்டில் எதிர்ப்பு அணி அமைத்துப் பேசினேன். அப்படி வந்த காலத்தில் சென்னை கடற்க்கரை முதல் கன்னியாகுமரி வரை சுற்றுப் பயணம் செய்தேன். அப்படிச் செய்யவில்லை என்றால் தமிழ் நாட்டில் ஒரு எதிர்ப்பு அணியை அமைத்திருக்க முடியாது. இராஜகோபாலாச்சாரி கூட முயன்று பலிதம் இல்லை என்று விட்ட இடத்தில் தொட்டோம். 10 நாளைக்குள் எதிர் கட்சியை அமைத்தோம்.

    இங்கே சுற்றுப் பயணத்தின் போது வர சந்தப்பமில்லை என்றாலும் ஊர்ப் பிள்ளையை வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும் என்று இந்தப் பிராந்தியத்தில் உள்ள அத்தனை பெரும் ஒரே உணர்ச்சியுடன் நின்றார்கள். முதுகுளத்தூர் சென்னை சட்டசபைத் தொகுதி சின்னது. தெரிந்த தொகுதி, பார்லிமென்ட் தொகுதி இதோடு ஒப்பிட்டுப் பார்த்தால், இதில் ஆயிரக்கணக்கான ஊர்கள். சாதரணமாக எல்லை பல ஜில்லாக்கள். கிழக்கே கடல், கீழக்கரை. மேற்க்கே சதுரகிரி மலை, வத்திராயிருப்பு வரை. வடக்கே மதுரைப் பக்கம் ஆவியூரைத் தொட்டுக் கொண்டிருக்கிறது. தெற்க்கே தூத்துக்குடி பக்கம் குறுக்குச் சாலை வரை. எப்படியாவது அடியேனைத் தோற்கடிக்க வேண்டுமென்று தொகுதி பிரிக்கப்பட்டது. அத்துடன் காமராஜ் கள்ள நோட்டு அடித்த பணமும், வருமான வரியிலிருந்து தப்ப வியாபாரிகள் கொடுத்த லஞ்சமும், மில் வியாபார்கள் கொடுத்த பணமும்,நன்கொடை வசூலும், காங்கிரஸ் சேமநிதி, தேர்தல் நிதியிலிருந்தும் இவையெல்லாம் சேர்த்து அந்த தொகுதியில் அடியேனைத் தோற்கடிக்க செலவழிக்கப்பட்ட தொகை ரூ.2,28,700. இவ்வளவு சிரமப்பட்டும் கூட மனிதப் பிரயத்தனம் பலிக்கவில்லை. ஆண்டவன் சம்மதம் பலித்தது. ஜனங்களுடைய வெற்றி. குறைந்த பணம் கூட செலவழிக்கவில்லை. வால் போஸ்டர் ஒட்டவில்லை. எனக்கு ஓட்டுப் போடு என்று கேட்கவில்லை. எல்லாரும் ஏகோபித்து ஓட்டுப் போட்டு வெற்றி தேடித் தந்தார்கள். மனித சக்தி அல்ல. ஆடம்பரம் அல்ல. ஒரு பெரிய சக்தி வேலை செய்கிறது. இரண்டு தொகுதியிலும் வெற்றி. அதைக் கண்டு ஆங்கில அரசாங்கம் அதிர்ச்சி அடைகிறது. டில்லி சர்க்கார் அதிர்ச்சி அடைகிறது. உலகமே பரிசீலனை செய்தது. இதிலிருந்து மனிதனுக்கு அப்பாற்ப்பட்ட சக்தி ஒன்று உண்டு என்று தெரிகிறது. இரண்டு தொகுதியிலும் அடியேனுக்கு வெற்றி கிடைத்தது.

   நீண்ட காலமாக எதிர்பார்த்த மூன்றாவது உலக மகா உத்தம் பிரம்மாண்டமான யுத்தம் வர இருக்கிறது. இது உத்தம யோகிகளுக்குத்த் தான் தெரியும். காந்தி தான் சுடப்பட்டு சாவோம் என்று அறியாமல் 150 வயது வரை இருப்பேன் என்று சொன்னார். அந்த முழங்காலுக்கு மேல் வேட்டி கட்டிய நபரை மகாத்மா என்று கொண்டாடினான். அந்த நபர் எதையும் அடைந்தவர் அல்ல. யோகமோ ஞானமோ கிடையாது. இதை பின்னால் சரித்திரம் காட்டப் போகிறது. எனக்குக் காந்தியின் அறிவும், ரகசியமும் தெரியும். இருக்கிறவன் எல்லாம் இவரை மகாத்மா என்றான். இந்த நபர் துராத்மா. சீக்கிரம் சுடுபட்டு சாவான் என்று நான் சிறையில் இருந்து விடுபட்டு வந்தவுடன் சொன்னேன். அப்போது என்னமோ இந்த ஆள் கிறுக்கு என்று நினைத்தார்கள். யதார்த்தவாதி பொது ஜன விரோதி. உத்தமர்களைப் புரிந்து கொள்ளமாட்டார்கள். ரொம்ப வேண்டியவர்கள் இந்த வார்த்தையச் சொல்லாதீர்கள் என்றார்கள். கோபத்தில் சொல்லவில்லை. ஒருவரின் லபிதத்தை எனக்குத் தெரியும். சொன்னேன் என்றேன். அதே மாதிரி நடந்த பிறகு என்னைக் கண்டவுடன் தலை குனிந்து கும்பிட்டு விட்டுப் போவான். சுடுபட்டுச் சாவான் என்று சொன்னேன். நடக்கப் போகிற காரியம் எனக்குத் தெரியும். இது விளையாட்டா? எவனால் சொல்ல முடியும்? (குறிப்பு: காந்தியை சுட்டவர்களுக்கு தமிழகத்தில் வரவேற்ப்பு அளித்து, பொன்முடிப்பை முத்துராமலிங்கத் தேவர், அவர்களுக்கு பின்பு வழங்கினார்)

    முன்பு எனக்கு ஜெயிலில் இருந்து வந்தவுடன் ஒரு வரவேற்ப்பு பத்திரம் கொடுத்தான். அப்போது கோகலே ஹாலில் மீட்டிங் நடந்தது. அதற்க்கு கிரி தலைமை வகித்தார். அப்போது நான் சொன்னேன். 1857இல் ஒரு வீரப்புரட்சி நடந்தது. தண்டவாளம் ரெயில்வே எஞ்சின்கள் உருண்டது. அதைப் போல் மீண்டும் செய்யத் தயாராய் இருக்கிறோம் என்றேன். கிரி தலைமை வகித்தவர் பயந்து போய் விட்டார். இருக்கிற கூட்டமெல்லாம் பயந்து ஓடியது. ஆனால் ரோட்டில் நின்று கேட்கிறான். சி.ஐ.டி ரிப்போர்ட்டர் மட்டும் ஒழுங்காக எழுதுகிறான். என்னை அரெஸ்ட் பண்ணப் போகிறான் என்று பார்க்கிறான். காங்கிரஸ்காரன் விபரமில்லாதவன். இம்மாதிரியான புரட்சி மீண்டும் நடத்துவோம். ஒரு யுத்தம் நடந்தது அதற்குப் பின் தற்காலிக ஓய்வு.

    பொருளாதார நிலைமை ஜெர்மனியில் சீர்கேடான நிலைமை. இப்படி ஒவ்வொரு நாட்டிலும். ஆகவே, மீண்டும் ராணுவப் புரட்சி ஏற்ப்படப் போகின்றது என்றேன். உடனே என் பெயரில் 187 செக்சன்படி கேஸ் போட்டான் சர்க்கரை மீற ஜனங்களைத் தூண்டுகிறான் என்று. கேஸ் நடந்து கொண்டிருக்கும் பொழுதே வாபஸ் வாங்கு என்று உத்தரவு போட்டான். இதை வெள்ளைக் காரன் செய்தான். அப்படி இருக்கும்போது இங்கு இருக்கிற எச்சில் பீடி குடித்தவன், கீரை விற்றவன், பேரீச்சம்பழம் விற்றவன் பதவியில் இருக்கிறான். என்ன பண்ணுகிறது என்று பார்க்கிறான். அந்த நினைவுகள் வந்தால் மந்திரிகள் அவமானப்படுகிறான். காங்கிரஸ்காரனும் அவமானப்படுகிறான். அதிகாரிகளும் பயப்படுகிறான். என்னடா இந்த மனிதனில் நிலை என்ன? பெரிய ஆட்களே பயப்படுகிறார்களே, இழிவாகப் பேசுகிறான். கவர்ன்மெண்ட் ஒன்னும் பண்ணவில்லை என்று உண்மை தெரிந்தாலும் சனங்களை ஏமாற்ற நினைக்கிறான். இது சனங்கள் நினைக்கிறதில்லை. இது எப்படி இருக்கு என்றால், மேய்கிற நாட்டை நக்குற மாடு கெடுக்கிற மாதிரி.

    இந்த தேசத்தின் ரகசியத்தை உலக ரகசியத்தை யாரும் கண்டு கொள்ள முடியாது. தெய்வத்தைப் புரிந்திருப்பவர்கள் அவரவர்கள் லபிதம் என்ன என்பதைச் சொல்ல முடியும். இனி மேல் உலகம் என்ன ஆகப் போகிறது என்பது எனக்குத் தெரியும். அடியேன் யார் என்பது வெள்ளைக் காரனுக்குத் தெரியும். இல்லையேல் ஒருவருக்கொருவர் தனிப்பட்ட நபருக்குள் ஆயுதப் பிரயோகம் நடைபெற்றிருக்கும். வெள்ளைக்காரன், அமெரிக்கன் அரசியல், பண்டித நேரு அரசியல் தலைமைக்கு எள்ளளவும் குறைந்ததல்ல.

    சாதாரண விபரங்கள் தெரியாமல், மந்திரிகள் சில்லரைத்தன்மையில் தேவர், போலிஸ் துப்பாக்கி சோளத்தட்டை என்று சொன்னான். நான் புதுக்குண்டு கொடுத்திருக்கிறேன் என்று பேசியிருக்கிறேன். இந்தப் போலிஸ் மந்திரிக்கு துப்பாக்கி சுடத் தெரியுமா? போகும்போது, இந்தப் போலிஸ் மந்திரி இரவில் ஒன்றுக்கு இருக்க பொம்பளையை உசுப்பித்தான் செல்லுவான். அவ்வளவு பயப்படுவான். பேடி. இவன் புதுக்குண்டு என்ன செய்ய முடியும்? காங்கிரஸ்காரன் சொல்லும்போது சிரிப்பாக இருக்கு ரிசர்வ் லாரியைக் கண்டவுடன் ஓடுவான் காமராஜ் ஆள். மறைச்சு வச்ச பிறகு என்னைத் தூங்கவிடவில்லை. ஆகவே இந்த மந்திரிகள் எல்லாம் ஒன்றும் செய்துவிட முடியாது. அவர்களுக்கு இருக்கிற துப்பாக்கிக் குண்டுகளை என்மீது காட்ட நினைத்தால், அவன் வாங்கி இருக்கிற குண்டு அவனைத்தான் திருப்பிச் சுடும். அந்த நேரத்துக்கு காத்து கொண்டிருக்கிறேன். அதுவரை வாங்குகிற சம்பளத்துக்கு உட்கார்ந்து கொண்டிருக்கிறான்.

    4 அணா, 8 அணா லஞ்சம் வாங்குகிற போலீஸ்காரனைப் பற்றிக் கவலையில்லை. வீரன் எப்பவும் சல்லித்தனத்துக்குப் போகமாட்டான். விபரம் இல்லாத பயல் ஒருவன் முதுகுளத்தூரில் எஸ்.ஐ.ஆக இருப்பதாக கேள்விப்பட்டேன். அவன் பாரபட்சமில்லாமல் நடக்க வேண்டிய ஒரு அதிகாரி. 2 பேரை ஜார்ஜ் பண்ணினால் ஒருவனை விட்டு விடுவது. ஒருவன் மேல் கேஸ் போடுவது. இந்த லட்சணத்தில் பிராமணன் வேறு. ஆரியர்களை ஒழிக்கணும் என்று சொல்லுகிற நாஸ்த்திக கூட்டத்துக்கு ஆதரவு கொடுக்கிற சாணானை விழுந்து, கும்பிட்டுக் கொண்டிருக்கிறான். இவனெல்லாம் ஒரு பிராமணன் என்று நினைத்துக் கொள்கிறான். ரிவால்வரை சோப்பில் வைத்துக் கொண்டு நிமிர்ந்து நடந்தால் கழிஞ்சு விடுவான் என்று நினைக்கிறேன். வெள்ளைக்காரன துப்பாக்கி பீரங்கியே ஒன்றும் செய்ய முடியவில்லை. நீ பருப்பு தின்று விட்டு எழுந்திருந்து குசு விடுகிறவன் என்ன செய்ய முடியும்? என்ன சொல்லுகிறேன் என்று கேட்டால், சர்க்கார் உத்தியோகஸ்த்தர்கள் ரொம்பவும் தரக் கேடாகப் போகிறான். உன்னுடைய ஆடம்பரத்தை யாரிடம் வைத்துக் கொள்ளனும்? மாட்டைத் திருடியவன், கொள்ளை அடிச்சவன், கொலை செய்தவனிடம் வைத்துக் கொள்ளனும். திருடன் எஜமான் என்று சொல்லுகிறான். நேற்று வெள்ளைக் காரனுக்கு வேலை செய்தாய். சர்க்கார் மாறிய பொழுது இந்த எச்சிப்ப் பீடி குடிச்சவன் காமராஜ் கீழே வேலை செய்கிறாய். அவன் உன்னை காப்பாற்ற முடியுமா? வேட்டுச் சத்தம் கேட்க்கும் போதே அவனவன் மிரண்டு எங்கு ஒடப்போகிறானோ? இதையெல்லாம் இங்கு இருக்கிற எஸ்.ஐ. சர்க்கிள் இன்ஸ்பெக்டர் புரிந்தால் போதும். இதை மறந்து விடுகிறான். போறான் சின்னப்பயல் கவலையில்லை.

    ஜனங்களுக்கு இருக்கிற உணர்ச்சி நிச்சயம் காங்கிரஸ் தோற்றுப் போகும் என்று தெரியும். ஆட்டையில் தோற்றுப் போகிறவன் கள்ள ஆட்டை அடுவான். கலகம் உண்டாக்கி எப்படியோ எலக்சனை கெடுக்கணும் என்று பார்க்கிறான். இந்த முட்டாள் தனம் வேண்டாம். யாருக்கும் பைத்தியம் இல்லை. எவனும் பேசலாம் வாய்ச்சவடால். இங்கிருக்கிற பயல் ரிவால்வர் கொண்டு வரட்டும். ரிவால்வரைக் கீழே போட்டு ஒன்னுக்கு போவான். வீரத்தாய் வயிற்றில் பிறந்திருக்க வேண்டும். பணத்துக்கு வராது வீரம். எவன் எது பேசினாலும் சின்னத்தனமாக காவாலித் தனமாக நடந்தாலும் கலகத்துக்கு தயாராகக் கூடாது. மிதமிஞ்சியே சர்க்கார் போகிறது. நடக்கிறது என்றால் நீங்கள் எனக்கு தகவல் கொடுங்கள். அடியேன் இங்கு தான் இருப்பேன். நான் நேரடியாக வந்து எந்தக் காரியத்தையும் செய்வேன். ஒழுங்கு தவறி துப்பாக்கியை மந்திரி காட்ட நினைத்தால் நான் பார்த்துக் கொள்ளுகிறேன். நீங்கள் பார்க்கக் கூடாது. இந்த நிலைமையில் நீங்கள் நடந்து கொள்ள வேண்டுமென்று உங்களுக்குச் சொல்ல கடமைபட்டிருக்கிறேன்.

    காங்கிரஸ் சர்க்கார் மாட்டுப் பெட்டியைக் காட்டுகிறது. விவசாயிகளுக்காக இருக்கிற பெட்டி என்று இரண்டு காளைகளைப் பார்த்தவுடன் வண்டி அடிக்கிற மாடு உழைக்கிற மாடு என்று நினைக்கிறான். பாவம் விவசாயி. இந்த 10 வருஷ காலத்தில், வெள்ளைக்காரன் போனால் பாலும், தேனும் ஓடும் என்றான். பாவிகள் வந்த பிறகு பச்சைத் தண்ணீர் ஓடி இருக்கிறதா? தெருக்கோடியில் எச்சில் பீடியை எடுக்கிறவன் சிம்மாசனத்துக்கு வந்தால் எப்படி மழை பெய்யும்? இராஜ லட்சணம் இல்லை. சதாரத்தில் உட்காருகிற மாதிரி மந்திரிகள் எல்லாம் குண்டியைத் திருப்பி கொண்டு சிம்மாசனத்தில் உட்கார்ந்த்திருக்கிறான். காங்கிரஸ் மந்திரிகள் லட்சணம் இவ்வளவு தான். பழைய பிளாக் மார்கேட்காரன், எச்சில் பீடி குடிச்சவன் இந்த நிலைமையில் இருக்கும் போது தரித்திரம் நம்ம விட்டு நீங்கவில்லை.

    10 வருசத்தில் பார்க்கிறோம். விவசாயிகள் வாழ்கிற பிராந்தியம் கூரை வீடு குட்டிச்சுவராகி இருக்கிறது. இன்னும் தரை மட்டமாகி விடும் இந்த சண்டாள ஆட்சியில். அதே நேரத்தில் விருதுநகர், கமுதி,அருப்புக் கோட்டை எல்லாம் சாணான் பகுதி. இந்தப் பேரையூரில் பொம்பளை வெளிக்கு இருக்கிற இடமெல்லாம் ஏராளமான கட்டிடங்கள். இவங்களுக்குச் சொத்து எங்கிருந்து வந்தது? புதையல் கிடைத்ததா? அது தான் மாட்டுப் பெட்டியின் ரகசியம். மாட்டுப் பெட்டியைக் காட்டியவுடன் விவசாயிகள் மயங்கிவிடுகிறான். நமது விவசாயிகள் எவ்வளவோ கஷ்டப்பட்டு பருத்தி பயிரிட்டு உற்பத்தி பண்ணுகிறார்கள். நமது பெண் பிள்ளைகள் உப்பு மண் பொரிய சிரமப்பட்டு பருத்தியை எடுத்து சேர்த்து வைக்கிறார்கள். சேர்த்தவுடன் விலையை எதிர்பார்க்கிறார்கள். கொஞ்சம் சம்பலாக இருக்கு என்று ஒருவன் சொல்லுகிறான். நாம் உற்பத்தி பண்ணியும் இன்ன விலைக்கு விற்க வேண்டும் என்ற நியதி உரிமை நமக்கு இல்லை. விவசாயிகள் உற்பத்தி பண்ணிய பருத்திக்கு விலை நிர்ணயம் பண்ண சண்டாள மாட்டுப் பெட்டி சர்க்காருக்கு யோக்யதை இல்லை.

    புரோக்கர் வருகிறான். விருதுநகர் மார்க்கெட் நிலவரம் என்று படிக்கிறான். விலை போடுகிறான். விருது நகர் சாணான் உழுதானா? எந்தச் சாணாப் பொம்பளை பருத்தி எடுத்தாள்? லட்சோபலட்சம் விவசாயிகள் உழைப்பது. விலை வைத்து சாப்பிடுவது விருதுநகர் சாணான். அதற்க்கு டாபர் மாமா வேலை பார்க்கிறது மாட்டுப் பெட்டி சர்க்கார். இதை நினைத்தால் உள்ளம் கொதிக்கிறது. இதே போல் மிளகாயும் பொதி என்ன விலை? விருதுநகர் மார்க்கெட் நிலவரத்தை பார்க்கணும். இது போல்தான் எல்லா தானியங்களும் , நாம் கொடுக்கிற பொழுது விலை வேறு. வாங்கும் விலை வேறு  அப்படியானால் விருதுநகர் நாடார் கூட்டம் ஏன் கட்டிடம் கட்டமாட்டான்?. இந்த நிலைமையில் தான் எல்லா சானாணும், திடீரெண்டு கதர் சட்டை போட்டுக் கொண்டு கத்துகிறான். அவங்களில் எவனும் தியாக பரம்பரையில் பிறந்தவன் கிடையாது. முந்தாநாள் வேல்சாமி நாடான் இருந்த நிலைமை தெரியுதா? இப்போது எப்படி பணக்காரன் ஆனான்?

    ஜமீந்தார் முறை ஒழிக்கப்படும் என்று தெரியும். அதற்க்கு அந்தக் காலத்திலேயே ராமநாதபுரம் ராஜாவுடன் போராடினேன். அப்போது என் தகப்பான் 'சொந்தக்காரனையே எதிர்க்கலாமா?' என்று கேட்டார். விவசாயிகள் அத்தனை பேரும் ஓட்டாண்டியாவது, விருதுநகர் சாணான் கொழுப்பது. இதற்க்கு கைக்கூலியாக இதர சாதிப் பயல்கள் காங்கிரசை பாருங்கள் என்று சொன்னால் என்ன அர்த்தம்? விவசாயிகள் உற்பத்தி பண்ணுகிற விலை பொருள்களுக்கு அவனே விலை வைக்க வேண்டும். இதற்க்கு ஒரு கமிட்டி நியமிக்கப்பட்டது. அதை எதிர்த்து விருதுநகர் நாடான் ஹைகோர்ட்டில் வழக்குப் போட்டான். அந்த கேஸ் தள்ளுபடியாச்சு. இப்பொழுது சுப்ரீம் கோர்ட்டுக்கு அப்பீல் போயிருக்கிறான். சிமெண்ட்டுக்கு, கோதுமைக்கு விலை வைக்கிறது எல்லாம் வடநாட்டுக்காரன், இங்கே வியாபாரிகள் எல்லாம் காமராஜை வைத்துக் கொண்டு கொள்ளையடிக்கிறான். இதற்காகத் தான் எல்லாப் பயல்களும் கதர் சட்டையைப் போடுகிறான். தேசாபிமானத்தால் அல்ல. அந்த பரம்பரையைச் சேர்ந்தவன் அல்ல. இந்த மாதிரி கைக்கூலிகள் பேசுவதைப் பற்றி பயப்பட வேண்டாம். முன் கோபத்தில் கலகம் செய்ய வேண்டாம்.

    வருகிற திங்கட்கிழமை, நமக்கு கொடுத்திருப்பது யானைப் பெட்டி. முன்பு சிங்கம், இப்போது சந்திரபால் என்ற நாடானையும் சிங்கச் சின்னம் கேட்கச் செய்து அதற்க்கு ஒரு சீட்டுப் போட்டான். நேர்மையானவன் என்றால் பெற்றவனைத் தான் தகப்பன் என்பான். எவன் எவன் பணக்காரனோ அவன் எல்லாம் அப்பன் என்கிறான். காங்கிரஸ்காரன் விபச்சாரப் புத்தியில் இறங்கி நம்முடைய அடையாளத்தைக் கேட்கச் சொன்னான். சீட்டுப் போட்டான். யானைப் பெட்டி விழுந்தது. முன்னால் யானைப் பெட்டி வைத்து பெருமாள் போட்டியிடவில்லையா? ஒரு சீட்டுத் தான் கொடுப்பார்கள். ஒழுங்காகப் போய் ஆண்டவனைப் பிராய்தித்து  இந்த நாடு விடுதலையடைய,விவசாய மக்கள் முன்னேற, வியாபார்கள் கள்ள மார்க்கெட் காரன் சூழ்ச்சியை முறியடிக்க ஒரே முகமாக அந்த காரியத்தை செய்து முடிக்க வேண்டும். யானைப் பெட்டியில் வாட் செய்ய வேண்டும். இந்த நாட்டில் என்னதான் பேசினாலும் நாடானிடம் இருக்கிற ஒற்றுமை புத்தி உங்களுக்கு வர இன்னும் 100 வருஷம் ஆகும் என்று சொல்லலாம். நமது சாதிக்காரன் தேர்தல் என்றால் ஒரு காசு கூட கையில் எடுத்து கொண்டு வருவதில்லை. பெரிய பணக்காரர்கள் உட்பட தேர்தல் சாதாரணமா? சினிமாவை விடச் சின்னதா? அத்தனை பேரும் பிச்சைக் காரரா? தேர்தளுக்கேன்று 5ரூ  கொண்டு வந்தால் என்ன? இந்த நினைவு உங்களுக்கு வந்தால் சாணான் உங்களை நிமிர்ந்து கூடப் பார்க்க மாட்டான். வெட்டிக் காரியத்துக்கு போனால் 15 ரூ செலவளிக்க்றாய். ஆனால் சங்கத்துக்கு வரி கொடுக்க மாட்டான். அவன் சாதிக்காரன் தேர்தலுக்கு நிற்கிறான் என்றால் ஒவ்வொரு நாடானும் 10 ரூபாயில் இருந்து ரூ.20 வரை கொண்டு வந்து செலவழிக்கிறான். அவன் சாதி வாழுமா? உன் சாதி வாழுமா?

    நம்ம சாதிக்காரன் ஓட்டுப் போட வந்து விட்டு காபி இல்லையா, மிக்சர் இல்லையா? அவன் கொடுக்கிறான் என்று கேட்கிறான். விளங்குமா இந்த நாடு? அவனவன் தன் தகுதிக்குத் தக்கவாறு பணம் கொண்டு வந்தால் எவ்வளவு பணம் சேரும். எவ்வளவு வேலை செய்யலாம்! இம்மாதிரி வேலை செய்வதைப் பார்த்தால் இவங்களெல்லாம் பேரையூரை விட்டு ஓடி விடுவான். சினிமாவுக்குச் செலவழிக்கிறாய். முளைப்பாரி பார்க்க செலவு பண்ணுகிறாய். மாடு விரட்டுப் பார்க்க செலவு பண்ணுகிறாய். ஆனால் இந்த கூட்டத்தைப் போட்ட நீங்கள் இந்த ஒரு குணத்தைப் பெறுங்கள். வசதியுள்ளவன் 5,10 செலவு செய்யட்டும். இந்த குணத்தையும், அறிவையும் வைத்துக் கொண்டு காரியம் செய்தால் யானைப்பெட்டி நிரம்பும். வருகிற மூன்றாவது மகா யுத்தத்தில் முருகன் கிருபையால் வருகிற கந்த சஷ்டிக்குள் உண்மையான சுதந்திரம் இந்த நாட்டுக்கு வரும் என்று தெரிவித்துக் கொள்ளுகிறேன். அத்துடன் செய்து முடிக்க அறிவு அருள், ஆண்டவன் அருள வேண்டுமென்று கேட்டுக் கொண்டு விடை பெற்றுக் கொள்கிறேன்.

Monday, June 17, 2013

தமிழ் தேசிய சிக்கல்: ஒரு விரிந்த பார்வை





"இந்த புத்தகத்தில் சொல்லப்பட்டுள்ள தகவல்களை ஆய்வாளர்கள் மத்தியில் மறுக்கும் அறிஞர்களுக்கு ரூ.10 லட்சம் பரிசு."




இது வரை வெளிவந்து இருக்கும் எந்த வரலாற்று புத்தக ஆசிரியரும், இப்படி நேரடியாக விவாதத்துக்கு அறைகூவல் விடுத்தது இல்லை. அந்த புத்தகம் சமீபத்தில் தமிழக அரசால் தடை செய்யப்பட்டதாக சொல்லப்படும் 'மீண்டெழும் பாண்டியர் வரலாறு' என்ற 'குடிமரபியல் ஆய்வு நூல்' புத்தகம் ஆகும். தடைக்கு காரணமாக, "சாதி மோதல்களை தூண்டும், மற்ற சாதி ஆட்களை கொச்சை படுத்தி எழுதப்பட்டு உள்ளது, பொய் தகவல்கள்" என்று பொத்தாம் பொதுவாக காரங்கள் சொல்லப்பட்டு உள்ளன. இவை உண்மையான காரணங்களா, வேறு ஏதும் உள்நோக்கம் உண்டா என்பதை நாம் விரிவாக காணும் முன்பு, இது சார்ந்த வேறு சில விசயங்களை அலசி ஆய்ந்து விட்டு, தொடர்வோம்.

திராவிட எதிர்ப்பு நிலை
* 'இனி திராவிடத்தை எதிர்ப்பதே என் வாழ் நாள் நோக்கம்' என்று முழங்கியவர் மருத்துவர் ராமதாஸ் அவர்கள்.(பொறுப்பான ராமதாஸ் அவர்களின், உணர்ச்சி வயப்படும் அரசியலில் எங்களுக்கு உடன்பாடு இல்லை.) அவரின் தற்போதைய அரசியல் நெருக்கடிக்கு உண்மையான காரணம் 'அவரின் சாதி வெறி' என்று நம்ப வைக்கபட்டாலும், அதன் உண்மையான காரணம் அவரின் திராவிட எதிர்ப்பு நிலையே. இது இன்றைய அரசியலை ஆய்ந்து நோக்கும் அனைவரும் அறிந்ததே. இது பலகாலம் திட்டமிடப்பட்டு இன்று காத்திருந்து வீழ்த்தப்பட்டு உள்ளார் திரு.ராமதாஸ் அவர்கள்.
"நாங்கள் தோற்றாலும், ராமதாஸ் அவர்களை அவர்களின் சொந்த தொகிதியில் ஒரு இடத்தில் கூட வெற்றி பெற விடாமல் வீழ்த்தியதை தான் திமுக தனது வெற்றியாக நினைக்கிறது" என்று மு.க ஸ்டாலின் கடந்த தேர்தலின் போது அளித்த பேட்டியே அதற்க்கு சாட்சி.

* இதே திராவிட எதிர்ப்பு நிலையில், அதனை மைய்யப்படுத்தி, அதை வரலாற்று தரவுகளுடன் சுமார் 7 வருட ஆய்வுக்கு பின்பு புத்தகமாக எழுதியவர் தான் திரு.செந்தில் மள்ளர். 'நாடார் தான் மூவேந்தரின் வாரிசு' என்று அதிமுக அரசு அறிவித்தபோது, 'வரலாறு தெரியாத முதல்வர்' என்று பகிரங்கமாக மறுத்த ஒரே நபர் செந்தில் மள்ளரே ஆவார்.
(Read: http://mallarchives.blogspot.in/2012/12/1.html).

இந்த புத்தகத்துக்கு கீழ் கண்ட திராவிட எதிர்ப்பு அறிஞர்கள் அணிந்துரை வழங்கியுள்ளனர். மேலும், இவர்கள் யாரும் பள்ளர் கிடையாது.
* 'நாம் தமிழர்' சீமான்
* முனைவர் அருகோ
* அறிவர் குணா
* தன்மாணன்
* புதுக்கோட்டை பாவாணர்
* புலவர் காசி ஆனந்தன்
அரசு சொல்வது போல உப்பு சப்பில்லாத 'சாதி மோதல், பொது அமைதிக்கு குந்தகம்' போன்றவை தான் உண்மையான காரணம் இல்லை என்பது இப்போது புரிந்திருக்கும். மேலும், சதாசிவ பண்டாரத்தார் எழுதிய 'சோழர் வரலாறு' புத்தகத்தில் 'வன்னியரை' பற்றி குறிப்பிட்டு எழுதி உள்ளார். ஆனால் அது போன்ற எந்த வரலாற்று புத்தகமும் தடை செய்யப்படவில்லை என்பதை இங்கே கவனத்தில் கொள்ள வேண்டும்.

அந்த புத்தகத்தில் தமிழ் சாதிகளான முக்குலத்தோர், பிள்ளை போன்ற சாதிகளை பற்றி சர்ச்சைக்குரிய பதிவுகள் இருப்பது உண்மை. ஆனால் அவை யாவும் புத்தகத்தின் ஆசிரியர் கூறிய தகவல்கள் அல்ல என்பதும், அந்த அந்த சமூக ஆட்கள் எழுதி வைத்த தகவல்களை தகுந்த மேற்கோளுடன் எடுத்து விவரித்திருந்தார் என்பதும் புத்தகத்துக்கு அணிந்துரை அளித்த அனைவருக்கும் தெரியும். அப்படி குறிப்பிட்டது மட்டும் சரியா,தவறா என்ற ஆய்வுக்கு நாம் செல்லவில்லை. ஆனால் 'இன்ன இன்ன தகவல்கள் பொய், இன்ன இன்ன பக்கங்களை நீக்குக' என்று எந்த முன் அறிவிப்பும் கொடுக்காமல், ஒட்டு மொத்தமாக ஒரு 'குடிமரபியல் ஆய்வு நூலை' தடை செய்யும் போதே, அந்த புத்தகத்தில் வேறு ஏதோ விஷயம் இருக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அந்த புத்தகத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது?

"பள்ளரே பாண்டியர், அவர்களே தமிழ் பகைவர்களான நாயக்கர்களால் வீழ்த்தப்பட்டு உள்ளனர், அந்த நாயக்கர்களின் வழித் தோன்றல்கள் தான் இன்றும் திராவிட மாயைக்குள் தமிழர்களை சிக்க வைத்து, முள்ளி வாய்க்கால் வரை இந்த இனத்தை சீரழித்து உள்ளனர்." --- இது தான் அந்த புத்தகத்தின் ஒட்டு மொத்த சாராம்சம்.

உண்மையில் இந்த புத்தகம் யாருக்கு கலக்கத்தை தர வேண்டும்? நாயக்கர்களுக்கும், திராவிடருக்கும் தானே? ஆனால், இங்கே கலக்கம் அடைவது யார் தெரியுமா...? விஷயம் தெரியாத, ஒரு சில 'முக்குலத்தோர்' நண்பர்களும், அமைப்புகளும் தான். ஏன் இவர்களுக்கு இந்த மனநிலை? என்ன காரணம்? இதற்க்கு பதிலும் அந்த புத்தகத்திலேயே உள்ளது. அந்த முக்குலத்து நண்பர்லின் கூற்றுப்படி 'தாங்கள் தான் பாண்டியர் மற்றும் மூவேந்தர் வம்சம்' என்பதும், கீழ்நிலை சமூகமாக அவர்கள் கருதும் 'பள்ளர்கள்' அல்ல என்பது தான் அவர்கள் வைக்கும் வாதம். இதை மேலோட்டமாகவே நாம் விமர்சனம் செய்வோம்.

> 'பாண்டியன் குலநாசினி' என்றும், 'வைகை வளநாடன் கொட்டமடக்கி'  என்றெல்லாம் பட்டம் தரித்த மறவர் சமூக மக்கள் தான் 'பாண்டியர்கள்' என்று ஒரு பேச்சுக்கு வைத்து கொள்வோம். 'பாண்டியன்' வீழ்த்தப்பட்டது 'நாயக்கர்களால்' தான் என்பது வரலாறு. அப்படி என்றால், கடந்த 500 வருடங்களாக மறவர்கள், தன்னை வீழ்த்திய நாயக்கருடன் அல்லவா மோதலை கடை பிடித்து வந்திருக்க வேண்டும்? ஆனால், கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல், எதற்கு மறவர்கள் 'பள்ளருடன்' மோதலை கடைபிடிக்க வேண்டும்?  'மீண்டெழும் பாண்டியர் வரலாறு' புத்தகம் தடை செய்யப்பட்டதால், வேறெந்த தமிழ் சமூகத்துக்கும் இல்லாத மகிழ்ச்சி ஏன் இவர்களுக்கு வருகிறது?

> 'பள்ளு இலக்கியம்' என்பது நாயக்கர்களால் எழுத்தப்பட்ட, 'பள்ளர்' இனத்தை இழுவு படுத்தவே உருவாக்கப்பட்ட இலக்கியமாகும். 'மறவர்கள் தான் பாண்டியர்கள்' என்றால், சம்பந்தமே இல்லாமல் நாயக்கர்கள் எதற்கு 'பள்ளர்களை' இழிவு படுத்த வேண்டும்?

> நாயக்கருக்கும், பள்ளருக்கும் இடையே முக்குலத்தோர் ஏன் ஒரு தடுப்பாக நிற்கின்றனர்? இந்த கேள்விக்கான பதிலை தான் அப்பட்டமாக 'மீண்டெழும் பாண்டியர் வரலாறு' புத்தகத்தில் எழுதி உள்ளனர். வரலாற்றில் அன்று மட்டும் அல்ல, இன்றும் கூட திராவிட ஆட்சியாளர்களுக்கும், திராவிட கருத்தியலுக்கு முட்டு கொடுத்து, தமிழ் சாதியான பள்ளரை எதிர்ப்பதன் மூலம், காட்டி கொடுப்பு வேலைகளை ஜோராக செய்து வருகின்றனர்.அதற்க்கு கைமாறாக அன்று ஜமீன்களையும், இன்று அரசியலில் பிரதிநிதி துவமும், பசும்பொன் முத்துராமலிங்கம் அவர்களுக்கு அரசு விழாவும், ஊடங்களில், திரைப்படங்களில் அவர்களுக்கென்று பிரத்தியேக பிம்பத்தையும் உருவாக்கி தந்துள்ளனர். ஒரு தமிழ் சாதியை வைத்து, இன்னொரு தமிழ் சாதியை வீழ்த்தும் திராவிட மாயைக்குள் இவர்கள் சிக்கி இருந்தாலும்,உண்மை தெரிந்தாலும் அதை விட்டு வெளியே வர மறுக்கின்றனர்.

முக்குலத்தொரே மூவேந்தர்களாக என்று வைத்து கொண்டாலும், இந்த 'ஆண்ட பரம்பரை' என்ற வெற்று பீத்தலை தாண்டி, தமிழர்களை ஒரு குடையின் கீழ் ஒருங்கிணைக்க இவர்களிடம் எந்த ஒரு அரசியலும் இருப்பதாக தெரியவில்லை. மேலும், அப்படி இயங்கும் சக்திகளுடன் (இவர்களில் ஒரு சிலர் தவிர), மற்றவர்கள் சேர்ந்து இயங்க மறுக்கின்றனர். இது தமிழர்களுக்கு மிகப்பெரிய பின்னடைவே.

எனவே முக்குலத்து சொந்தங்களே,
* நீங்கள் இங்கே அரசியல் அரங்கில் தனிமை படுத்தப்பட்டு கொண்டு இருக்கிறீர்கள் என்பதை உணர்ந்து கொண்டு ஒரு குடையின் கீழ் செயலாற்ற வாருங்கள்.
* தமிழ் சமூகத்தின் முல்லை நிலக்குடி மக்களான நீங்கள், இவ்வாறு சக தமிழருடன் மல்லு கட்டி கொண்டு நிர்ப்பது ஏற்புடையதா?
* ஒரு வேலை நீங்கள் வராவிட்டாலும், தமிழருக்கான அரசியல் நன்றாகவே நடக்கும். ஆனால் வரலாறு உங்களை என்ன என்று குறித்து வைக்கும் என்பது உங்களுக்கே நன்றாக தெரியும்.

-- தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம் --

பள்ளர்/மள்ளர் என்பது சாதியா? இனமா?

'தமிழன் உலகாண்டான்' என்பதற்கு அடிப்படையாய் காட்டப்பட்ட பல இடங்களில் 'பள்ளர்/மள்ளர்' என்றே அடையாளங்கள் அதிகமாய் இருந்ததை சுட்டி காட்டி இருந்தோம். அதில் சில நண்பர்களுக்கு பிணக்கும், சாதி மேன்மை பாராட்டுவதாகவும் எண்ணி இருந்தார்கள். அவர்களுக்கான பதிவு இது.

இலக்கியம் கூறும் ஐந்து வகை நிலங்களும், மக்களும்



இலக்கிய பார்வையில் மள்ளர்/பள்ளர்

*  'செருமலை வீரரும் திண்ணியோடும், மருத நில மக்களும் மள்ளர்'  -- பிங்கல நிகண்டு

* “"மள்ளர் குலத்தில் வரினும் இரு பள்ளியர்கோர்
பள்ளக் கணவன்"” --- முக்கூடற் பள்ளு

* “நெடும் படை வாள் நாஞ்சில் உழு நிணச் சேற்றின்
உதிர நீர் நிறைந்த காப்பின்
கடும் பகடு படி கிடந்த கரும் பரப்பின்
இன மள்ளர் பரந்த கையில்
கடு ங்கமல மலர் நாறும் முடிபரந்த
பெருங்கிடக்கைப் பரந்த பண்ணை
தடம் பணையின் நறும் பழனம் தழுவியதே
எனப் பொலியும் தகையும் காண்மின்” --- கம்பராமாயணம்

எனவே இலக்கியங்கள் மருத நிலத்தில் வாழ்ந்த மக்களை குறிக்கவே மள்ளர் என்ற சொல்லாடல் பயன்படுத்தப்பட்டுளதையும், அப்படி குறிக்கப்படும் மள்ளர்கள் ஒரு இனமாகவும், குலமாகவும் தான் காட்டப்பட்டுள்ளனர் என்பதையும் இங்கே முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

வரலாற்று பார்வையில் மருத நில குடிகள்
வேளாண்மையும், அது சார் தொழில்களும், இவற்றை நிர்வகிக்கும் அரசும், வணிகர்களும், அரசை வழி நடத்தும் அனைத்து மக்களுமே மருத நில குடிகளான மள்ளர்கள் ஆவார்கள். இதில் இருந்து 'பள்ளர்'(இன்றைய பள்ளர் சாதி மக்கள்)  மட்டுமே மள்ளரா என்ற கேள்வி அர்த்தமற்றதாகிறது. மேலும் அந்த மள்ளரின் பணி  வேளாண்மை மட்டுமே என்ற குறுகிய கண்ணோட்டமும் அடிபட்டு போகிறது.

அப்படி என்றால் இன்றைய 'பள்ளர்கள்'(சாதி)  மட்டும் தான் 'மள்ளரா',வேறு யாரும் இல்லையா என்ற கேள்வி இயல்பாக எழும். அதை தர்க்க ரீதியாகவும், அறிவியல் ரீதியாகவும் அலசுவோம். உலகம் முழுக்கும் பள்ளர் என்ற சொல்லாடலும், மள்ளர் என்ற சொல்லாடலும், உலகம் முழுவதும் ஒரு குடையின் கீழ் ஆண்ட தமிழனின் அடையாளம் அனைத்திலும் 'பள்ளர்' என்ற வார்த்தையே அதிகம் பயன்படுத்த படுவதில் இருந்தும், அந்த பெருமைக்கு உரியவர்கள் பள்ளர்கள் மட்டுமா என்பதை தெளிவான பார்வையில் இனி காண்போம்.

உலகின் அனைத்து நாகரிகத்திலும் முதன்மையானது உழவு தொழிலே. அந்த உழவுத் தொழிலை ஒட்டியே மற்ற தொழில்களும், அரசும் தோன்றின. எனவே தான் உலகம் முழுதும் உழவு தொழிலை சிறப்பிக்கும் வகையிலும், தான் அந்த வேளாண் சமூகத்தில் இருந்து வந்தவன் என்ற வகையிலும், மற்ற தொழில்களை விடுத்து தன்னை ஒரு வேளாண் குடி சார்ந்தவனாக காட்டிக் கொள்ளவே தமிழன் விரும்பியுள்ளான். இதனாலேயே (ஆயர் என்ற ஒரு சில சொற்களை தவிர), கிட்டத்தட்ட அனைத்து இடங்களிலும் 'பள்ளர்' என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளான். இதன் மூலம் மருத நில மூத்த குடியினரை சிறப்பித்துள்ளான். இந்த அடையாளத்தை தான் இன்றைய 'பள்ளர்' சமூக மக்கள் தக்க வைத்து உள்ளனர். 

கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் அனைத்து பள்ளர் பிரிவையும் (இலக்கியம் சொல்லும் இன,குல மள்ளர்கள்) ஒருங்கே குறிக்கும் அர்த்தத்தில் தான் உலகில் விரவிக் கிடக்கும் பள்ளரையும், தமிழன் அடையாளத்தையும் பார்க்க வேண்டுமே தவிர, 'பள்ளர்' என்ற ஒற்றை சாதி அடையாளமாக அல்ல.



மரபணு அடிப்படையில் மருத நில குடிகள்
NOTE: இங்கே அனைவரையும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட வில்லை.


ஆதாரம்: 
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175.pdf
http://www.ias.ac.in/jgenet/Vol87No2/175-suppl.pdf

தர்க்க அடிப்படையில் மருத நில மக்கள் இருப்பு:
உலகம் முழுவதிலும் தமிழன் தடத்தில் 'பள்ளர்' இருக்கிறார்கள் என்றால், அந்த இனம் இங்கே பெரும்பான்மையாக கோலோச்சி இருக்க வேண்டும். ஆனால் இன்று 'ஆறில் ஒரு பங்கு அளவு' மட்டுமே இருக்க கூடிய 'பள்ளர்' சமூகத்தால் அது சாத்தியமா? 

'கடலோடியான' தமிழன் ஒரு கப்பலை கட்டி இயக்கவே கீழ் கண்ட தொழில் சார் மக்கள் தேவைப்படுகிறார்கள்.

* பருத்தி உற்பத்தி
* பருத்தி நூற்ப்பு & பாய் மரம் செய்தல்
* மரம் இழைத்தல்
* கப்பலை கட்டும் நிபுணர்
* கப்பலில் செல்ல தேவையான உணவை தயார் செய்தல்
* வானியல் நிபுணர்
* கடலியல் நிபுணர்
* சிற்பி (சென்ற இடத்தில் எல்லாம் தமிழன் கோவில் கட்டியுள்ளான்)
* இரும்பு,செம்பு என கப்பல் கட்ட தேவையான கொல்லர்கள்
* கப்பல் மாலுமி
* கப்பலை செலுத்துபவர்கள்

கடலோடி தமிழன் என்ன தான் மேலே சொன்ன அனைத்து மக்களையும் ஒருங்கிணைத்து பணி ஆற்றி இருந்தாலும், இவர்களின் ஒட்டு மொத்த அடையாளமாகத் தான் 'பள்ளர்/மள்ளர்' என்ற வார்த்தையை பயன்படுத்தி உள்ளான் என்பதையும், தான் சென்ற இடங்களுக்கெல்லாம் இள வட்டக்கல்லையும், நெல் கதிரையும் கொண்டு சென்று இறங்கியுள்ளான் என்பதையும் நாம் வரலாறின் மூலம் அறிகிறோம். எனவே 'பள்ளர்/மள்ளர்' என்பது ஒரு திணையில் (அ) திணை மயக்கத்தில், வாழ்ந்த, ஒரு இன மக்களை குறிக்கும் வார்த்தை என்பதையும், மருத நிலத்தில் வாழும் அனைத்து தொழில் சார் மக்களையுமே அது சுட்டும் என்பதையும் அறியலாம். மேலும், மூவேந்தர்கள் சுட்டி காட்டும் 'பள்ளர்' உட்பட, இன்று வரை வாழ்ந்து கொண்டு இருக்கும் 'பள்ளர்' சாதி ஆட்கள் அனைவரும் மருந்த நில வேளாண் சார் தலை குடி மக்கள் என்பதையும் உணர்ந்து கொள்வோம்.

மக்கள் குடிக்கணக்கில் மாற்றம்
பாண்டிச்சேரி(1970-72) உள்ளிட்ட இடங்களில் பல ஆண்டுகளுக்கு முன்பு பள்ளர் என்று வாழ்ந்து வந்த மக்கள் பலர், தற்போது வன்னியர் என்றும், நாடார் என்றும், கொங்கு வேளாளர் என்றும் வாழ்ந்து வருகின்றனர் (கள ஆய்வு தகவல்: ஒரிசா பாலு) என்பதும், 'SC என்றால் எல்லாரும் ஒன்று தானே' என்று பறையர் என்று சான்றிதழ் பெற்று பள்ளர்கள் பலர் வாழ்ந்து வருகின்றனர் என்பதும் கள ஆய்வில் தெரிய வரும் உண்மை ஆகும்.

எனவே 'உலகில் இருக்கும் பள்ளர்' என்பதை சாதியம் என்று கொள்ளாமல், இனத்தின் அடையாளமாக கொள்ளவும். அந்த பெருமைகளில்,தொழில் சார் நுட்பங்களில், மேலே சொல்லப்பட்ட அனைத்து மருத நில மக்களுக்கும் பங்கு உண்டு என்பதையும் உணர்ந்து கொள்ளவும்.

-- தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம், சென்னை --

யார் தலித்?

     பொதுவாக 'தலித்' என்றால் 'ஒடுக்கப்பட்டவர்கள்' என்றும், SC பட்டியலில் இருப்பவர்கள் என்றும் அர்த்தம் கர்ப்பிக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் சூத்திரர்களும், சண்டாளர்களும்/பஞ்சமர்களும் தலித்துகலாம். மனு சாத்திர படி 'சூத்திரர்கள்' ஒடுக்கப்பட்டவர்கள் தான். மறுப்பதற்கு இல்லை. ஆனால் 'சூத்திரர்கள்' மட்டுமே ஒடுக்கப்பட்டவர்களா...?

    அதற்க்கு முன்பு, 'தலித்' என்பது ஒரு வர்க்கம் என்றும், அது சாதியம் இல்லை என்பதை புரிந்து கொள்ள வேண்டும். அப்போது தான் எப்படி 'தலித்' என்ற வர்க்கம், குறிப்பாக ஒரு சில சாதிகளை மட்டுமே குறிக்கும் குறியீடாக யாரால் ஆக்கப்பட்டது என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.

இப்போது 'மனு' அடிப்படையில் 'ஒடுக்கப்பட்டோர்' யார் யார் என்று பார்ப்போம். இந்த ஆய்வின் முடிவில் சூத்திரர்கள் மட்டும் தான் ஒடுக்கப்பட்டவர்கள் என்றும், 'தலித்'துகள்  என்றும் சொல்லப்படுவது சரி தானா என்பதையும் அலசுவோம்.

* மனு சாத்திர படி 'பிராமண பெண்களும்' தலித்கள் தான். அதாவது ஒடுக்கப்பட்டவர்கள்(oppressed).
"Code of Manu states, "In childhood a female must be subject to her father,in youth to her husband, then to her sons; a woman must never be independent.There is no God on earth for a woman than her husband.....She must on the death of her husband allow herself to be burnt alive on the same funeral pyre. That everyone will praise her virtue""

(Referrence:
http://thathachariyar.blogspot.in/2010/11/33.html
http://dalitnation.wordpress.com/2007/12/14/why-babasaheb-married-a-brahmin/)

* மனு சாத்திரப்படி சத்ரிய,வைசியர்களும் ஒடுக்கப்பட்டவர்களே.

=> நூறு வயதான ஒரு சத்ரியன், பத்து வயது பிராமணனை தந்தை போல நடத்த வேண்டும்
"A hundred year old Kshatriya must treat a ten year old Brahmin boy as his father. (Manu 11-135)"

=> ஒரு பிராமணன் மற்ற வர்ணத்தை சேர்ந்த எவரையும் சாப்பிட அழைக்க கூடாது. பிராமணன் தான் உண்ட மிச்சத்தை அவர்களுக்கு தரலாம். அப்படி இருக்கும் மிச்ச மீதி உணம்வையும் தன கையால் பிராமணன் தர கூடாது. வீட்டிற்கு வெளியே இருக்கும் மற்ற வர்ண ஆட்களின் மூலம் தான் அதை செய்ய வேண்டும்.
"The Brahmin should never invite persons of other varnas for food. In case, the latter begs the Brahmin for food, the Brahmin may give them some left-over. Even these left-over must be served not by the Brahmin but by his servants outside the house. (Manu II2)"

இதில் இருந்து பார்ப்பனர்கள் அல்லாத அனைவருமே பார்ப்பனர்களால் ஒடுக்கப்பட்டவர்கள் என்றும், சூத்திரரர்கள் மட்டும் அல்ல சத்ரியர்களும்,வைசியர்களும் தான் 'தலித்'(ஒடுக்கப்பட்டோர்) என்பதும் மனு கூறும் உண்மை ஆகும்.  இந்த உண்மையை புரிந்து கொள்ளாமல், ஒடுக்கப்பட்ட படி நிலையில் இரண்டாவது நிலையில் இருப்பவன்(சத்ரியன்) தனக்கு கீழ் படிநிலையில் இருப்பவனை ஒடுக்குவது அபத்தம் அல்லவா? உண்மையில் 2,3,4 என அனைவரும் சேர்ந்து தானே உங்கள் அனைவரையும் ஒடுக்கப்பட்டவர்கள் என்று முத்திரை குத்தும் 'பிராமணரை' எதிர்க்க வேண்டும்? எனவே, சூத்திர தலித்துகளோடு, வைசிய தலித்துகளும், சத்ரிய தலித்துகளும் ஒன்று இனைந்து பார்ப்பனர்களை எதிர்ப்போம் வாருங்கள்.

(குறிப்பு: ஆரியம், திராவிடம், தலித்தியம் --- இவை மூன்றுமே எதிரி போட்டு கொடுத்த பாதை. என்றைக்குமே முடிவை தராத, ஒர்மையை ஏற்ப்படுத்தாத பாதைகள் இவை. இந்த உண்மையை புரிந்து கொள்வோம். தமிழன் என்ற ஓர்மையில் திரள்வோம்)

-- ம.பொன்ராஜ் காலாடி --

Wednesday, May 29, 2013

+2 தேர்வில் வாங்குவது மதிப்பெண்ணா? முட்டைகளா?

ஒரு பல் மருத்துவர் கூறியவை.
"அந்த பழங்குடி மக்கள் அழைப்பின் பேரில் நான் அவர்கள் இருப்பிடத்துக்கு சென்றேன். அங்கு இருக்கும் சின்ன பிள்ளைகள் கடும் சிரமத்திற்கு மத்தியில் தான் கல்வி கற்று வருகின்றனர். அவர்கள் அவ்வளவாக படிப்பது இல்லை. படிப்பில் அவர்கள் சுமார் தான். ஆனால் அந்த சுற்று வட்டாரத்தில் ஒவ்வொரு செடியின் குணத்தையும், அதன் பயன் பாட்டையும் துல்லியமாக அந்த பகுதி சிறுவர் சிறுமியர் தெரிந்து வைத்து இருக்கின்றனர். அதை என்னிடம் விளக்கியும் காட்டினர். ஒரு மருத்துவரான எனக்கு அது பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. எனக்கு ஆச்சரியமும், வெட்கமுமாக போய் விட்டது".
சொல்லுங்க.....இதில் யார் படிப்பாளி...? எது கல்வி?

KFC போன்ற துரித உணவு கூடங்களின் 'உணவு கையாளும் கோட்பாடு'. 
மரபணுவில் மாற்றம் செய்யப்பட கோழிகள்


* அவர்கள் தனியாக கோழி பண்ணைகள் போன்ற இத்தியாதிகளை நடத்துகின்றனர். அதில் இருந்தே கோழி இறைச்சி KFC க்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
* அவ்வாறு அவர்கள் ால் வளர்க்கப்படும் கோழிகள் இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. எனவே அந்த கோழிகள் தங்கள் வாழ் நாள் முழுவதும் இறகோ, முடியோ இல்லாமல் வெறும் தோலுடனே வளர்க்கப்படுகின்றன. இதற்க்கு காரணம் இறகை பிய்க்கும் செலவு மிச்சம்.
* ஒரு கோழி இன்னொரு கோழியை சேதப்படுத்தாமல் இருக்க, கோழி குஞ்சுகள் சிறியதாக இருக்கும் போதே அதன் அலகுகள் வெட்டப்படுகின்றன.
* ஊசியின் மூலமாக மட்டுமே அந்த கோழிகளுக்கு உணவு செலுத்தப்படுகிறது.
* அப்படி உருவாக்கப்படும் கோழிகள், இயந்திரம் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டப்பட்டு, KFC களுக்கு அனுப்பப்படுகின்றன.
Source: http://www.nellaieruvadi.com/article/article.asp?aid=36


இந்திய (பிராய்லர் கோழி வளர்க்கும்) கல்வி முறை
கடந்த இரண்டு நாட்களாக கோமளவல்லி ஜெயா அம்மையாரும் ,சின்னமேளம் கருணாநிதி அவர்களும் ஆங்கில வழி கல்வியா அல்லது தமிழ் வழி கல்வியா என்று தங்களுக்குள் மோதி கொள்கின்றனர்.அதிலும் இந்த சின்ன மேளத்தின் சத்தம் தான் தாங்கலை. ஏதோ தமிழ் சமூகத்தை காக்க வந்த கர்ண பரம்பரை என்பது போல தூள் பறத்துக்கிறார்.

      அய்யா கருணா அவர்களே, உங்கள் திராவிடம் இந்த தமிழ் மண்ணில் கடந்த 500 வருடங்களாக போட்ட பேயாட்டத்தில் எம் தமிழ் மொழி பட்ட பாடு எங்களுக்கு தானே தெரியும்.எங்கள் தாய் நாட்டிற்கு நிகராக நாங்கள் மதித்த, உலகமே போற்றி கொண்டாடியே எம் தமிழை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டி அடித்தது,கோவில் மொழியாக இருந்த எம் தமிழை 'நீச பாசை' என்று கோவிலில் இருந்து விரட்டி அடித்தது எல்லாம் யார் என்பதை நாங்கள் மறந்து விடுவோம் என்று மனப்பால் குடிக்கிறீரோ ?உலகிலேயே கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்கிய தமிழனை, உங்கள் காட்டு மிராண்டி கூட்டம் தானே இந்த இழி நிலைக்கு தள்ளியது?

    பழம் கதைகளை விடுங்கள் கருணா அவர்களே, உங்கள் ஆட்சில் அரசு பள்ளிகளை எல்லாம் திட்டமிட்டு தரம் தாழ்த்தி விட்டு, தனியார் ஆங்கில பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் தெலுங்கர்களாக பார்த்து பார்த்து அனுமதி கொடுத்தீர்களே..?அந்த (தெலுங்கு) கல்வி தந்தைகள் தானே இன்று தமிழ் நாட்டில் தமிழ் வழி கல்வியை எதிர்க்கிறார்கள்? அவர்களிடம் காட்ட வேண்டியது தானே உங்கள் தமிழ் பாசத்தை..!!! ஒருவேளை அம்மையார் கொண்டுவரும் அரசு ஆங்கில வழி பள்ளிகள் உம தெலுங்கு சகாக்கள் நடத்தி வரும் ஆங்கில வழி பள்ளிகளுக்கு வேட்டு வைத்து விடும் என்ற அச்சத்தில் தான் இன்று முண்டாசு கட்டி முறுக்கி கொண்டு நிற்க்கிரீரோ....? உங்கள் பசப்பும் வார்த்தையையும், நீலிக் கண்ணீரையும் நம்புவதற்கு நாங்கள் ஒன்றும் எங்கள் தாத்தா காலத்து அப்பாவிகள் அல்ல சின்ன மேளனாரே......!!! நீங்கள் தமிழருக்கு ஆதரவாக பேசுவதை உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னும் உள்ள அரசியலை துல்லியமாக புரிந்து வைத்திருக்கிறோம் நாங்கள்.

    அடுத்து கோமளவல்லி அம்மையாரிடம் வருவோம். மாண்பு மிகு அம்மையார் அவர்களே, எமக்கான கல்வியை எந்த மொழியில்  கொடுப்பது என்பதை பற்றி அப்புறம் முடிவு செய்யலாம். ஆனால் இந்த கல்வி திட்டமே ஒரு உதவாக்கரை கல்வி திட்டம் என்று உங்களுக்கு தெரியாதா... ?பாவம் உங்களுக்கு எப்படி தெரியும். 'வெள்ளியான் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்' என்று ஆங்கிலத்தில் டஸ்சு புஸு என்று பேசுவதை பெருமையாக நினைப்பவர் ஆயிற்றே....?

    வெள்ளையன் மெக்காலே பிரபு, தனது சொந்த நாட்டில் இருந்து பெருவாரியான வெள்ளையர்களை இங்கே அரசு இயந்திரத்தில் பணி அமர்த்துவது சிரமம் என்று கருதி, தனக்கு அடிபணிந்து இயங்க கூடிய அளவில் இங்கேயே ஆட்களை உருவாக்க, அவர் வடிவமைத்தது தான் 'மெக்காலே கல்வி திட்டம்'. அந்த முட்டாள் தனமான, சுயமாய் சிந்திக்க வழி வகுக்காத கல்வி திட்டத்தை தான் இன்று வரை இம்மி பிசகாமல் இந்தியர்கள் பின்பற்றி வருகிறார்கள்.இந்த லட்சணத்தில் அந்த முட்டாள் தனமான கல்வி திட்டத்தை எந்த மொழியில் இருக்க வேண்டும் என்று உங்களுக்குள் சண்டை வேறு...? வெட்கம்.



     இந்த உதவாக்கரை கல்வி திட்டத்தை பள்ளி இறுதி வரை படிக்கும் மாணவன் அரை முட்டாளாகவும், கல்லூரி இறுதி வரை படித்தால் முழு முட்டாளாகும், அரை அடிமை புத்தி உள்ளவனாகவும் ஆகிறான். அதுவே இந்த குப்பை கல்வி திட்டத்தின் உயர்ந்த படிப்புகளாக உள்ள (பி.ஹெச்டி, ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ்) படிப்புகளை படித்து விட்டான் என்றால் அவன் அரசாங்கத்தின் முழு அடிமை குமாஸ்தாவாக அல்லவா வளர்த்தெடுக்கப் பட்டவன் ஆகிறான்...?தெரியாமல் தான் கேட்கிறோம். இந்த குப்பை கல்வி திட்டத்தை பின்பற்றி வந்த யாராவது (இந்தியாவில் இந்த அரசாங்க குமாஸ்தா வேலையை தவிர்த்து), பெரிய தலைவனாகவோ, அறிஞனாகவோ, ஒரு தொழில் அதிபராகவோ உருவானார் என்று காட்ட முடியுமா..?



    உலகில் பல நாடுகளில் பேராசிரியர்கள் தான் பல புரட்சிகளுக்கு காரணமாக இருப்பார்கள். ஆனால் இந்தியாவில் தான் இந்த பேராசிரியர்கள் 'புலம்பல் வாதிகளாக', அடிமையிலும் அடிமையாக, 'வெந்ததை தின்று விட்டு விதி வந்தால் மரணிக்கும்' ஜீவன்களாக உருவாகி கொண்டு இருக்கின்றனர்.

IIT முன்னாள் மாணவரான அரவிந்த் குப்தா போன்றோர் அறிவியலை எளிதாக பள்ளி மாணவர்களுக்கு ஒரு விளையாட்டு போல் சொல்லி கொடுக்கும் பொருட்டு, தனக்கு உதவியாளர்களாக 'எம்.எஸ்.சி' போன்ற உயர் படிப்பு படித்த மாணவர்களை துணைக்கு அமர்த்தி கொண்டார். அப்படி அமர்த்திய பின்பு தான் தெரிந்தது அந்த 'எம்.எஸ்.சி' மாணவர்களுக்கு தான் முதலில் அறிவியலின் அடிப்படைகளை கற்று கொடுக்க வேண்டும் என்று.
Source: http://www.arvindguptatoys.com/

".... The survey revealed that schools – even with good infrastructure, qualified teachers and high charging fees failed miserably in helping children make sense of the world. All the chalk-and-talk method, rote learning dulls the mind and does not help critical thinking so essential for living."
 -- Aravind Gupta. (Source: http://www.arvindguptatoys.com/arvindgupta/DH5.pdf)


இந்த சீரழிவுக்கு காரணம் இந்த மெக்காலே கல்வி திட்டம் தான். இதில் கொடுமை என்னவென்றால், இந்த கல்வி திட்டத்தை முன்வைத்த மெக்காலே பிரபு, 'இந்த கல்வி திட்டம் இந்தியர்களை ஆங்கிலேயே அடிமைகளாகவே வைத்திருக்கும்' என்று வெளிப்படையாக அறிவித்து விட்டே நடைமுறை படுத்துகிறார். இன்று நம்முடையே உள்ள தாழ்வு மனப்பான்மைக்கும், அவ நம்பிக்கைக்கும் மட்டுமல்ல, ஆங்கில மோகத்துக்கும் அடிப்படை காரணமே இந்த கல்வி திட்டம் தான்.

    கேள்வி கேக்கும் மாணவனை உருவாக்குவதே ஒரு உண்மையான கல்வித் திட்டத்தின் பணி. ஆனால் எதிர் கேள்வியே கேட்க தெரியாமல், யாரோ ஒருவர் தயாரித்து, யாரோ ஒருவர் சொல்லி கொடுக்கும் விசயங்களை, அந்த விஷயங்கள் கூட உண்மையா, பொய்யா என்று ஆராயாமல், ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண், முக்கியமான கேள்வி என்று உருப்போட்டு மனப்பாடம் செய்து, அதை பரீட்சை என்ற பெயரில் வாந்தி எடுத்து, அதில் வரும் மதிப்பெண்களையும், grade ஐயும் அளவுகோலை வைத்திருக்கும் இந்த கல்வி திட்டமும், படிப்பும் ஒரு படிப்பு தானா...? ஒரு மாணவன் தன வாழ்நாளில் பெரும் பகுதியை பள்ளியிலும், கலூரியிலும் தான் கழிக்கிறான். அவனுக்கு கொடுக்கும் கல்வியில் இத்துணை அயோக்கியத் தனம் தேவை தானா...? சிந்திப்பீர் மக்களே.

    இப்படி ஒரு முட்டாள் தனமான கல்வி திட்டத்தை கற்றதன் விளைவு தான், உலகின் நாகரிகங்களை உருவாக்கிய கடலோடி தமிழன் என்பதை மறைத்து விட்டு, இந்தியாவிற்கான கடல் வழியை கண்டு பிடித்தவர் 'வாஸ்கோடகாமா' என்று உளறிவைத்ததை அப்படியே ஏற்றுக் கொண்டு 'என்ன தான் இருந்தாலும் வெள்ளை காரன் வெள்ளை காரன் தான்' என்று மனதளவில் அடிமை தனத்தை ஒவ்வொரு விசயத்திலும் வளர்த்து கொண்டு இருக்கிறோம். கேள்வி கேட்டாலே அதிங்க பிரசங்கி என்றும், 'கையை கட்டு வாயை பொத்து' என்றும் கற்பனை வளத்துக்கு கடிவாளம் போடும் படிப்பு ஒரு படிப்பா....?

    தற்போது +2 தேர்வு முடிவுகள் வேறு வந்துவிட்டது. பேப்பரை பார்த்தாலே, 'வாங்க வாங்க கூறு மூணு ரூவா' என்கிற ரேஞ்சில் தங்கள் பள்ளியில் மதிப்பெண் சாதனைகளை பட்டியலிட்டு, கன ஜோராக கல்லா கட்ட தயாராகி வருகின்றனர் கல்வி தந்தை பள்ளிகள். 'செல்வா'வாகிய நான் விஜய் தொலைக் காட்சியில் பணி புரிந்த போது, நீயா நானா நிகழ்ச்சிக்காக 'கடந்த 15 வருடங்களில் +2 படிப்பில் மதிப்பெண் பெற்றவர்கள் தற்போது என்ன செய்கின்றனர்' என்று ஒரு ஆய்வை மேற்கொண்டோம். 99% பேர் நல்ல குமாஸ்தா வேலையில் காலத்தை ஒப்பேற்றி கொண்டு வருகின்றனர். மாறாக இவனுக்கு படிப்பே வராது என்று கண்டறியப்பட்ட, 1 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்கள் பலர் சமூகத்தில் அந்தஸ்து வகிக்கும் 'நட்சத்திரங்களாக' திகழ்கின்றனர். இந்த உண்மை தெரியாமல், தேர்வில் தோல்வி அடைந்த மாணவ செல்வங்கள் சிலர் தற்கொலை வேறு செய்து கொள்கின்றனர்.

    ஆகவே அம்மையார் அவர்களே, நீங்கள் மாற்ற வேண்டியது கல்வி போதிக்கும் மொழியை அல்ல, கல்வி திட்டத்தை தான்....!!! உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் கருனாக்களை போல் அல்லாமல், நீங்களாவது கொஞ்சம் சிந்தித்து செயலாற்றுங்கள். இறுதியாக, வெள்ளையாக இருப்பவன் எல்லாம் நல்லவனும் அல்ல, ஆங்கிலம் பேசுபவன் எல்லாம் அறிவாளியும் அல்ல. இதை தாங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். தமிழ் அன்னைக்கு சிலை வைப்பதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்.

--- செல்வா பாண்டியர் ---
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

Friday, May 10, 2013

பெரியார்: சீர்திருத்தவாதி தானா?

பிராமணர்கள் உருவான வரலாற்று சுருக்கம்:
     நிலையற்று சுற்றி திரிந்த முல்லை நிலத்தில் இருந்து மருத நிலத்துக்கு வந்த பின்னும், அந்த நாகரிகமற்ற கூறுகளை மாற்ற உருவானது தான் கோவில்கள். இறந்தவர் சார்பாக நடுகல். அந்த கல்லை சுற்றி ஒரு மண்டபம். பெரிய ஆளாக இருந்தால் ஒரு கோவில். இன்று இருக்கும் அனைத்து கோயில்களும் இறந்தவர்களின் சார்பாக இருக்கும் 'பள்ளி படை' (சமாதி)களே. அந்த அந்த கோவில்களில் பூசை செய்ய என்று பூசாரிகள் அதே மக்களிடம் இருந்து அமர்த்தப்பட்டனர். இந்த முன்னோர் வழிபாடு, பூசாரிகளை எல்லாம் நீங்கள் இன்றும் பார்க்கலாம். இந்த கால கட்டத்தில் பார்ப்பனர் என்றோ, பிராமணர் என்றோ ஓர் தனி குழுவோ, கூட்டமோ இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சிந்து சமவெளி நாகரிகம் உட்பட தமிழர் உருவாக்கிய சமூக நான்குபிரிவு கட்டமைப்பு பிறப்பின் அடிப்படையிலேயே இருந்து வந்துள்ளது.அதற்க்கான தேவை அன்று இருந்தது. அந்த நால்வர்ண பிரிப்பை இன்றுள்ள நிலையுடன் ஒப்பிட்டு பேசுவது மகா அபத்தம்.

ஒரு உதாரணம்:

வேளாளரின் பணி வேளாண்மை. மிக உயர்ந்த தொழில்நுட்பம் அது. ஒரு மீனவ பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அந்த மீனவ பெண்ணால் அங்கு வாழ்க்கை நடத்த முடியாது. இதனால் வேளாளர்கள் தங்களுக்குள்ளேயே பெண் கொடுத்து பெண் எடுத்தனர். இதை இன்றும் இருக்கும் பழங்குடி மக்களிடமும் காணலாம். ஆதிக்க சாதி என்று சொல்லும் இன்றைய சாதி மக்கள் தான் தங்களுக்குள் பெண் கொடுத்து பெண் எடுக்கின்ற அந்த விசயத்துக்கு காரணம் அவர்களின் 'ஆதிக்க சாதி வெறி' என்றால், காட்டில் வாழும் பழங்குடி மக்களும் அதையே தானே செகிறார்கள். அதற்க்கு பெயர் என்ன வெறி என்று சொல்ல முடியுமா...?

இவ்வாறாக, பிறப்பின் அடிப்படையில் அன்று தமிழரிடம் பிரிவுகள் இருந்தாலும், அவர்கள் தங்களுக்குள் எந்த பேதமும் ஏற்றத்தாழ்வும் இன்றி நிம்மதியாக வாழ்ந்தனர். இதற்க்கு சிந்துவெளி நாகரிகமே சாட்சி.

பிராமணர்களின் தோற்றத்திற்கு வருவோம். காலப்போக்கில் பல்லவர்கள் காலத்தில் தான் பிராமணர்கள் என்று ஒரு குழுவாக அந்த பூசாரிகள் அடையாள படுத்தப்படுகின்றனர். பின்னர் உருவான மற்ற பேரரசுகள், ஆங்கிலேயே ஆதிக்கம், மாக்ஸ் முல்லரின் 'ஆரிய தியரியை' தனதாக்கி கொண்டு பிராமணர்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்தல்,இந்து மதம் உருவாக்கம் என்று காலம் உருண்டோடி விட்டது.


'மாக்ஸ் முல்லர்' என்ற ஆங்கிலேயர் உருவாக்கிய இனவெறி கோட்பாடு 'ஆரியம்'. இதற்க்கு முன்பு ஆரியம் என்று கோட்பாடு எதுவும் கிடையாது.
கால்டுவெல்,எல்லிஸ் உருவாக்கியது திராவிட கோட்பாடு. இதற்க்கு முன்பு திராவிடன் என்ற யாரும் கிடையாது.


இனி பெரியாரின் கருத்துகளை பார்ப்போம்.
* பிராமணர்கள் ஆரியர்கள், அவர்கள் மத்திய கிழக்கில் இருந்து வந்த நாடோடி கூட்டம் என்று சொல்வது பெரியார் அல்ல. ஆங்கிலேயன். இதையே பெரியாரும் வழி மொழிகிறார். இது மிகப்பெரிய அபத்தம். பிராமணர் என்ற ஒருங்கிணைந்த கூட்டமே பல்லவர்கள் காலத்தில் தான் உருவாக்கப்பட்டது. அதற்க்கு முன்பு அப்படி எந்த ஒரு ஒருங்கிணைப்பும் இங்கே இருந்தது இல்லை. அப்படி ஒரு கூட்டம் இல்லாத போது, அவர்கள் தான் இங்கே நால்வர்ண பேதத்தை உருவாக்கினார்கள் என்பது அபத்தத்திலும் அபத்தம்.

* சிவனும்,முருகனும்,இந்திரனும் ஆரியக்கடவுள் என்று சொல்வது ஆங்கிலேயன். இதை அப்படியே வழிமொழிகிறார் பெரியார். இதுவும் அபத்தம். இன்றும் திருப்பரங்குன்றம் கோவிலில் 'இந்திரன் மகளான தெய்வானை-முருகனின்' திருமணம் முடிந்து மறுவீடு (மாமனார் வீடு) பெரியாரின் கூற்றுப்படி பிராமணர் மடமாக தானே இருக்கணும்? ஆனால், போவது 'பள்ளர் மடம்' ஆச்சே....? அவங்களுக்கு திருமணம் செய்து வைத்ததற்காக பிராமண தலைவருக்கா மரியாதையும்,பரிவட்டமும் கட்டுகிறார்கள் அங்கே? பள்ளருக்கு தானே கட்டுகிறார்கள்? திருச்செந்தூர்(முன்பு),பழனி என்று முருகனின் முக்கிய கோவில்கள் எங்கிலும் பள்ளருக்கு தானே முதல் மரியாதை? அப்படி என்றால் பள்ளர்கள் ஆரியர்களா?
Ref: http://mallarchives.blogspot.in/2012/11/3874.html

* சிவன் ஆரியக்கடவுள் என்றால் கோவை பேரூர் பட்டிஸ்வரன் சிவன் பள்ளர் தானே? பிராமணரா அவர்? அப்படி என்றால் பள்ளர் ஆரியரா...?
Ref: http://mallarchives.blogspot.in/2012/11/blog-post_6.html

* அம்பெத்க்காரே சொல்லிட்டார் என்று பெரியாரை அம்பேத்காரை முன்மொழிகிறார். அம்பேத்கார் என்ன சொன்னார்...? மேலே சொன்ன அதே ஆரிய கருத்தை ஏற்றுக் கொண்டு, நாமெல்லாம் புத்தரின் பிள்ளைகள் என்று சொன்னார். அப்படி என்றால் குறைந்த பட்சம் பெரியார் 'புத்தர்' யார் என்றாவது ஆராய்ந்து சொல்லி இருக்க வேண்டுமே? செய்தாரா...? அம்பேத்காரை வராலாற்று ஆசிரியராக ஏற்றுக் கொண்ட பெரியார் ,  பாவாணரை அவரின் ஆராய்ச்சியை ஒரு பொருட்டாக மதித்ததில்லையே. ஏன்? ஆனால், இன்று இருக்கும் தமிழ் அறிஞர்களுக்கு ஒரு வரலாற்று கையேடாக,ஆசானாக இருப்பது பாவாணர் தானே? அம்பேத்கார் இல்லையே....? எப்படி?

*தமிழன் தற்குறி, அவனுக்கு தலைவன் ஆக அவனுக்குள் யாருக்கு தகுதி கிடையாது என்று வாய்க்கு வந்ததை உளறி வைத்த பெரியார், சாக்ரடீஸ் என்று உலக நாகரிகம் பேசும் போதும், கிருத்தவ பாதிரிகளின் அறிவியலுக்கு எதிரான அட்டகாசத்தை எதிர்த்த அந்த நாட்டு அறிஞர்களை பேசும் போதும், தனது நாத்திக கருத்துக்கு மட்டும் வலு சேர்க்கும் வகையில் விசயங்களை பொருக்கி எடுத்து தான் பேசினாரே ஒழியக, அந்த கிரேக்க,ரோம் நாகரிகத்தில் தமிழன் இருந்ததை, அவர்களை ஆண்டதை எங்கையாவது சொல்லி இருக்கிறாரா...? அப்படி என்றால் அவர் பூத கண்ணாடி வைத்து எதை பார்த்தார்....? படித்தார்?
-----------
“The Sicambrian Franks, from whose female line the Merovingians emerged were associated with Grecian Arcadia before migrating to the Rhineland. As we have seen, they called themselves the Newmage —People of the New Covenant, just as the Essenes of Qumran had once been known. It was the Arcadian legacy that was responsible for themysterious sea beast — the Bistea Neptunis — as symbolically defined in the Merovingian ancestry. The relevant sea-lord was King Pallas, a god of old Arcadia... The immortal sea-lord was said to be 'ever-incarnate in a dynasty of ancient kings whose symbol was a fish - as was the traditional symbol of Jesus.” (Laurence Gardner, Bloodline of the Holy Grail, pp. 166, 175)
----------
Ref: http://watch.pair.com/dragon-lineage.html


பெரியார் உண்மையில் செய்திருக்க வேண்டியது:
===============================================
* பகுத்தறி பகுத்தறி என்று சொல்லும் பெரியார் 'மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து' முதலில் வெளியேறி இங்கே இந்தியாவில் குடியேறி நாகரிகமான சமூகம் 'திராவிடர்' என்றும், பின்னர் அதே மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்த ஆரியர்கள் காட்டு மிராண்டி என்றும் சொல்லி 'மாக்ஸ் முல்லரின்' ஆரிய கோட்பாட்டை எப்படி ஒத்து கொண்டார்? முதலில் வந்தவன் நாகரிகமானவன் என்றும், பின்னர் வந்தவன் காட்டுமிராண்டி என்ற இயற்கைக்கும் சற்றும் ஒவ்வாத கோட்ப்பாட்டை பெரியார் வம்படியாக பிடித்து தொங்க வேண்டிய அவசியம் என்ன? திராவிட கோட்பாட்டை நிலை நிறுத்த தானே?

* நால்வர்ண பேதத்தை உருவாக்கியவர்கள் பிராமணர்கள் என்று ஆங்கிலேயன் சொன்ன ஆரிய தியரியை அப்படியே வழி மொழிந்தது முதல் தவறு. அதை உருவாக்கியதே தமிழர்கள் தான் என்றும், அது மூவேந்தர்களுக்கும் முன்பே பழம் காலம் இருந்தே தேவையின் பொருட்டு இங்கே இருந்து வந்துள்ளது என்பதையும் சொல்லி இருக்க வேண்டும். சொல்ல வில்லை.

* மூவேந்தர் காலம் வரை இங்கே தமிழ் சமூகங்களில் இல்லாமல் இருந்த தீண்டாமை சிக்கலை, ஒரு உதாரணாக 'பறையரை தொட்டால் தீட்டு, சானாரை பார்த்தாலே தீட்டு' என்றும், பள்ளரை இழிவாக சித்தரிக்க பள்ளு இலக்கியங்களை எழுதியதும் தனது முன்னோரான நாயக்கர்க செய்த சதி என்பதை ஒப்புக் கொண்டு இருக்க வேண்டும்.

* நாயக்கருக்கும்,மூவேந்தருக்கும் இடையே நடந்தது இனப்போராட்டம் அல்ல, மொழி போராட்டம். தமிழர்கள் ஆட்சி மொழியை இருந்த தமிழை தூக்கி எறிந்துவிட்டு, தனது முன்னோரான தெலுங்கர்கள் தெலுங்கை இங்கே ஆட்சி மொழியாக கொண்டு வந்தார்கள் என்பதையும் பெரியார் ஒப்புக் கொண்டு இருக்க வேண்டும். அதற்க்கு பரிகாரமாக மீண்டும் தமிழ் வழி அரசியலை இங்கே நிறுவ உதவுவேன் என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவர் தமிழை மென்மேலும் இழிவு படுத்தியதோடு அல்லாமல், ஆங்கிலமே தமிழனுக்கு சியர்ந்தது என்று தனது முன்னோர் செய்த அதே அயோக்கிய தனத்தை செய்தார்.

* தனது முன்னோர்கள் இங்கே இருந்த நால்வர்ண அமைப்பை புரிந்து கொள்ளாமல், தனது இஷ்டம் போல இங்கே (தமிழ் நாட்டில் மட்டும்), அதை குழப்பியதோடு மட்டும் இன்றி, மண்ணின் மைந்தர்களை தாழ்த்தியும், தனது உதவி செய்த கருங்காலிகளை தனக்கு அருகிலும் வைத்திருந்தார்கள் என்ற உண்மையையும் சொல்லி இருக்க வேண்டும்.

* அதுவரை இருந்த குடும்பு ஆட்சி(ஈழத்தை இங்கே நினைவு கூறுங்கள்) முறையை ஒழித்துவிட்டு , மீண்டும் இந்த மண்ணில் தமிழரின் ஆட்சி வந்துவிட கூடாது என்பதற்காக இங்கே இருந்த ஆட்சி முறையை 'பாளையகங்கலாக' பிரித்து, ஒவ்வொரு பாளையத்துக்கும் தனது படை வீரர்களை நிறுத்தி (ஈழத்தில் சிங்களன் செய்வது போல), தனது வடுக இன மக்களின் குடியேற்றத்தை அங்கே நிகழ்த்திவிட்டு, தமிழரின் உடமைகளை தெலுங்கர்களுக்கு கொடுத்தனர் என்பதை பெரியார் ஒப்பு கொண்டு இருக்க வேண்டும். (குறிப்பு: PSG போன்ற கல்வி நிறுவனம் நடத்தும் நாயுடுகளுக்கு கோவையில் பல ஆயிரம் ஏக்கர் நிலம் இன்றும் இருப்பது இப்படி தான்). அப்படி ஒப்பு கொள்வதோடு அல்லாமல், அந்த அந்த உடமைகளை அந்த அந்த மக்களுக்கு இயன்றவரை பாடுபட்டு திருப்பி தர ஆவண செய்வேன் என்று சொல்லி இருக்க வேண்டும். (செயராரோ இல்லையோ, அது அடுத்த பிரச்சனை). ஆனால் ஒருபோதும் பெரியார் இந்த உண்மைகளை சொன்னது இல்லையே ஏன்?

* ஆக தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்று பெரியார் சொல்லி வந்தாரே ஒழிய, யார் தாழ்த்தினார்கள் என்றும் சொல்லவில்லை. ஆலைய நுழைவு போராட்டம் நடத்தி, பறையர்,நாடார் சமூக மக்களை உள்ளே அழைத்து செல்வேன் என்று முழங்கிய பெரியார் அப்படி அவர்களை உள்ளே விடாமல் செய்த அந்த புண்ணியவான் யார் என்று தெரிந்தும் அவரின் மனசாட்சி உறுத்தாது ஏன்?

* ஒடுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வாங்கி தந்தவர், தமிழனுக்கு அறிவுக்கண்ணை திறந்து வைத்ததே பெரியார் என்றே வைத்து கொள்வோம். அவனிடம் இருந்து பறித்த உடமைகளை அவனுக்கு திருப்பி தருவது முற்போக்கு சிந்தனையா...? இல்லை 'அதெல்லாம் முடியாது. வேணும்னா இந்த வச்சிக்க' என்று எலும்புத்துண்டு ஒதுக்கீட்டை கொடுத்தது முற்போக்கு சிந்தனையா....?

* அந்த இட ஒதுக்கீட்ட்லாவது நேர்மை இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. எந்த தெலுங்கர்கள் தமிழனை வீல்த்தினார்களோ, அவர்களுக்கு குறிப்பிட தகுந்த அளவுக்கு இங்கே இட ஒதுக்கீடு இருக்கிறது. இது என்ன மண்ணாங்கட்டி முற்போக்கு சிந்தனை? இதை சிங்களன் செய்தால் அயோக்கிய தனம், பெரியார் கூட்டம் செய்தால் முற்போக்கு சிந்தனையா...?

ஏன் பெரியாரின் அரசியல் எல்லாம் மேலே சொன்ன எல்லா விசயங்களுக்கும் பார்ப்பனர் தான் காரணம், மூவேந்தர் தான் காரணம் என்று பழி போட்டு, தமிழன் தற்குறி என்று மட்டம் தட்டுவதிலேயே குறியாய் இருந்தார் என்பதற்கான அடிப்படை காரணம் அவரின் முன்னோர்களின் அயோக்கிய தனத்தை மறைப்பதோடு மட்டும் இன்றி, மென்மேலும் அவரின் சந்ததிகள் இங்கே தமிழனை மென்மேலும் ஒடுக்கி வைக்க தான் என்றி வேறு என்ன இருக்க முடியும்?

இன்றைய தமிழனின் சமூக சிக்கலுக்கு தீர்வு:


* இந்த நால்வர்ண சமூக கட்டமைப்பை உருவாக்கிய தமிழன் தான்,இன்று இருக்கும் சிக்கல்களுக்கும் தீர்வு சொல்ல முடியும். தீர்த்து வைக்கவும் முடியும். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

* இந்த திராவிடர்கள் குழப்பி வைப்பதற்கு முன்பு இருந்த தமிழ் சமூக கட்டமைப்பை இங்கே இருக்கும் தமிழ் சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரே நாளில் அது நடக்காது. பொறுமையாக தான் நடக்கும்.

* இங்கே இருக்கும் சாதி சிக்கல்களை தீர்த்து வையுங்கள் சாமி என்று 'திராவிடரிடம்' செல்வது வடிகட்டிய முட்டாள்தனம். ஏனெனில் தமிழனை வீழ்த்தி,அவனது சமூக கட்டமைப்பை குழப்பி, அவனை ஒழித்து கட்டுவதையே குறியாக கொண்டவர்கள் நாயக்கர்களின் வழி தொன்றிகலான திராவிட இயக்கங்கள்.

* திராவிடம் என்பது மாயை என்று தெரிந்தும், இந்த திராவிட இயக்கங்கள் மேலும் தமிழனை பிரித்தால 'ஆதி திராவிடர்' என்று அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டார்கள். இந்தன் விளைவாக, நாமெல்லாம் 'தாழ்ந்த சாதியினர், பிரபாகரன் பிள்ளைமார் போன்ற ஆதிக்க சாதியினர்' எனவே நாம் பிரபாகரனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க கூடாது, டக்ளசுக்கு தான் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் கிளம்பி மேலும் குழப்பி கொண்டு பிரிவினை பேசி வருகிறது.


இந்தியாவை ஆள்வது ஆரியம்.
அந்த ஆரியத்தை கண்ணும் கருத்துமாய் கட்டி காப்பது திராவிடம். இதன் அடிப்படை நோக்கம் நாயக்கர்களின் ஆட்சியை இங்கே தக்க வைப்பது தான். அதனால் தான் சாதிய்கள் எங்கிலும் இருந்தாலும் ஒரு மலையாளியால் அவனது பிரச்னைக்கு ஒன்று சேர முடிகிறது. இங்கே ஒரு தமிழன் ஆளும் போது, தமிழனும் ஒன்று சேர்வான். காவிரியில் தண்ணீர் ஒழுங்காய் வரும். முல்லை பெரியாரில் மலையாளி குதர்க்கம் செய்ய மாட்டான். தமிழக மீனவனை சிங்களன் தொட்டு கூட பார்க்க மாட்டான். என் கண் முன்னே இன்னொரு முள்ளி வாய்க்கால் நடக்காது.

திராவிட சூழ்ச்சியை புரிந்து கொள்வோம்.
தமிழராய் ஒன்று இணைவோம்.

--- முற்றும் ---



Sunday, May 5, 2013

பள்ளர்கள் தலித் அல்ல..!!!


தலித் வரையறைக்கு பொருந்தாத பள்ளர்கள்
-------------------------------------------------------------------
வரையறை#1: மாட்டு இறைச்சி உண்பவர் தலித்
முரண்பாடு: பள்ளர் மட்டும் அல்ல, உழவுத் தொழிலை ஆதிகாலம் தொட்டு செய்து வரும் எந்த சமூகமும் மாட்டு இறைச்சி உண்பது இல்லை.

வரையறை#2: தீண்டத்தகாதவர்கள் தலித், ஆலைய நுழைவு உரிமை அற்றவர்கள் தலித் 
முரண்பாடு: தமிழகத்தில் அதி முக்கிய கோவில்களின் முக்கியஸ்தர்களே பள்ளர்கள் தான்.
Ref: http://mallarchives.blogspot.in/2012_11_04_archive.html
(குறிப்பு: ஆலைய நுழைவு போராட்டம் நடத்தப்பட்டது பறையர்,நாடார் போன்ற மக்களுக்காக...!!! பள்ளர்களுக்கு அல்ல.)

வரையறை#3: பசுவை தெய்வமாக வணங்காதவர்கள் தலித்
முரண்பாடு: பசுவை பள்ளர்கள் தெய்வமாக வணங்குபவர்கள்.

வரையறை#4: இறந்தவர்களை புதைப்பவர்கள்
முரண்பாடு: பள்ளர்களின் குலத்தொழில் விவசாயம்

வரையறை#5: வறுமை உழல்வோர் தலித்
முரண்பாடு: பள்ளரை விட வறுமையில் உழலும் மற்ற சாதியினர் (உம்: நரிக்குறவர்) BC,MBC,FC பட்டியலில் இருக்கிறார்கள்

வரையறை#6 SC பட்டியலில் இருப்பவர்கள் தலித்
முரண்பாடு: பள்ளரின் பிரிவு (மூப்பர் BC , காலாடி BC , DC ,பண்ணாடி MBC )இல் இருக்கிறார்கள்
Ref: http://namvaralaaru.blogspot.in/2013/03/blog-post.html

#####
எனவே தலித் என்பது வர்கத்தையே குறித்தாலும், அதன் வரையறைக்குள் பொருந்தாத பள்ளர்களை, 'தலித்' என்று வழங்குவதன் மூலம், இந்த சமூகம் உண்மையான தலித் வர்க்கத்துக்கு தீங்கு இளைத்து வருகின்றனர். இது உண்மையில் கண்டிக்கத் தக்கது.

Friday, May 3, 2013

கலப்பு திருமணம்: முற்போக்கு சிந்தனையா? குரூர சிந்தனையா?



தமிழ் சமூகத்தில் சாதி:

குறிஞ்சி - குறவர்
முல்லை - இடையர்
மருதம் - பள்ளர்
நெய்தல் - பரதவர்
பாலை - எயினர்

இப்படி திணை வாரியாக உள்ள இனக்குழுக்கள் தான் கால ஓட்டத்தில் தங்களுக்குள் தேவையின் அடிப்படையில் கலந்து பல்வேறு அடையாளத்துடன் பல்வேறு இன குழுக்களை உருவாகினர். அந்த இனக்குழுக்கள் தான் இன்று இருக்கும் தமிழ் சாதிகள். உதாரணம்:

* 'கவுண்டர் என்ற பெயரே சுமார் 1000 வருடங்களுக்கு முந்திய இலக்கியங்களில்' இல்லை. -- பேரா.இரவி கவுண்டர், தொல்லியல் துறை, PSG கல்லூரி,கோவை
* கி.பி.12 ஆம் நூறாண்டுக்கு முன்பு தமிழில் 'பள்ளி' என்ற இனம் இல்லை.

இவற்றில் இருந்து, வெவேறு திணை மக்கள் தங்களுக்குள் தேவையின் பொருட்டு கலந்து வெவேறு இனக் குழுக்களை உருவாக்கி உள்ளது தெளிவு. இப்படி உருவான இனக் குழுக்களின் வாழ்வு முறை,பின்னணி,நிலைதன்மை என்பவை உறுதியானவை. காலம் கடந்தும் நிற்பவை. அவ்வாறு இனக்குழுக்கள் புதியதாய் உருவாகும் போது எந்த பிரச்சனையும் (அரிவாள் வெட்டு, கலவரம், ஊரை உடமையை எரித்தல்,கொலை) இல்லை.


    ஆனால் இன்று திராவிடம் என்ற பெயரில் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கும் வந்தேறி வடுகர்கள் முன்வைக்கும் 'கலப்பு திருமணம்' என்பது அவசர கதியில் வளர்க்கப்படும் 'பிராயிலர் கோழி'வகையை சார்ந்தது. அவர்களின் பிரச்சாரமே 'கீழ் சாதி ஆணுக்கும், மேல் சாதி பெண்ணுக்கும் திருமணம்' செய்து வைத்தால் சாதி ஒழிந்துவிடும். இதை பார்க்கும் போது, திராவிட கட்சிகள் அனைத்தும் ஏதோ 'கீழ் சாதி' மக்களுக்கு ஆதரவாக பேசுவது போல தோன்றும். ஆனால் உண்மை நிலை அது அல்ல. உதாரணம்:

* வட தமிழக மாநிலங்களில் வன்னியர் - பறையர் இடையேயும், தென் தமிழகத்தில் பள்ளர் - மறவர் இடையேயும் ஓயாத சாதி மோதல்கள் இருந்து வருகின்றன. வட மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட சாதி சார்பாக குரல் கொடுத்தும், ஊடகங்களில் ஊதி பெருக்கியும், அதை ஒரு மிக பெரிய அரசியலாக செய்து வரும் திராவிட கட்சிகள், இயக்கங்கள், ஆதிக்க சாதி என்று இவர்கள் சொல்லும் வன்னியரை (உண்மையில் இவர்களுக்கு தான் இழப்பு அதிகம்) சாதி வெறியர்கள் போல சித்தரிப்பதில் வெற்றியும் கண்டுள்ளனர். (மருத்துவர்  ராமதாஸ் அவர்களின் சுயநல அரசியலால் ஏற்ப்படும் பொது மக்கள் அசவுரியங்கள் இதில் சேராது. அது கண்டனத்துக்கு உரியது).

* ஒடுக்கப்பட்டோரின் காவலானாக விளங்கும் இந்த திராவிட இயக்கங்களின் உண்மை நிலை தென் தமிழகத்தில் தான் பல் இளிக்கிறது. இவர்கள் உண்மையில் யாருக்கு ஒத்துழைப்பு தந்து இருக்க வேண்டும்? இவர்கள் பார்வையில் கீழ் சாதி என்று சொல்லபப்டும் பள்ளருக்கு தானே? ஆனால், இவர்கள் ஆதிக்க சாதி என்று சொல்லப்படும் மறவர்களுக்கு தானே இன்றும் துணை நிற்கிறார்கள்.? மறவர் ஒட்டு என்பது அதிமுகவுக்கு சொந்தமானது என்பது எழுதப்படாத விதி. இருந்தாலும் திமுக,மதிமுக,தேமுதிக போன்ற ஓட்டுபொறுக்கி காட்சிகளுக்கு அங்கு என்ன வேலை? மறவர் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜையை அரசு விழாவாக்கி, அனைத்து ஊடங்களிலும் பிரச்சாரம் செய்து, தங்க கிரீடம் தருகிறோம், விமான நிலையத்துக்கு பெயர் வைக்க மத்தய அரசை வலியுறுத்துகிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் பரமகுடியையே ஸ்தம்பிக்க வைக்கும் சுமார் 4 லட்சத்துக்கும் மேலாக பள்ளர்கள் கூடும் இம்மானுவேல் சேகரன் அவர்களின் குருபூஜை நிகழ்வு எந்த ஊடத்திலும் வெளிவராமல் தடுக்கப்படுவதோ மட்டுமின்றி, ஏகப்பட்ட கெடுபிடிகளும் செய்யபடுகின்றன. பேருக்கு எல்லா கட்சி சார்பிலும் யாரவது ஒருவர் ஒப்புக்கு சப்பாணியாக வந்து அங்கு தலையை காட்டி விட்டு செல்வர். இது என்ன மாதிரியான முற்போக்கு சிந்தனை திராவிடர்களே? வட நாட்டில் ஒரு நிலை, தென் நாட்டில் ஒரு நிலை ஏன்? எப்போதெல்லாம் அங்கு மோதல் வருகிறதோ அப்போதெல்லாம் 'ஆதிக்க சாதிக்கும், தலித்துக்கும் மோதல்' என்று தான் பேசியும்,எழுதியும் வருகின்றனர். அதாவது இருவேறு வர்கத்தும் இடையே சண்டை என்று காட்டுவது தான் இந்த திராவிடர்களின் வேலை. கொஞ்சம் நெருங்கி சென்று பார்த்தால் மறவர் - பள்ளர் என்ற இரண்டு சாதிக்கு மட்டுமே அங்கு பிரச்சனை என்பது புலப்படும்.

* திராவிடர்கள் ஏதோ ஒட்டுமொத்த 'தேவர்' சமூக மக்களுக்கும் துணையாய் நிற்கிறார்கள் என்று தப்பு கணக்கு போட வேண்டாம். அங்கே தான் அவர்களின் உண்மையான கொடூர முகம் வெளிப்படுகிறது. கள்ளர்களின் விழாவான 'பெருங்காமநல்லோர் போராளிங்கள் மூக்கையா தேவர்' நினைவேந்தலுக்கோ, அகமுடையாரின் 'மருது சகோதரர்கள் குருபூஜைக்கோ', மறவர் முத்துராலிங்க தேவரின் குருபூஜை அளவுக்கு எந்த திராவிட கட்சியும் கண்டு கொள்வது இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது?

வட மாநிலத்தில் வன்னியருக்கு எதிராக பறையரை களம் இறக்குவதும், தென் மாவட்டங்களில் பள்ளருக்கு எதிராக மறவரை களம் இறக்குவதும் தான் இந்த திராவிட சக்திகளின் நோக்கம். இந்த அயோக்கியத் தனமான பின்னணியில் 'கலப்பு திருமண பிரச்சாரத்தை' நோக்கினால், திராவிட கட்சிகளின் உண்மை புலப்படும். என்ன அது?

* தமிழ் சாதிகள் தங்களுக்குள் எப்போதும் அடித்து கொண்டே இருக்க வேண்டும். பொன்,மண்,பெண் -- இதில் 'பெண்' என்பவள் மிகவும் sensitive விஷயம் என்பதால், அதில் கை வைக்கின்றனர் இந்த திராவிட சக்திகள். இதன் மூலம் இங்கே எப்போதும் பதட்டம் இருந்து கொண்ட இருக்க வேண்டும் என்பது தான் இவர்களின் எண்ணமே ஒழிய 'சாதி ஒழிப்பு' என்று சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக்.  'மறவரை வெட்டுங்கடா, மறவர் பெண்ணை கட்டுங்கடா' என்று பல ஆண்டுகளுக்கு முன்பு 'ஜான் பாண்டியன்' (தேவேந்திர சமூகம்) ஏதோ ஒரு சூழலில் பேசி இருந்தார். இதில் 'கலப்பு திருமண' குயுக்தி இல்லை. திட்டமிட்ட செயல் இல்லை. ஏதோ ஒரு கோபத்தின் காரணமாக அது வெறும் பேச்சோடு மட்டுமே நின்றுவிட்டது. --- இது தான் தானாகவே முன்வந்து செய்ய நினைத்தாலும், ஒரு இனக்குழு உருவாகதேவை இல்லாத காரணத்தால் அந்த கருத்து தவிடு பொடியாகும் என்பதற்கு ஒரு சரியான உதாரணம். ஆனால் உடும்பு பிடிக இந்த 'கலப்பு திருமண' விஷயம் திராவிட கட்சிகளால் எப்படி நடத்தப்படுகிறது?

"'கீழ் சாதி ஆண்' என் கையில் இருக்கான். அவனுக்கு நான் முழு சப்போர்ட்டு. மேல் சாதியான உன்னை பயமுறுத்த, அடக்கி வைக்க இந்த கீழ் சாதி ஆணை வைத்து உன் பெண் பெண்டுகளை அபகரிப்பதன் மூலம் உன் உடமைகள் மொத்தத்தையும் ஒழித்து விடுவேன்" என்பதை தவிர இந்த திராவிட சக்திகளுக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

தர்க்க ரீதியில் திராவிடர்களின் கலப்பு திருமணத்தின் நோக்கத்தை அலசினோம். இனி அதன் பின்னணியை வரலாற்று கண்ணோட்டத்தில் அலசுவோம்.

உண்மை நோக்கம்

நபர் - சாதி - இனம்
...............................................
பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கர் - பலிஜா நாயுடு - கன்னடர்
ராஜாஜி - தெலுங்கு பிராமணர்
மு.கருணாநிதி - சின்ன மேளம் - தெலுங்கர்
ஜெயலலிதா அம்மையார் - கன்னட அய்யங்கார்
வை கோபால்சாமி - நாயுடு - தெலுங்கர்
விஜயகாந்த் - நாயுடு - தெலுங்கர்

இவர்கள் யாரும் பிறப்பால்,மொழியால் தமிழர்கள் இல்லை. இவர்கள் தான் இன்றைக்கு தமிழ்நாட்டின் அரைசியல் தூண்கள். மேலே சொன்ன அனைவரும் ஏதாவது ஒரு வகையில் திராவிடத்தை சார்ந்தே வாழ்ந்தும்,தமிழகத்தில் அரசியல் செய்தும் வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.இதில் எவரிடமும் 'தமிழர்' என்ற அடையாளமோ, கட்சியின் பெயரோ கிடையாது.காரணம் இவர்களின் மேலே சொன்ன பின்னணி தான். இவர்களால் திராவிடம் பேசி தான் காலம் ஓட்ட முடியுமே தவிர,தமிழ் நாட்டில் தமிழர் என்று சொல்லி அரசியல் செய்ய முடியாது.

    பொதுவாக வந்தேறி வடுகர்கள் இன்று திராவிடம் என்ற பெயரில் தமிழனை ஆண்டு கொண்டு இருந்தாலும், எங்கோ யாரவது 'நீ யார் தமிழனை ஆள?' என்று இவர்களை பார்த்து கேட்டு கொண்டும், 'தமிழ் தேசியம்' பேசிக்கொண்டும், செயலாற்றி கொண்டும் தான் இருக்கிறார்கள். அதற்க்கு திராவிட சிகாமணிகள் கேட்கும் அடுத்த கேள்வியே 'தமிழன் யார்? அப்படி ஒரு இனமே கிடையாதே' என்பது தான். இப்படி கேட்கும் பல திராவிட சிகாமணிகள் 1947 ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று கோரிக்கை வைத்ததை மறந்துவிட்டார்கள் போலும். யார் தமிழர்? அவரின் அடையாளம் என்ன என்று தெரியாமலேயே நாடு அமைக்க இவர்கள் கிளம்பி விட்டார்கள் போலும். விந்தை தான். :-)

இப்படி பல பேர் பல நேரங்களில் 'தமிழர்,தமிழ் தேசியம்' என்ற பெயரில் இயங்கி கொண்டு இருப்பது, திராவிடர்களுக்கு எப்பவுமே ஒரு கிலி தான். எனவே   'தமிழன்' என்பதற்கு அடையாளமாய் இருக்கும் இங்கே இருக்கும் பல்வேறு இனக்குழுக்களை எப்படி அழிப்பது? (சிங்களனின் அதே 'கலப்பு மண' டெக்னிக் தான்). இனத்தை இன குழுக்களின் அடையாளத்தை அழிக்க கத்தி சண்டை எல்லாம் வேண்டாம், திட்டமிட்ட கலப்பே போதும்.

தமிழ் நாட்டில் இருக்கும் இருவேறு பெரும் இன குழுக்கள்

1. தமிழை மட்டுமே தாய்மொழியாய் கொண்டு பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கே வாழும் இனக் குழுக்கள் (பள்ளர்,கவுண்டர்,பறையர்,கோனார்,முக்குலத்தோர் etc ...).


2. சுமார் 400 வருடங்களுக்கு முன்பு இங்கே வந்தேறிகளாக வந்த வடுக சாதிகளான நாயக்கர்,நாயுடு,கன்னட பிராமின்,சக்கிலியர்,சின்ன மேளம்(இசை வேளாளர்) போன்ற 'தெலுங்கை,கன்னடத்தை' தாய் மொழியாக கொண்ட, இன்றும் அந்த மொழிகளையே பேசி வரும், தமிழர் அல்லாத இனக் குழுக்கள்

மேலே சொன்ன இரண்டு வகையான இனக்குழுக்களும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டால், 'தமிழன்' என்ற அடையாளம் நாளடைவில் நீர்த்து போய்விடும். பின்பு எவருமே 'நீ யார் என்ன ஆள' என்ற கேள்வியையே கேட்கமாட்டார்கள். அதற்க்கு அவசியமே இல்லாமேல் போய்விடும். திராவிடர்கள் தங்களது மேலாண்மையை தக்க வைத்து, தமிழனை நிரந்தரமாக அடிமையாக்கி விடுவார்கள்.


சாதி ஒழிப்பு: உண்மையில் செய்திருக்க வேண்டியது
* ஒவ்வொரு சாதிக்குமான வரலாறை அடையாளத்தை புரிந்து கொள்ளுதல்
* எந்த அடிப்படையில் ஒரு சாதி கீழ் என்றும், மேல் என்றும் பட்டியலிடுதல்
* அந்த அடிப்படையில் ஒவ்வொறாக களைதல்

(உதாரணம்: பறையர் சில இடங்களில் விவசாய கூலிகளாக,பறை அறைவோராக உள்ளனர். ஆனால் அவர்கள் தமிழ் சமூகத்தில் அறிவார்ந்த மக்களாக மட்டும் இன்றி, வேளாளர்களாகவும் இருந்து இருக்கின்றனர். அவர்களின் ஏற்றத்தாழ்வை போக்க, அவர்களின் நிலம் மற்றும் உடமைகள் அவர்களுக்கு திருப்பி தரப்பட்டாலே போதும்)

செய்து கொண்டு இருப்பது:
பறையர் சாதி ஆணுக்கும், வன்னியர்/கவுண்டர் சாதி பெண்களுக்கு 'கலப்பு திருமணம்' என்ற திட்டமிட்ட பிரச்சாரம். இது மென்மேலும் இந்த இனக்குழுக்களிடையே பிரிவையும் வெறுப்பையும் தான் விதைக்குமே தவிர, ஒரு போதும் இணக்கத்தையும், ஒற்றுமையையும் ஏற்ப்படுத்தாது.


கலப்பு திருமண பிரச்சார குழுவுக்கு தமிழரின் வேண்டுகோள்கள்:
* தமிழ் சமூகத்தில் காலத்திற்க்கேற்ப இனக்குழுக்கள் உருவாகி கொண்டு தான் இருக்கின்றன. அதன் ஆயுட்காலமும் அதன் நிலைப்புத் தமையும் (stability ) அதிகம். எனவே இங்கே புதிதாக, அதுவும் 'கீழ் சாதி ஆண், மேல் சாதி பெண்' என்று திட்டமிட்டு கலப்பு திருமணம் செய்து வைக்க நினைக்கும் உங்களின் உண்மையான நோக்கத்தை நீங்கள் விளக்க வேண்டும்.

* 'இல்லை இல்லை.கலப்பு மணத்தால் மட்டுமே சாதி ஒழியும்' என்று நீங்கள் விடாப்பிடியாக இருந்தால், இன்று கலப்பு மணத்தை முன் நின்று நடத்தும்,வந்தேறி வடுக திராவிட இயக்கங்கள், வந்தேறி வடுக திராவிட சாதிகளுக்கு இடையே (உதாரணமாக: ஆதிக்க சாதி நாயக்கர் பெண் , கீழ் சாதி அருந்ததியர் ஆண் ) முதலில் 'கலப்பு திருமணத்தை' முடுக்கி விட்டு, செய்து முடியுங்கள். அதன் பலனாக 'சாதி ஒழிப்பு' எந்த வகையில் வெற்றிகரமாக செய்யப்பட்டு விட்டது என்பதற்கான போதிய புள்ளி விவரங்களையும், அதனால் சமூகத்தில் ஏற்ப்பட்ட மறுமலர்ச்சியையும் பட்டியல் இடுங்கள்.

தமிழர்களாகிய நாங்கள் (பள்ளர்,பறையர்,வன்னியர்,கவுண்டர்,முக்குலத்தோர்,கோனார் etc ) தேவையின் பொருட்டு எங்களுக்குள் உருவாகிய இனக்குழு உருவாக்க கோட்பாட்டிற்கும், நீங்கள் கொடுக்கும் சமூக மறுமலர்ச்சி புள்ளி விவரங்களுக்கும் ஏதும் வேறுபாடோ, வித்தியாசமோ இருந்தால், அதை நாங்கள் திருத்தி கொள்கிறோம். பின்பு அந்த அடிப்படையில் எம்மில் இருந்து கால ஓட்டத்தில் வேறு வேறு இனக் குழுக்கள் உருவாகும் போது பயன்படுத்தி கொள்கிறோம். இதை விடுத்து, எடுத்த எடுப்பிலேயே எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல், எம்முள் பிரச்னையை தூண்டுபடி,'கலப்பு திருமண பிரச்சாரத்தை'  செய்து,செயலாற்ற வேண்டாம்.

பின் இணைப்பு
காதல் திருமணம், கலப்பு திருமணம்: வேறுபாடு
காதல் திருமணம் -- சாதி மதம் கடந்து இயல்பாய் மனிதருக்குள் தோன்றும் உணர்வு. இது பல ஆயிரம் காலமாக இங்கொன்றும் அன்கோருமாய் நடந்து வருகிறது. ஆனால் பெரும்பாலும் நடக்கும், மக்களால் விரும்பப்படும் திருமணங்கள் (அது ஆதிக்க சாதியை இருந்தாலும், கட்டு வாழ் பழங்குடி மக்களாய் இருந்தாலும்) பெற்றோரால் நிச்சயிக்கப் படும் திருமணங்களே.

கலப்பு திருமணம்: கீழ் சாதி ஆணுக்கும், மேல் சாதி பெண்ணுக்குமான திட்டமிட்ட திருமணங்கள்.




Tuesday, April 16, 2013

சிந்து சமவெளி நாகரிகத்தில் முருகன்

கீழ்க்காணும் படத்தில் இருப்பது சிந்து சமவெளியில் கண்டெடுக்கப்பட்ட கி.மு. இரண்டாம் நூற்றாண்டின் (அதாவது 2200 ஆண்டுகள் பழமை வாய்ந்த) நாணயம்.





சற்று உற்றுப் பாருங்கள், நாணயத்தில் பொறிக்கப்பட்டிருக்கும்.. வேல் கொண்டு போராடிய மறத் தமிழனின் ஏறு போன்ற அஞ்சா நெஞ்சம் கொண்ட தோற்றத்தை... அருகில் சேவலுடன் நிற்கிறார் அழகர். ஆம், முருகப் பெருமான்..

தகவல்:
தமிழர் மருதவேல் மூப்பர்


Monday, April 15, 2013

கடல் கொண்ட தென்னாடு என்ற குமரி’க்கண்ட ஆய்வில் ஏற்பட்டுள்ள புதிய தேவைகளும் புதிய கோணங்களும்


சிவ பாலசுப்ரமணி (கடல்ஆய்வு நிபுணர் கலிங்கா பாலு) அவர்களால் தென்மொழி இதழ் மார்ச்சு2012 இல் வெளிவந்த கட்டுரை

============================================
உலக அறிஞர்கள் கூறுகிற ‘இலெமூரியா’க் கண்டத்துடன் தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் கடல் கொள்ள அழிந்த நிலங்களை தொடர்புபடுத்தி, 1885இலேயே சி.டி.மெக்ளின், இலெமூரியா தென்னிந்தியாவாகிய தமிழ்நாட்டுடன் தொடர்புடையது என்று குறிப்பிட்டார்.

இதன் தொடர்ச்சியாகவே நீதிபதி நல்லசாமி அவர்கள் தமிழிலக்கியங்களில் குறிப்பிடப்படும் கடலில் மூழ்கிய பகுதிகளும் தான் இலெமூரியா என்று குறிப்பிடப்படுகிறது என்று 1898இல் உறுதிப்படுத்தினார்.

அவர் மதுரைத் தமிழ்ச்சங்கத்தின் தொடக்கக்கால உறுப்பினராவார்.

ஆங்கில அரசின் அறமன்ற நடுவராகப் பணியாற்றிய நல்லுசாமி அவர்கள், போப், மாக்சுமுல்லர் இவர்களுடன் நல்லதொடர்பில் இருந்தவர். போப் ஐயர், ‘என் கல்லறையின்மேல் ஒரு தமிழ் மாணவர் உறங்கிறார்’ என்று எழுதுங்கள் என்று எழுதியமடல் நல்லுசாமி அவர்களுக்கே. சைவ சித்தாந்தம், Divine Light என்று இருமொழிகளிலும் சிவனிய இதழ்களை நடத்தி வந்தார்.

மடகாசுக்கர், ஆசுத்திரேலியா, தென்னிந்தியாவாகிய தமிழ்நாடு ஆகிய நிலப்பரப்புத் தன்மைகளின் ஒற்றுமை, இவற்றில் படர்ந்திருக்கும் நிலத்திணைகள், வாழும் உயிரினங்கள், விலங்குகள் ஆகியவற்றின் ஒற்றுமைகளைக் காட்டி இப் பகுதிகளை இணைத்த ஒரு பெருநிலப்பரப்பு இருந்திருக்கவேண்டும் என்றும் அது பின்பு மூழ்கியிருக்க வேண்டும் என்ற கருதுகோள் உருவானது.

லெமூர் என்ற தேவாங்கு வாழும் மடகஸ்கார் மட்டும் அதன் படிமங்கள் கிடைத்த ஊட்டி மலைத்தொடர் மற்றும் புதிய பப்புவான் கினியா போன்ற இடங்களை ஒன்று இணைத்து மறைந்த ஆவி என்ற பொருளில் லெமுரிய என்ற பெயர் வந்தது

ஆனால் அண்மையில் நாட்டார் வழக்கியலில் லெமூர் என்கின்ற தேவாங்கை தமிழர் கடல் சார் பயணத்தில் மேற்கு திசையை காட்ட பயன் படுத்தினார் என்ற சொல்லும் நம்மை சிந்திக்க வைக்கிறேது

1912இல் செருமானிய அறிஞர் வெக்னர் உருவாக்கிய கண்டப் பெயர்ச்சிக்கோட்பாடு வந்தபின், இந்தியா என்ற நிலப்பரப்பே மடகாசுக்கர் பகுதியிலிருந்து பிரிந்து இப்போது ஆசியாவோடு இணைந்து மோதி இமயமலையை உருவாக்கியிருக்கிறது என்ற கருதுகோள் உருவானது.

இது நிகழ்ந்து பலகோடியாண்டுகள் ஆகிறபடியாலும் மாந்தன் தோன்றியது மிகவும் பிற்காலம் ஆனபடியாலும் கழக இலக்கியங்களின் காலம் அதனினும் மிகவும் பிற்காலமானதால் இதற்கும் தமிழிலக்கியங்களில் கூறப்படும் குமரிக்கண்ட கருத்திற்கும் தொடர்பில்லை என அறியப்படுகிறது.

லெமுரியா அல்லது குமரிக்கண்டம் , குமரிக்கண்டம் அல்லது கடல் கொண்ட தென்னாடு என்று எழுதிய அப்பாத்துரையாரின் கருத்துப்படியும், கால்டுவெல் மொழிஆய்வின்படியும் அதன்வழி தேவநேயப்பாவாணரின் மொழி அகழ்வாய்வின்வழியும் உருவான குமரிக்கண்டக் கொள்கையும் மாந்தன் தோற்றம் பரவல் கொள்கையும்
தமிழ் இலக்கியங்களில் கூறப்படும் குமரிக்கண்டமும் கண்டப்பெயர்ச்சிக் கோட்பாட்டில் அடங்கியதல்ல.

எலனா பிளவாத்ஸ்கி ஆரம்பித்து வைத்த லெமுரியா தொடர்ச்சி சுப்பிரமணியன் சாஸ்திரி அவர்களால் வரைபடம் போட பட்டு நம்பகத்தன்மையை இழந்தது

மேற்கூறிய குமரிக்கண்டம் இருந்திருப்பதற்கான சான்றுகள் எவையும் நிலவியல் சான்றுகளுடன் நிறுவப்படவில்லை.

1959-1964 இல் நடந்த இந்திய மாகடல் கடலாய்வின்வழி கண்டறிந்த மூழ்கிய அல்லது மேல்தெரிகின்ற மலைத்தொடர்களும் தொடர்ச்சியான தீவுகளும் ஒரு நிலப்பரப்பு விட்டு விட்டு தீவுகளாய் இருந்திருப்பதற்கான சான்றுகளாக இருப்பதால் கடலில் ஒரு நிலப்பரப்பு மூழ்கியிருக்கலாம் என நம்பப்பட்டது.

இப்போது எங்களுடைய கடலாய்வு நேரடியாகக் கடலில் களஆய்வு மேற்கொள்ளப் படுகிறது. இதுவரை கடல் கொண்ட தென்னாட்டின் ஆய்விற்கான எந்தக் கள ஆய்வும் எந்த அரசாலும் தொடர்ந்து மேற்கொள்ளப் படவில்லை.

குறைந்த அளவிலேயே ஆய்வுகள் மேற்கொள்ள பட்டன .

எனினும் எங்களுடைய சில ஆய்வுகளிலேயே பல செய்திகள் கிடைக்கத் தொடங்கியிருக்கின்றன.

அந்த ஆய்வின்படி இதுவரை உலகில் அதிக மீன்வளம் மிக்கப்பகுதிகளாக அறிவிக்கப்பட்ட பகுதிகள் ஆழம் குறைந்த கடல்பகுதிகளாகவே உள்ளன. அவற்றில் இந்தியப் பெருங்கடலில் ஆழம் குறைந்த பரப்புகள் கொண்ட பகுதிகள் ஆங்காங்கு நிறைய பகுதிகள் உள்ளன. குமரிக்கு நேர்கீழ் சற்றுத்தொலைவிலேயே 4500 சதுர மைல் கல் உள்ள பெரும்பரப்பு ஒரு சீரானதாக இல்லையெனினும் 140 மீட்டர் ஆழம் வரை காணப்படுகிறது.

அடுத்து மீன்வளம் நிறைந்த பகுதியாக உள்ள பகுதிகளின் புள்ளி விளக்கப்படி அவை மாந்தன் வாழ்ந்து மூழ்கிய இடிபாடுகள் நிறைந்த பகுதிகளாக உள்ளன. இவைதாம் மீன்கள் குஞ்சுபொரிப்பதற்கான வாய்ப்புகள் நிறைந்த பகுதிகள் எனவும் இனப்பெருக்கத்திற்கு ஏற்ற பகுதிகள் எனவும் ஆய்வுலகம் குறிப்பிடுகிறது.

குமரிக்கடலில் பெரும்பகுதி இவ்வாறு இடிபாடுகள் நிறைந்த தரைப்பகுதிகளாக இருப்பது நம் களஆய்வில் கண்டறியப்பட்டது. எனவேதான் அப்பகுதி மீன்வளத்தில் சிறந்த பகுதியாக உள்ளது என்பதும் தெரியவந்தது. 55 கி.மீ. தொலைவில் அதுபோன்ற தீவுகளும் ஆழங்குறைந்த திட்டுகளும் இருப்பது எங்கள் ஆய்வில் தெரியவந்தது. இலக்கத்தீவுப் பகுதியிலிருந்து மடகாசுகர் பகுதிக்கு இடையில் தொடர்ச்சியான தீவுகள் ஏராளமாக இருப்பது தெரியவருகிறது.

மலையுச்சிகளும், கண்டங்களும் மடகாசுகர் பகுதியைச் சுற்றி ஏராளமாக உள்ளன.

அவை தென்னிந்தியாவை நோக்கி உள்ளன. நம் நாட்டில் உள்ள சக்கரைவள்ளிக்கிழங்கு கீழைத் தீவுகளில் பரவலாகக் காணப்படுகிறது. அவை ‘குமரா’ என்று அழைக்கப்படுகிறது.

அது தமிழ்ப் பெயர் என்றே கருதப்படுகிறது. அந்த வள்ளிக்கிழங்கு கடலில் மிதந்தோ, அடித்துக்கொண்டோ போய் அத் தீவுகளில் தானாகப் பயிர் தோன்றியிருக்க முடியாது. அவற்றை நட்டு வளர்த்துத்தான் பயிர் செய்திருக்க முடியும். எனவே இவை கடற்செலவால் மட்டுமே பரவலாகச் சென்று பயிர்செய்திருக்கக் கூடும்.

கடற்செலவில் வள்ளிக்கிழங்குக்குத் தனிச்சிறப்புகள் உண்டு. அந்நாளில் கடற்செலவு உணவுக்கு மிகவும் ஏற்றது. கடற்செலவின்போது 6 மாதத்திற்குக் கெடாமல் கப்பலில் வைத்துக் காத்துக் கொள்ளமுடியும். இது கீழைத் தீவுகளிலிருந்து பசுபிக்கு கடலில் தென்அமெரிக்கா வரையுள்ள தீவுகளில் நிரம்பக் காணப்படுகிறது. பாய்மரக்கப்பலுக்கு முன்பே பலவகையில் நீரோட்டத்தை நம்பிக் கடல் செலவு செய்துள்ளனர் என்பது நம் ஆய்வில் தெரியவருகிறது. அதற்குரிய மிதவை, தெப்பம், ஓடம், தோணி, படகு, கட்டுமரம் என்று பலபெயர்களில் செலவுப் பொருள்கள் இருந்துள்ளன. ஒரியா, பர்மா, கடாரம், அந்தமான் போன்ற கரையோர ஊர்களில் இப்பெயர்கள் வழக்கில் உள்ளன என்பதுடன் ஊர்ப்பெயர்களும் தமிழ்ப் பெயர்களாக வழங்குகின்றன.
உலகின் 8,50,000 கி.மீ. கடற்கரையில் 3,50,000 கி.மீ. கடற்கரை மாந்தனின் கையகத்தில் உள்ளன. அவற்றில் பெரும்பாலும் தமிழர்களின் பதிவுகள் இருப்பது தெரியவருகிறது.

இவை ஆமைகளின் வலசை இடங்களாக இருப்பதுதான் இதற்குக்காரணம். ஆமைகளின் போக்குகளையும், செங்கால்நாரையின் போக்குகளையும் தமிழர்கள் நன்கு அறிந்திருந்தனர். ஆமைகள் கடலின் நீரோட்டத்தின் துணைகொண்டே உலகை வலம் வந்தன. அந் நீரோட்டங்களை ஆமைவழியே தொடர்ந்து தமிழர்களும் நன்கு அறிந்திருந்தனர்.

தமிழர்களின் திருமணங்களில் ‘முளைப்பாரி’ கொண்டு போவது ஒரு சடங்காக இருக்கும். இது உழவுத் தொடர்பானது. தங்களுக்குப் பயிற்சி மிகுந்த பயிர்களை மணமகள் தான் வாழப்போகும் புதிய இடத்திற்குச் சீராகக் கொண்டு சென்று அங்குப் பயிர்செய்வது என்ற வழக்கத்தின் தொடர்ச்சியே இந்த ‘முளைப்பாரி’ திருமணச்சடங்கு. உலகின் கடற்கரையோர குடியேற்ற மக்களிடமும் இந்த வழக்கம் பரவலாக உள்ளது.

இது தமிழர்களின் பரவல் முறையைப் பின்பற்றியதாகும்.
பெரியஅளவில் எந்த அரசும் ஆர்வம் காண்பிக்காத நிலையிலேயே கடல் கொண்ட தென்னாடு தொடர்பான ஆய்வு இருந்தது.

இது தொடங்கினால் அது தமிழர்களின் பண்டை வாழ்வை தொல்வரலாற்றை எடுத்துக்காட்டுவதாக முடியும் என்பதாகவே இந்த ஆய்வு திட்டமிட்டுப் புறக்கணிக்கப்பட்டு வந்தது.

இலக்கியத்தில் உள்ள கடல்கோள்கள், கண்டம் மூழ்குதல் என்ற செய்திகளெல்லாம் சிறிது காலத்திற்குமுன்வரை மிகைப்படுத்தப்பட்டதாகவே கொள்ளப்பட்டது.

அவற்றில் உண்மை இல்லையென்றும் பழம்பெருமை பேசுவதாகும் என்றே புறந்தள்ளப்பட்டிருந்தது.

2004இல் ஏற்பட்ட ஆழிப்பேரலையால் இதுபற்றி ஆய்வுகள் மீண்டும் புத்தாக்கம் பெற்றன. ஆழிப்பேரலை, எரிதிரை என்றெல்லாம் பெயர் மீட்டெடுத்து அதன் ஆய்வின் தேவையை ஆய்வுலகம் எடுத்துக்கொண்டது. மீண்டும் ஆழிப்பேரலை தோன்றுமா அது எத்தன்மையில் தோன்றும். இந்தியப் பெருங்கடலின் தன்மை என்ன? அக்கடலின் அடிப்பரப்பு எவ்வாறுள்ளது. இதுவரை கடல்கோள்கள் நடந்த்தா?

கடல்பின் வாங்கியதா?

114 கிலோ மீட்டர் வரை பல வேறு காலத்தில் கடல் உள்நுழைந்துள்ளதன் வரலாறு என்ன?
அரியலூர், குடியம், மானாமதுரை, பனக்குடி போன்று நடுநாட்டிலும் கடல் வந்து போனதற்கான சான்றுகள் உள்ளனவா என்பவற்றைத் தெரிந்துகொள்வது அதன் ஆய்விற்கு வழிவகுத்தது.

குமரி கண்ட ஆய்வின் தேவை இவ்வாறாக விரிவுபெற்றுள்ளது.

உலக நாகரிகத்தில் தமிழர் பரவல் தமிழ்மொழிப் பரவல் இவ்வாறு பலதுறை ஆய்வுகளும் ஒருங்கிணைக்கப்படவேண்டிய தேவை எழுந்துள்ளது.

தமிழகத்தின் 17 இலக்கம் ஆண்டுகட்குமுன் மாந்தன் நெருக்கமாக வாழ்ந்திருந்தது இன்று சாந்திபாப்பு போன்ற ஆய்வாளர்கள்வழி பழங்கற்கால ஆய்வுகள் உலகிற்கு எட்டியுள்ளது. உலகின் முகாமையான ஆய்விதழ்கள் அதை நுட்பமாக ஆராய்ந்து உறுதிசெய்து வெளியிடுகின்றன.

தென் கிழக்கு ஆசியாவில் அன்றைய மதராசில் பல்லாவரம் பகுதிகளிள் முதல் முதலாக கல்கோடாரிகள் எடுத்த சார் ராபர்ட் ப்ருசே பூட் மற்றும் கிங் அவர்களின் கடுமையான கள ஆய்வுகள் , உலக நாகரிகத்தில் நம்முடிய கற் கால மனிதர்கள் கூட்டமாக வாழ்ந்த பகுதிகளை அவர்கள் பயன படுத்திய கல் ஆயுதங்கள் இருந்த இடத்திற்கு மெட்ராஸ் கற் கால் மனிதர்களின் நாகரிகம் என்று பெயரிட்டது , பெரும்பானமையான் தமிழர்களுக்கு தெரியாது

நம் தொன்மையை முழுமையாய் வெளி படுத்த இன்னும் முறைப்படுத்தப்பட்ட கடல் ஆய்வுகள் முழமையாக தொடங்க வில்லை.

மேற்குத் தொடர்ச்சி, கிழக்குத் தொடர்ச்சி மலைகளில் பழம் ஆய்வுகள், நிலத்திணை ஆய்வுகள் இன்று யாரும் தொடாமல் உள்ளது. ஒவ்வொரு நிலத்திணையையும் தமிழ் மக்கள் எவ்வாறு பயன்படுத்தி வாழ்முறைக்குத் தக உருவாக்கியுள்ளார்கள் என்பதை உலகமே வியக்கிறது.

தென்னை, பனை, மா, பலா, முந்திரி ஆகியவற்றை இத்தனை வகையில் முழுவதுமாக பயன்படுத்த முடியுமா என்று வியக்கும் வகையில் இவர்கள் தங்கள் வாழ்முறையில் பயன்படுத்துகின்றனர்.
மீன்பிடிமக்கள், பாய்மரத்தைப் பயன்படுத்திய கடலோடி மக்களின் பலதொழில்நுட்பங்களை ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளவில்லை.

பறவைச் சிறகுகளின் தொழில்நுட்பத்தைக் கண்டு அதையப்பக் கப்பல்களில் பாய்மரங்களை அமைத்தவர்கள் தமிழர்களே. பாய்மரத்துணியை பருத்தியிலிருந்து நெய்து புளியங்கொட்டையும் பிற மாவுகளையும் கலந்து உருவாக்கும் தொழில்நுட்பத்தை இன்றளவும் செய்துவரும் ‘வாதிரி’ என்றழைக்கப்படும் தமிழ்ப்பிரிவினர் இன்றும் வாழ்கிறார்கள்.

விசைப்படகுகள், நீராவிக்கப்பல்கள் வந்தபின் பல்வேறு தொழில்நுட்பங்கள் அறிவியல் படுத்தப்படாமலேயே மறைந்துவிட்டன.

கீழைக்கடல் முழுவதும் கடல் மேலாண்மை செய்துள்ளதைத் தமிழ் மக்களே இன்றைக்கு நம்பவில்லை. கடாரம் கொண்டான் என்றால் அதுவெறும் பெருமை என்றே நம்ப மறுக்கிறார்கள்.
தமிழரின் மரபு விளையாட்டுகளான சேவல் சண்டை, மஞ்சுவிரட்டு, தாயம், பல்லாங்குழி போன்றவை உலக கடலோர ஊர்களில் இன்றும் நிலவுகின்றன.

உலகம் சுற்றிய தமிழக கடலோடி மீனவ மக்கள் இன்றைக்கும் கடற்கரைகளில் வாழ்ந்து வருகிறார்கள் .

அவர்களில் பலர் உலக எல்லைக் கடவு வைத்திருக்கிறார்கள். அவர்கள் வெறும் பாய்மரக்கப்பலில் அந்தமான், பர்மா, மலேசியா, இந்தோனேசியா, சீனா என்று வலம் வருவதைப் பெரியதாகக் கருதுவதேயில்லை. மிக எளிமையாக அதன் நுட்பங்களைத் தெரிந்து வைத்துள்ளனர்.

ஐரோப்பியர்கள் தமிழ்நாட்டிற்கு வரும்போது தென்னாப்பிரிக்காவைச் சுற்றிக்கொண்டு மடகாசுக்கர் வழியாகத்தான் முதலில் தென்னிந்தியாவை வந்தடைந்தனர்.

அவர்களுக்கு கட்டலான் என்ற பழங்குடிமக்களின் வரைபடம் துணையாக இருந்தது. ‘கட்டலான்’ என்ற இனமே கடலான் என்னும் தமிழ்ப்பெயர் கொண்ட தமிழ்சார் குடியேற்ற மக்களே என்பது அடுத்த ஆய்வு. தமிழ்நாட்டின் பழங்கல்வெட்டான மாங்குளம் கல்வெட்டில் ‘கடலன்வழுதி’ என்ற பாண்டிய மன்னனின் பெயர் இடம்பெற்றுள்ளது காணலாம்.
சுறாவேட்டை, முத்துக்குளித்தல், சங்குகுளித்தல், சிப்பியெடுத்தல் போன்ற தொழில்களின் மக்கள் இங்கு தமிழரிடை அழியா இனமாகத் தங்கள் அடையாளத் தொழிலிலேயே ஈடுபட்டுத் தனித்து வாழ்ந்துவருவதுபோல் பிலிப்பைன்சு, சீனா, சப்பான் நாடுகளின் கரையோரங்களில் பெரும்பான்மை மக்களின் தொடர்பில் இல்லாமல் இந்தத் தொழிலோடு வாழ்ந்து வருகின்றனர். ‘முத்து’ என்ற சொல்கூட அங்கு வழக்கில் உள்ளது.

தென்அமெரிக்கா முதல் கிழக்கு ஆப்பிரிக்காவிற்கு இடைப்பட்ட கீழைநாடுகளின் மொழிகள் ஒரே குடும்பத்தைச் சார்ந்தவை என்று வில்லியம் மார்சுடன் (William Marsden) குறிப்பிடுகிறார்.

ஆங்கிலேயர்கள் கடல் மட்டம் குறைந்த கடற்பரப்பிலேயே அதைத் தொடர்ந்து வந்தனர். மடகாசுக்கர்க்கும் தமிழகத்திற்கும் இடையில் ஆயிரக்கணக்கான தீவுகளும் கடல் ஆழம் குறைந்த திட்டுகளுமே இவர்களின் வருகைக்குத் துணைபுரிந்தது.

இவர்களில் வரவுகாலத்தில் கி.பி. 1350இல் கடலூழி தோன்றியிருந்ததால் கடல்மட்டம் சற்று
குறைந்து இருந்தது இவர்களின் வருகையின் போது அவர்களின் கவனத்தை ஈர்த்தது .

ஐரோப்பிய மக்களின் கடற்செலவு வரலாறு சென்னைப் பல்கலைக்கழக பழைய நூலகத்திலும் இலண்டன் நூலகத்திலும் 300க்கும் மேற்பட்ட நூல்களில் குறிப்புகளாகக் கிடைக்கின்றன.

எனவே கடல் கொண்ட தென்னாட்டின் மூழ்கிய நிலங்கள் தொடர்பான ஆய்வின் தேவைகள் புதிய கோணங்களில் தோன்றி பழைய வரலாறு என்ற நிலையிலிருந்து நிலப்பாதுகாப்பு என்ற வகையில் விரிந்துள்ளன.

அதன்வழி கடல் கொண்ட தென்னாடு வரலாறும் மூழ்காமல் மீட்டெடுக்க ஒருவாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

எங்கள் கள ஆய்வும் இவ்வழியில் வெற்றியுடன் எளிதே தொடர்கிறது என்பதைப் பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறோம்
============================================