பிராமணர்கள் உருவான வரலாற்று சுருக்கம்:
நிலையற்று சுற்றி திரிந்த முல்லை நிலத்தில் இருந்து மருத நிலத்துக்கு வந்த பின்னும், அந்த நாகரிகமற்ற கூறுகளை மாற்ற உருவானது தான் கோவில்கள். இறந்தவர் சார்பாக நடுகல். அந்த கல்லை சுற்றி ஒரு மண்டபம். பெரிய ஆளாக இருந்தால் ஒரு கோவில். இன்று இருக்கும் அனைத்து கோயில்களும் இறந்தவர்களின் சார்பாக இருக்கும் 'பள்ளி படை' (சமாதி)களே. அந்த அந்த கோவில்களில் பூசை செய்ய என்று பூசாரிகள் அதே மக்களிடம் இருந்து அமர்த்தப்பட்டனர். இந்த முன்னோர் வழிபாடு, பூசாரிகளை எல்லாம் நீங்கள் இன்றும் பார்க்கலாம். இந்த கால கட்டத்தில் பார்ப்பனர் என்றோ, பிராமணர் என்றோ ஓர் தனி குழுவோ, கூட்டமோ இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சிந்து சமவெளி நாகரிகம் உட்பட தமிழர் உருவாக்கிய சமூக நான்குபிரிவு கட்டமைப்பு பிறப்பின் அடிப்படையிலேயே இருந்து வந்துள்ளது.அதற்க்கான தேவை அன்று இருந்தது. அந்த நால்வர்ண பிரிப்பை இன்றுள்ள நிலையுடன் ஒப்பிட்டு பேசுவது மகா அபத்தம்.
ஒரு உதாரணம்:
வேளாளரின் பணி வேளாண்மை. மிக உயர்ந்த தொழில்நுட்பம் அது. ஒரு மீனவ பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அந்த மீனவ பெண்ணால் அங்கு வாழ்க்கை நடத்த முடியாது. இதனால் வேளாளர்கள் தங்களுக்குள்ளேயே பெண் கொடுத்து பெண் எடுத்தனர். இதை இன்றும் இருக்கும் பழங்குடி மக்களிடமும் காணலாம். ஆதிக்க சாதி என்று சொல்லும் இன்றைய சாதி மக்கள் தான் தங்களுக்குள் பெண் கொடுத்து பெண் எடுக்கின்ற அந்த விசயத்துக்கு காரணம் அவர்களின் 'ஆதிக்க சாதி வெறி' என்றால், காட்டில் வாழும் பழங்குடி மக்களும் அதையே தானே செகிறார்கள். அதற்க்கு பெயர் என்ன வெறி என்று சொல்ல முடியுமா...?
இவ்வாறாக, பிறப்பின் அடிப்படையில் அன்று தமிழரிடம் பிரிவுகள் இருந்தாலும், அவர்கள் தங்களுக்குள் எந்த பேதமும் ஏற்றத்தாழ்வும் இன்றி நிம்மதியாக வாழ்ந்தனர். இதற்க்கு சிந்துவெளி நாகரிகமே சாட்சி.
பிராமணர்களின் தோற்றத்திற்கு வருவோம். காலப்போக்கில் பல்லவர்கள் காலத்தில் தான் பிராமணர்கள் என்று ஒரு குழுவாக அந்த பூசாரிகள் அடையாள படுத்தப்படுகின்றனர். பின்னர் உருவான மற்ற பேரரசுகள், ஆங்கிலேயே ஆதிக்கம், மாக்ஸ் முல்லரின் 'ஆரிய தியரியை' தனதாக்கி கொண்டு பிராமணர்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்தல்,இந்து மதம் உருவாக்கம் என்று காலம் உருண்டோடி விட்டது.
'மாக்ஸ் முல்லர்' என்ற ஆங்கிலேயர் உருவாக்கிய இனவெறி கோட்பாடு 'ஆரியம்'. இதற்க்கு முன்பு ஆரியம் என்று கோட்பாடு எதுவும் கிடையாது.
கால்டுவெல்,எல்லிஸ் உருவாக்கியது திராவிட கோட்பாடு. இதற்க்கு முன்பு திராவிடன் என்ற யாரும் கிடையாது.
இனி பெரியாரின் கருத்துகளை பார்ப்போம்.
* பிராமணர்கள் ஆரியர்கள், அவர்கள் மத்திய கிழக்கில் இருந்து வந்த நாடோடி கூட்டம் என்று சொல்வது பெரியார் அல்ல. ஆங்கிலேயன். இதையே பெரியாரும் வழி மொழிகிறார். இது மிகப்பெரிய அபத்தம். பிராமணர் என்ற ஒருங்கிணைந்த கூட்டமே பல்லவர்கள் காலத்தில் தான் உருவாக்கப்பட்டது. அதற்க்கு முன்பு அப்படி எந்த ஒரு ஒருங்கிணைப்பும் இங்கே இருந்தது இல்லை. அப்படி ஒரு கூட்டம் இல்லாத போது, அவர்கள் தான் இங்கே நால்வர்ண பேதத்தை உருவாக்கினார்கள் என்பது அபத்தத்திலும் அபத்தம்.
* சிவனும்,முருகனும்,இந்திரனும் ஆரியக்கடவுள் என்று சொல்வது ஆங்கிலேயன். இதை அப்படியே வழிமொழிகிறார் பெரியார். இதுவும் அபத்தம். இன்றும் திருப்பரங்குன்றம் கோவிலில் 'இந்திரன் மகளான தெய்வானை-முருகனின்' திருமணம் முடிந்து மறுவீடு (மாமனார் வீடு) பெரியாரின் கூற்றுப்படி பிராமணர் மடமாக தானே இருக்கணும்? ஆனால், போவது 'பள்ளர் மடம்' ஆச்சே....? அவங்களுக்கு திருமணம் செய்து வைத்ததற்காக பிராமண தலைவருக்கா மரியாதையும்,பரிவட்டமும் கட்டுகிறார்கள் அங்கே? பள்ளருக்கு தானே கட்டுகிறார்கள்? திருச்செந்தூர்(முன்பு),பழனி என்று முருகனின் முக்கிய கோவில்கள் எங்கிலும் பள்ளருக்கு தானே முதல் மரியாதை? அப்படி என்றால் பள்ளர்கள் ஆரியர்களா?
Ref:
http://mallarchives.blogspot.in/2012/11/3874.html
* சிவன் ஆரியக்கடவுள் என்றால் கோவை பேரூர் பட்டிஸ்வரன் சிவன் பள்ளர் தானே? பிராமணரா அவர்? அப்படி என்றால் பள்ளர் ஆரியரா...?
Ref:
http://mallarchives.blogspot.in/2012/11/blog-post_6.html
* அம்பெத்க்காரே சொல்லிட்டார் என்று பெரியாரை அம்பேத்காரை முன்மொழிகிறார். அம்பேத்கார் என்ன சொன்னார்...? மேலே சொன்ன அதே ஆரிய கருத்தை ஏற்றுக் கொண்டு, நாமெல்லாம் புத்தரின் பிள்ளைகள் என்று சொன்னார். அப்படி என்றால் குறைந்த பட்சம் பெரியார் 'புத்தர்' யார் என்றாவது ஆராய்ந்து சொல்லி இருக்க வேண்டுமே? செய்தாரா...? அம்பேத்காரை வராலாற்று ஆசிரியராக ஏற்றுக் கொண்ட பெரியார் , பாவாணரை அவரின் ஆராய்ச்சியை ஒரு பொருட்டாக மதித்ததில்லையே. ஏன்? ஆனால், இன்று இருக்கும் தமிழ் அறிஞர்களுக்கு ஒரு வரலாற்று கையேடாக,ஆசானாக இருப்பது பாவாணர் தானே? அம்பேத்கார் இல்லையே....? எப்படி?
*தமிழன் தற்குறி, அவனுக்கு தலைவன் ஆக அவனுக்குள் யாருக்கு தகுதி கிடையாது என்று வாய்க்கு வந்ததை உளறி வைத்த பெரியார், சாக்ரடீஸ் என்று உலக நாகரிகம் பேசும் போதும், கிருத்தவ பாதிரிகளின் அறிவியலுக்கு எதிரான அட்டகாசத்தை எதிர்த்த அந்த நாட்டு அறிஞர்களை பேசும் போதும், தனது நாத்திக கருத்துக்கு மட்டும் வலு சேர்க்கும் வகையில் விசயங்களை பொருக்கி எடுத்து தான் பேசினாரே ஒழியக, அந்த கிரேக்க,ரோம் நாகரிகத்தில் தமிழன் இருந்ததை, அவர்களை ஆண்டதை எங்கையாவது சொல்லி இருக்கிறாரா...? அப்படி என்றால் அவர் பூத கண்ணாடி வைத்து எதை பார்த்தார்....? படித்தார்?
-----------
“The Sicambrian Franks, from whose female line the Merovingians emerged were associated with Grecian Arcadia before migrating to the Rhineland. As we have seen, they called themselves the Newmage —‘People of the New Covenant’, just as the Essenes of Qumran had once been known. It was the Arcadian legacy that was responsible for themysterious sea beast — the Bistea Neptunis — as symbolically defined in the Merovingian ancestry. The relevant sea-lord was King Pallas, a god of old Arcadia... The immortal sea-lord was said to be ‘'ever-incarnate in a dynasty of ancient kings’ whose symbol was a fish - as was the traditional symbol of Jesus.” (Laurence Gardner, Bloodline of the Holy Grail, pp. 166, 175)
----------
Ref: http://watch.pair.com/dragon-lineage.html
பெரியார் உண்மையில் செய்திருக்க வேண்டியது:
===============================================
* பகுத்தறி பகுத்தறி என்று சொல்லும் பெரியார் 'மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து' முதலில் வெளியேறி இங்கே இந்தியாவில் குடியேறி நாகரிகமான சமூகம் 'திராவிடர்' என்றும், பின்னர் அதே மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்த ஆரியர்கள் காட்டு மிராண்டி என்றும் சொல்லி 'மாக்ஸ் முல்லரின்' ஆரிய கோட்பாட்டை எப்படி ஒத்து கொண்டார்? முதலில் வந்தவன் நாகரிகமானவன் என்றும், பின்னர் வந்தவன் காட்டுமிராண்டி என்ற இயற்கைக்கும் சற்றும் ஒவ்வாத கோட்ப்பாட்டை பெரியார் வம்படியாக பிடித்து தொங்க வேண்டிய அவசியம் என்ன? திராவிட கோட்பாட்டை நிலை நிறுத்த தானே?
* நால்வர்ண பேதத்தை உருவாக்கியவர்கள் பிராமணர்கள் என்று ஆங்கிலேயன் சொன்ன ஆரிய தியரியை அப்படியே வழி மொழிந்தது முதல் தவறு. அதை உருவாக்கியதே தமிழர்கள் தான் என்றும், அது மூவேந்தர்களுக்கும் முன்பே பழம் காலம் இருந்தே தேவையின் பொருட்டு இங்கே இருந்து வந்துள்ளது என்பதையும் சொல்லி இருக்க வேண்டும். சொல்ல வில்லை.
* மூவேந்தர் காலம் வரை இங்கே தமிழ் சமூகங்களில் இல்லாமல் இருந்த தீண்டாமை சிக்கலை, ஒரு உதாரணாக 'பறையரை தொட்டால் தீட்டு, சானாரை பார்த்தாலே தீட்டு' என்றும், பள்ளரை இழிவாக சித்தரிக்க பள்ளு இலக்கியங்களை எழுதியதும் தனது முன்னோரான நாயக்கர்க செய்த சதி என்பதை ஒப்புக் கொண்டு இருக்க வேண்டும்.
* நாயக்கருக்கும்,மூவேந்தருக்கும் இடையே நடந்தது இனப்போராட்டம் அல்ல, மொழி போராட்டம். தமிழர்கள் ஆட்சி மொழியை இருந்த தமிழை தூக்கி எறிந்துவிட்டு, தனது முன்னோரான தெலுங்கர்கள் தெலுங்கை இங்கே ஆட்சி மொழியாக கொண்டு வந்தார்கள் என்பதையும் பெரியார் ஒப்புக் கொண்டு இருக்க வேண்டும். அதற்க்கு பரிகாரமாக மீண்டும் தமிழ் வழி அரசியலை இங்கே நிறுவ உதவுவேன் என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவர் தமிழை மென்மேலும் இழிவு படுத்தியதோடு அல்லாமல், ஆங்கிலமே தமிழனுக்கு சியர்ந்தது என்று தனது முன்னோர் செய்த அதே அயோக்கிய தனத்தை செய்தார்.
* தனது முன்னோர்கள் இங்கே இருந்த நால்வர்ண அமைப்பை புரிந்து கொள்ளாமல், தனது இஷ்டம் போல இங்கே (தமிழ் நாட்டில் மட்டும்), அதை குழப்பியதோடு மட்டும் இன்றி, மண்ணின் மைந்தர்களை தாழ்த்தியும், தனது உதவி செய்த கருங்காலிகளை தனக்கு அருகிலும் வைத்திருந்தார்கள் என்ற உண்மையையும் சொல்லி இருக்க வேண்டும்.
* அதுவரை இருந்த குடும்பு ஆட்சி(ஈழத்தை இங்கே நினைவு கூறுங்கள்) முறையை ஒழித்துவிட்டு , மீண்டும் இந்த மண்ணில் தமிழரின் ஆட்சி வந்துவிட கூடாது என்பதற்காக இங்கே இருந்த ஆட்சி முறையை 'பாளையகங்கலாக' பிரித்து, ஒவ்வொரு பாளையத்துக்கும் தனது படை வீரர்களை நிறுத்தி (ஈழத்தில் சிங்களன் செய்வது போல), தனது வடுக இன மக்களின் குடியேற்றத்தை அங்கே நிகழ்த்திவிட்டு, தமிழரின் உடமைகளை தெலுங்கர்களுக்கு கொடுத்தனர் என்பதை பெரியார் ஒப்பு கொண்டு இருக்க வேண்டும். (குறிப்பு: PSG போன்ற கல்வி நிறுவனம் நடத்தும் நாயுடுகளுக்கு கோவையில் பல ஆயிரம் ஏக்கர் நிலம் இன்றும் இருப்பது இப்படி தான்). அப்படி ஒப்பு கொள்வதோடு அல்லாமல், அந்த அந்த உடமைகளை அந்த அந்த மக்களுக்கு இயன்றவரை பாடுபட்டு திருப்பி தர ஆவண செய்வேன் என்று சொல்லி இருக்க வேண்டும். (செயராரோ இல்லையோ, அது அடுத்த பிரச்சனை). ஆனால் ஒருபோதும் பெரியார் இந்த உண்மைகளை சொன்னது இல்லையே ஏன்?
* ஆக தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்று பெரியார் சொல்லி வந்தாரே ஒழிய, யார் தாழ்த்தினார்கள் என்றும் சொல்லவில்லை. ஆலைய நுழைவு போராட்டம் நடத்தி, பறையர்,நாடார் சமூக மக்களை உள்ளே அழைத்து செல்வேன் என்று முழங்கிய பெரியார் அப்படி அவர்களை உள்ளே விடாமல் செய்த அந்த புண்ணியவான் யார் என்று தெரிந்தும் அவரின் மனசாட்சி உறுத்தாது ஏன்?
* ஒடுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வாங்கி தந்தவர், தமிழனுக்கு அறிவுக்கண்ணை திறந்து வைத்ததே பெரியார் என்றே வைத்து கொள்வோம். அவனிடம் இருந்து பறித்த உடமைகளை அவனுக்கு திருப்பி தருவது முற்போக்கு சிந்தனையா...? இல்லை 'அதெல்லாம் முடியாது. வேணும்னா இந்த வச்சிக்க' என்று எலும்புத்துண்டு ஒதுக்கீட்டை கொடுத்தது முற்போக்கு சிந்தனையா....?
* அந்த இட ஒதுக்கீட்ட்லாவது நேர்மை இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. எந்த தெலுங்கர்கள் தமிழனை வீல்த்தினார்களோ, அவர்களுக்கு குறிப்பிட தகுந்த அளவுக்கு இங்கே இட ஒதுக்கீடு இருக்கிறது. இது என்ன மண்ணாங்கட்டி முற்போக்கு சிந்தனை? இதை சிங்களன் செய்தால் அயோக்கிய தனம், பெரியார் கூட்டம் செய்தால் முற்போக்கு சிந்தனையா...?
ஏன் பெரியாரின் அரசியல் எல்லாம் மேலே சொன்ன எல்லா விசயங்களுக்கும் பார்ப்பனர் தான் காரணம், மூவேந்தர் தான் காரணம் என்று பழி போட்டு, தமிழன் தற்குறி என்று மட்டம் தட்டுவதிலேயே குறியாய் இருந்தார் என்பதற்கான அடிப்படை காரணம் அவரின் முன்னோர்களின் அயோக்கிய தனத்தை மறைப்பதோடு மட்டும் இன்றி, மென்மேலும் அவரின் சந்ததிகள் இங்கே தமிழனை மென்மேலும் ஒடுக்கி வைக்க தான் என்றி வேறு என்ன இருக்க முடியும்?
இன்றைய தமிழனின் சமூக சிக்கலுக்கு தீர்வு:
* இந்த நால்வர்ண சமூக கட்டமைப்பை உருவாக்கிய தமிழன் தான்,இன்று இருக்கும் சிக்கல்களுக்கும் தீர்வு சொல்ல முடியும். தீர்த்து வைக்கவும் முடியும். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.
* இந்த திராவிடர்கள் குழப்பி வைப்பதற்கு முன்பு இருந்த தமிழ் சமூக கட்டமைப்பை இங்கே இருக்கும் தமிழ் சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரே நாளில் அது நடக்காது. பொறுமையாக தான் நடக்கும்.
* இங்கே இருக்கும் சாதி சிக்கல்களை தீர்த்து வையுங்கள் சாமி என்று 'திராவிடரிடம்' செல்வது வடிகட்டிய முட்டாள்தனம். ஏனெனில் தமிழனை வீழ்த்தி,அவனது சமூக கட்டமைப்பை குழப்பி, அவனை ஒழித்து கட்டுவதையே குறியாக கொண்டவர்கள் நாயக்கர்களின் வழி தொன்றிகலான திராவிட இயக்கங்கள்.
* திராவிடம் என்பது மாயை என்று தெரிந்தும், இந்த திராவிட இயக்கங்கள் மேலும் தமிழனை பிரித்தால 'ஆதி திராவிடர்' என்று அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டார்கள். இந்தன் விளைவாக, நாமெல்லாம் 'தாழ்ந்த சாதியினர், பிரபாகரன் பிள்ளைமார் போன்ற ஆதிக்க சாதியினர்' எனவே நாம் பிரபாகரனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க கூடாது, டக்ளசுக்கு தான் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் கிளம்பி மேலும் குழப்பி கொண்டு பிரிவினை பேசி வருகிறது.
இந்தியாவை ஆள்வது ஆரியம்.
அந்த ஆரியத்தை கண்ணும் கருத்துமாய் கட்டி காப்பது திராவிடம். இதன் அடிப்படை நோக்கம் நாயக்கர்களின் ஆட்சியை இங்கே தக்க வைப்பது தான். அதனால் தான் சாதிய்கள் எங்கிலும் இருந்தாலும் ஒரு மலையாளியால் அவனது பிரச்னைக்கு ஒன்று சேர முடிகிறது. இங்கே ஒரு தமிழன் ஆளும் போது, தமிழனும் ஒன்று சேர்வான். காவிரியில் தண்ணீர் ஒழுங்காய் வரும். முல்லை பெரியாரில் மலையாளி குதர்க்கம் செய்ய மாட்டான். தமிழக மீனவனை சிங்களன் தொட்டு கூட பார்க்க மாட்டான். என் கண் முன்னே இன்னொரு முள்ளி வாய்க்கால் நடக்காது.
திராவிட சூழ்ச்சியை புரிந்து கொள்வோம்.
தமிழராய் ஒன்று இணைவோம்.
--- முற்றும் ---