Wednesday, May 29, 2013

+2 தேர்வில் வாங்குவது மதிப்பெண்ணா? முட்டைகளா?

ஒரு பல் மருத்துவர் கூறியவை.
"அந்த பழங்குடி மக்கள் அழைப்பின் பேரில் நான் அவர்கள் இருப்பிடத்துக்கு சென்றேன். அங்கு இருக்கும் சின்ன பிள்ளைகள் கடும் சிரமத்திற்கு மத்தியில் தான் கல்வி கற்று வருகின்றனர். அவர்கள் அவ்வளவாக படிப்பது இல்லை. படிப்பில் அவர்கள் சுமார் தான். ஆனால் அந்த சுற்று வட்டாரத்தில் ஒவ்வொரு செடியின் குணத்தையும், அதன் பயன் பாட்டையும் துல்லியமாக அந்த பகுதி சிறுவர் சிறுமியர் தெரிந்து வைத்து இருக்கின்றனர். அதை என்னிடம் விளக்கியும் காட்டினர். ஒரு மருத்துவரான எனக்கு அது பற்றி ஒன்றும் தெரிந்திருக்கவில்லை. எனக்கு ஆச்சரியமும், வெட்கமுமாக போய் விட்டது".
சொல்லுங்க.....இதில் யார் படிப்பாளி...? எது கல்வி?

KFC போன்ற துரித உணவு கூடங்களின் 'உணவு கையாளும் கோட்பாடு'. 
மரபணுவில் மாற்றம் செய்யப்பட கோழிகள்


* அவர்கள் தனியாக கோழி பண்ணைகள் போன்ற இத்தியாதிகளை நடத்துகின்றனர். அதில் இருந்தே கோழி இறைச்சி KFC க்களுக்கு சப்ளை செய்யப்படுகிறது.
* அவ்வாறு அவர்கள் ால் வளர்க்கப்படும் கோழிகள் இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. எனவே அந்த கோழிகள் தங்கள் வாழ் நாள் முழுவதும் இறகோ, முடியோ இல்லாமல் வெறும் தோலுடனே வளர்க்கப்படுகின்றன. இதற்க்கு காரணம் இறகை பிய்க்கும் செலவு மிச்சம்.
* ஒரு கோழி இன்னொரு கோழியை சேதப்படுத்தாமல் இருக்க, கோழி குஞ்சுகள் சிறியதாக இருக்கும் போதே அதன் அலகுகள் வெட்டப்படுகின்றன.
* ஊசியின் மூலமாக மட்டுமே அந்த கோழிகளுக்கு உணவு செலுத்தப்படுகிறது.
* அப்படி உருவாக்கப்படும் கோழிகள், இயந்திரம் கொண்டு கண்ணிமைக்கும் நேரத்தில் வெட்டப்பட்டு, KFC களுக்கு அனுப்பப்படுகின்றன.
Source: http://www.nellaieruvadi.com/article/article.asp?aid=36


இந்திய (பிராய்லர் கோழி வளர்க்கும்) கல்வி முறை
கடந்த இரண்டு நாட்களாக கோமளவல்லி ஜெயா அம்மையாரும் ,சின்னமேளம் கருணாநிதி அவர்களும் ஆங்கில வழி கல்வியா அல்லது தமிழ் வழி கல்வியா என்று தங்களுக்குள் மோதி கொள்கின்றனர்.அதிலும் இந்த சின்ன மேளத்தின் சத்தம் தான் தாங்கலை. ஏதோ தமிழ் சமூகத்தை காக்க வந்த கர்ண பரம்பரை என்பது போல தூள் பறத்துக்கிறார்.

      அய்யா கருணா அவர்களே, உங்கள் திராவிடம் இந்த தமிழ் மண்ணில் கடந்த 500 வருடங்களாக போட்ட பேயாட்டத்தில் எம் தமிழ் மொழி பட்ட பாடு எங்களுக்கு தானே தெரியும்.எங்கள் தாய் நாட்டிற்கு நிகராக நாங்கள் மதித்த, உலகமே போற்றி கொண்டாடியே எம் தமிழை ஆட்சி அதிகாரத்தில் இருந்து விரட்டி அடித்தது,கோவில் மொழியாக இருந்த எம் தமிழை 'நீச பாசை' என்று கோவிலில் இருந்து விரட்டி அடித்தது எல்லாம் யார் என்பதை நாங்கள் மறந்து விடுவோம் என்று மனப்பால் குடிக்கிறீரோ ?உலகிலேயே கல்வியிலும் அறிவிலும் சிறந்து விளங்கிய தமிழனை, உங்கள் காட்டு மிராண்டி கூட்டம் தானே இந்த இழி நிலைக்கு தள்ளியது?

    பழம் கதைகளை விடுங்கள் கருணா அவர்களே, உங்கள் ஆட்சில் அரசு பள்ளிகளை எல்லாம் திட்டமிட்டு தரம் தாழ்த்தி விட்டு, தனியார் ஆங்கில பள்ளிகளுக்கும், கல்லூரிகளுக்கும் தெலுங்கர்களாக பார்த்து பார்த்து அனுமதி கொடுத்தீர்களே..?அந்த (தெலுங்கு) கல்வி தந்தைகள் தானே இன்று தமிழ் நாட்டில் தமிழ் வழி கல்வியை எதிர்க்கிறார்கள்? அவர்களிடம் காட்ட வேண்டியது தானே உங்கள் தமிழ் பாசத்தை..!!! ஒருவேளை அம்மையார் கொண்டுவரும் அரசு ஆங்கில வழி பள்ளிகள் உம தெலுங்கு சகாக்கள் நடத்தி வரும் ஆங்கில வழி பள்ளிகளுக்கு வேட்டு வைத்து விடும் என்ற அச்சத்தில் தான் இன்று முண்டாசு கட்டி முறுக்கி கொண்டு நிற்க்கிரீரோ....? உங்கள் பசப்பும் வார்த்தையையும், நீலிக் கண்ணீரையும் நம்புவதற்கு நாங்கள் ஒன்றும் எங்கள் தாத்தா காலத்து அப்பாவிகள் அல்ல சின்ன மேளனாரே......!!! நீங்கள் தமிழருக்கு ஆதரவாக பேசுவதை உதிர்க்கும் ஒவ்வொரு வார்த்தைக்கு பின்னும் உள்ள அரசியலை துல்லியமாக புரிந்து வைத்திருக்கிறோம் நாங்கள்.

    அடுத்து கோமளவல்லி அம்மையாரிடம் வருவோம். மாண்பு மிகு அம்மையார் அவர்களே, எமக்கான கல்வியை எந்த மொழியில்  கொடுப்பது என்பதை பற்றி அப்புறம் முடிவு செய்யலாம். ஆனால் இந்த கல்வி திட்டமே ஒரு உதவாக்கரை கல்வி திட்டம் என்று உங்களுக்கு தெரியாதா... ?பாவம் உங்களுக்கு எப்படி தெரியும். 'வெள்ளியான் இருப்பவன் பொய் சொல்ல மாட்டான்' என்று ஆங்கிலத்தில் டஸ்சு புஸு என்று பேசுவதை பெருமையாக நினைப்பவர் ஆயிற்றே....?

    வெள்ளையன் மெக்காலே பிரபு, தனது சொந்த நாட்டில் இருந்து பெருவாரியான வெள்ளையர்களை இங்கே அரசு இயந்திரத்தில் பணி அமர்த்துவது சிரமம் என்று கருதி, தனக்கு அடிபணிந்து இயங்க கூடிய அளவில் இங்கேயே ஆட்களை உருவாக்க, அவர் வடிவமைத்தது தான் 'மெக்காலே கல்வி திட்டம்'. அந்த முட்டாள் தனமான, சுயமாய் சிந்திக்க வழி வகுக்காத கல்வி திட்டத்தை தான் இன்று வரை இம்மி பிசகாமல் இந்தியர்கள் பின்பற்றி வருகிறார்கள்.இந்த லட்சணத்தில் அந்த முட்டாள் தனமான கல்வி திட்டத்தை எந்த மொழியில் இருக்க வேண்டும் என்று உங்களுக்குள் சண்டை வேறு...? வெட்கம்.



     இந்த உதவாக்கரை கல்வி திட்டத்தை பள்ளி இறுதி வரை படிக்கும் மாணவன் அரை முட்டாளாகவும், கல்லூரி இறுதி வரை படித்தால் முழு முட்டாளாகும், அரை அடிமை புத்தி உள்ளவனாகவும் ஆகிறான். அதுவே இந்த குப்பை கல்வி திட்டத்தின் உயர்ந்த படிப்புகளாக உள்ள (பி.ஹெச்டி, ஐ.எ.எஸ், ஐ.பி.எஸ்) படிப்புகளை படித்து விட்டான் என்றால் அவன் அரசாங்கத்தின் முழு அடிமை குமாஸ்தாவாக அல்லவா வளர்த்தெடுக்கப் பட்டவன் ஆகிறான்...?தெரியாமல் தான் கேட்கிறோம். இந்த குப்பை கல்வி திட்டத்தை பின்பற்றி வந்த யாராவது (இந்தியாவில் இந்த அரசாங்க குமாஸ்தா வேலையை தவிர்த்து), பெரிய தலைவனாகவோ, அறிஞனாகவோ, ஒரு தொழில் அதிபராகவோ உருவானார் என்று காட்ட முடியுமா..?



    உலகில் பல நாடுகளில் பேராசிரியர்கள் தான் பல புரட்சிகளுக்கு காரணமாக இருப்பார்கள். ஆனால் இந்தியாவில் தான் இந்த பேராசிரியர்கள் 'புலம்பல் வாதிகளாக', அடிமையிலும் அடிமையாக, 'வெந்ததை தின்று விட்டு விதி வந்தால் மரணிக்கும்' ஜீவன்களாக உருவாகி கொண்டு இருக்கின்றனர்.

IIT முன்னாள் மாணவரான அரவிந்த் குப்தா போன்றோர் அறிவியலை எளிதாக பள்ளி மாணவர்களுக்கு ஒரு விளையாட்டு போல் சொல்லி கொடுக்கும் பொருட்டு, தனக்கு உதவியாளர்களாக 'எம்.எஸ்.சி' போன்ற உயர் படிப்பு படித்த மாணவர்களை துணைக்கு அமர்த்தி கொண்டார். அப்படி அமர்த்திய பின்பு தான் தெரிந்தது அந்த 'எம்.எஸ்.சி' மாணவர்களுக்கு தான் முதலில் அறிவியலின் அடிப்படைகளை கற்று கொடுக்க வேண்டும் என்று.
Source: http://www.arvindguptatoys.com/

".... The survey revealed that schools – even with good infrastructure, qualified teachers and high charging fees failed miserably in helping children make sense of the world. All the chalk-and-talk method, rote learning dulls the mind and does not help critical thinking so essential for living."
 -- Aravind Gupta. (Source: http://www.arvindguptatoys.com/arvindgupta/DH5.pdf)


இந்த சீரழிவுக்கு காரணம் இந்த மெக்காலே கல்வி திட்டம் தான். இதில் கொடுமை என்னவென்றால், இந்த கல்வி திட்டத்தை முன்வைத்த மெக்காலே பிரபு, 'இந்த கல்வி திட்டம் இந்தியர்களை ஆங்கிலேயே அடிமைகளாகவே வைத்திருக்கும்' என்று வெளிப்படையாக அறிவித்து விட்டே நடைமுறை படுத்துகிறார். இன்று நம்முடையே உள்ள தாழ்வு மனப்பான்மைக்கும், அவ நம்பிக்கைக்கும் மட்டுமல்ல, ஆங்கில மோகத்துக்கும் அடிப்படை காரணமே இந்த கல்வி திட்டம் தான்.

    கேள்வி கேக்கும் மாணவனை உருவாக்குவதே ஒரு உண்மையான கல்வித் திட்டத்தின் பணி. ஆனால் எதிர் கேள்வியே கேட்க தெரியாமல், யாரோ ஒருவர் தயாரித்து, யாரோ ஒருவர் சொல்லி கொடுக்கும் விசயங்களை, அந்த விஷயங்கள் கூட உண்மையா, பொய்யா என்று ஆராயாமல், ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண், முக்கியமான கேள்வி என்று உருப்போட்டு மனப்பாடம் செய்து, அதை பரீட்சை என்ற பெயரில் வாந்தி எடுத்து, அதில் வரும் மதிப்பெண்களையும், grade ஐயும் அளவுகோலை வைத்திருக்கும் இந்த கல்வி திட்டமும், படிப்பும் ஒரு படிப்பு தானா...? ஒரு மாணவன் தன வாழ்நாளில் பெரும் பகுதியை பள்ளியிலும், கலூரியிலும் தான் கழிக்கிறான். அவனுக்கு கொடுக்கும் கல்வியில் இத்துணை அயோக்கியத் தனம் தேவை தானா...? சிந்திப்பீர் மக்களே.

    இப்படி ஒரு முட்டாள் தனமான கல்வி திட்டத்தை கற்றதன் விளைவு தான், உலகின் நாகரிகங்களை உருவாக்கிய கடலோடி தமிழன் என்பதை மறைத்து விட்டு, இந்தியாவிற்கான கடல் வழியை கண்டு பிடித்தவர் 'வாஸ்கோடகாமா' என்று உளறிவைத்ததை அப்படியே ஏற்றுக் கொண்டு 'என்ன தான் இருந்தாலும் வெள்ளை காரன் வெள்ளை காரன் தான்' என்று மனதளவில் அடிமை தனத்தை ஒவ்வொரு விசயத்திலும் வளர்த்து கொண்டு இருக்கிறோம். கேள்வி கேட்டாலே அதிங்க பிரசங்கி என்றும், 'கையை கட்டு வாயை பொத்து' என்றும் கற்பனை வளத்துக்கு கடிவாளம் போடும் படிப்பு ஒரு படிப்பா....?

    தற்போது +2 தேர்வு முடிவுகள் வேறு வந்துவிட்டது. பேப்பரை பார்த்தாலே, 'வாங்க வாங்க கூறு மூணு ரூவா' என்கிற ரேஞ்சில் தங்கள் பள்ளியில் மதிப்பெண் சாதனைகளை பட்டியலிட்டு, கன ஜோராக கல்லா கட்ட தயாராகி வருகின்றனர் கல்வி தந்தை பள்ளிகள். 'செல்வா'வாகிய நான் விஜய் தொலைக் காட்சியில் பணி புரிந்த போது, நீயா நானா நிகழ்ச்சிக்காக 'கடந்த 15 வருடங்களில் +2 படிப்பில் மதிப்பெண் பெற்றவர்கள் தற்போது என்ன செய்கின்றனர்' என்று ஒரு ஆய்வை மேற்கொண்டோம். 99% பேர் நல்ல குமாஸ்தா வேலையில் காலத்தை ஒப்பேற்றி கொண்டு வருகின்றனர். மாறாக இவனுக்கு படிப்பே வராது என்று கண்டறியப்பட்ட, 1 சதவீதத்துக்கும் குறைவான மாணவர்கள் பலர் சமூகத்தில் அந்தஸ்து வகிக்கும் 'நட்சத்திரங்களாக' திகழ்கின்றனர். இந்த உண்மை தெரியாமல், தேர்வில் தோல்வி அடைந்த மாணவ செல்வங்கள் சிலர் தற்கொலை வேறு செய்து கொள்கின்றனர்.

    ஆகவே அம்மையார் அவர்களே, நீங்கள் மாற்ற வேண்டியது கல்வி போதிக்கும் மொழியை அல்ல, கல்வி திட்டத்தை தான்....!!! உள் ஒன்று வைத்து புறம் ஒன்று பேசும் கருனாக்களை போல் அல்லாமல், நீங்களாவது கொஞ்சம் சிந்தித்து செயலாற்றுங்கள். இறுதியாக, வெள்ளையாக இருப்பவன் எல்லாம் நல்லவனும் அல்ல, ஆங்கிலம் பேசுபவன் எல்லாம் அறிவாளியும் அல்ல. இதை தாங்கள் உணர்ந்து கொள்ளுங்கள். தமிழ் அன்னைக்கு சிலை வைப்பதெல்லாம் அப்புறம் இருக்கட்டும்.

--- செல்வா பாண்டியர் ---
தமிழர் வரலாற்று ஆய்வு நடுவம்

Friday, May 10, 2013

பெரியார்: சீர்திருத்தவாதி தானா?

பிராமணர்கள் உருவான வரலாற்று சுருக்கம்:
     நிலையற்று சுற்றி திரிந்த முல்லை நிலத்தில் இருந்து மருத நிலத்துக்கு வந்த பின்னும், அந்த நாகரிகமற்ற கூறுகளை மாற்ற உருவானது தான் கோவில்கள். இறந்தவர் சார்பாக நடுகல். அந்த கல்லை சுற்றி ஒரு மண்டபம். பெரிய ஆளாக இருந்தால் ஒரு கோவில். இன்று இருக்கும் அனைத்து கோயில்களும் இறந்தவர்களின் சார்பாக இருக்கும் 'பள்ளி படை' (சமாதி)களே. அந்த அந்த கோவில்களில் பூசை செய்ய என்று பூசாரிகள் அதே மக்களிடம் இருந்து அமர்த்தப்பட்டனர். இந்த முன்னோர் வழிபாடு, பூசாரிகளை எல்லாம் நீங்கள் இன்றும் பார்க்கலாம். இந்த கால கட்டத்தில் பார்ப்பனர் என்றோ, பிராமணர் என்றோ ஓர் தனி குழுவோ, கூட்டமோ இருந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் சிந்து சமவெளி நாகரிகம் உட்பட தமிழர் உருவாக்கிய சமூக நான்குபிரிவு கட்டமைப்பு பிறப்பின் அடிப்படையிலேயே இருந்து வந்துள்ளது.அதற்க்கான தேவை அன்று இருந்தது. அந்த நால்வர்ண பிரிப்பை இன்றுள்ள நிலையுடன் ஒப்பிட்டு பேசுவது மகா அபத்தம்.

ஒரு உதாரணம்:

வேளாளரின் பணி வேளாண்மை. மிக உயர்ந்த தொழில்நுட்பம் அது. ஒரு மீனவ பெண்ணை திருமணம் செய்து கொண்டால், அந்த மீனவ பெண்ணால் அங்கு வாழ்க்கை நடத்த முடியாது. இதனால் வேளாளர்கள் தங்களுக்குள்ளேயே பெண் கொடுத்து பெண் எடுத்தனர். இதை இன்றும் இருக்கும் பழங்குடி மக்களிடமும் காணலாம். ஆதிக்க சாதி என்று சொல்லும் இன்றைய சாதி மக்கள் தான் தங்களுக்குள் பெண் கொடுத்து பெண் எடுக்கின்ற அந்த விசயத்துக்கு காரணம் அவர்களின் 'ஆதிக்க சாதி வெறி' என்றால், காட்டில் வாழும் பழங்குடி மக்களும் அதையே தானே செகிறார்கள். அதற்க்கு பெயர் என்ன வெறி என்று சொல்ல முடியுமா...?

இவ்வாறாக, பிறப்பின் அடிப்படையில் அன்று தமிழரிடம் பிரிவுகள் இருந்தாலும், அவர்கள் தங்களுக்குள் எந்த பேதமும் ஏற்றத்தாழ்வும் இன்றி நிம்மதியாக வாழ்ந்தனர். இதற்க்கு சிந்துவெளி நாகரிகமே சாட்சி.

பிராமணர்களின் தோற்றத்திற்கு வருவோம். காலப்போக்கில் பல்லவர்கள் காலத்தில் தான் பிராமணர்கள் என்று ஒரு குழுவாக அந்த பூசாரிகள் அடையாள படுத்தப்படுகின்றனர். பின்னர் உருவான மற்ற பேரரசுகள், ஆங்கிலேயே ஆதிக்கம், மாக்ஸ் முல்லரின் 'ஆரிய தியரியை' தனதாக்கி கொண்டு பிராமணர்கள் அடுத்த கட்டத்துக்கு நகர்தல்,இந்து மதம் உருவாக்கம் என்று காலம் உருண்டோடி விட்டது.


'மாக்ஸ் முல்லர்' என்ற ஆங்கிலேயர் உருவாக்கிய இனவெறி கோட்பாடு 'ஆரியம்'. இதற்க்கு முன்பு ஆரியம் என்று கோட்பாடு எதுவும் கிடையாது.
கால்டுவெல்,எல்லிஸ் உருவாக்கியது திராவிட கோட்பாடு. இதற்க்கு முன்பு திராவிடன் என்ற யாரும் கிடையாது.


இனி பெரியாரின் கருத்துகளை பார்ப்போம்.
* பிராமணர்கள் ஆரியர்கள், அவர்கள் மத்திய கிழக்கில் இருந்து வந்த நாடோடி கூட்டம் என்று சொல்வது பெரியார் அல்ல. ஆங்கிலேயன். இதையே பெரியாரும் வழி மொழிகிறார். இது மிகப்பெரிய அபத்தம். பிராமணர் என்ற ஒருங்கிணைந்த கூட்டமே பல்லவர்கள் காலத்தில் தான் உருவாக்கப்பட்டது. அதற்க்கு முன்பு அப்படி எந்த ஒரு ஒருங்கிணைப்பும் இங்கே இருந்தது இல்லை. அப்படி ஒரு கூட்டம் இல்லாத போது, அவர்கள் தான் இங்கே நால்வர்ண பேதத்தை உருவாக்கினார்கள் என்பது அபத்தத்திலும் அபத்தம்.

* சிவனும்,முருகனும்,இந்திரனும் ஆரியக்கடவுள் என்று சொல்வது ஆங்கிலேயன். இதை அப்படியே வழிமொழிகிறார் பெரியார். இதுவும் அபத்தம். இன்றும் திருப்பரங்குன்றம் கோவிலில் 'இந்திரன் மகளான தெய்வானை-முருகனின்' திருமணம் முடிந்து மறுவீடு (மாமனார் வீடு) பெரியாரின் கூற்றுப்படி பிராமணர் மடமாக தானே இருக்கணும்? ஆனால், போவது 'பள்ளர் மடம்' ஆச்சே....? அவங்களுக்கு திருமணம் செய்து வைத்ததற்காக பிராமண தலைவருக்கா மரியாதையும்,பரிவட்டமும் கட்டுகிறார்கள் அங்கே? பள்ளருக்கு தானே கட்டுகிறார்கள்? திருச்செந்தூர்(முன்பு),பழனி என்று முருகனின் முக்கிய கோவில்கள் எங்கிலும் பள்ளருக்கு தானே முதல் மரியாதை? அப்படி என்றால் பள்ளர்கள் ஆரியர்களா?
Ref: http://mallarchives.blogspot.in/2012/11/3874.html

* சிவன் ஆரியக்கடவுள் என்றால் கோவை பேரூர் பட்டிஸ்வரன் சிவன் பள்ளர் தானே? பிராமணரா அவர்? அப்படி என்றால் பள்ளர் ஆரியரா...?
Ref: http://mallarchives.blogspot.in/2012/11/blog-post_6.html

* அம்பெத்க்காரே சொல்லிட்டார் என்று பெரியாரை அம்பேத்காரை முன்மொழிகிறார். அம்பேத்கார் என்ன சொன்னார்...? மேலே சொன்ன அதே ஆரிய கருத்தை ஏற்றுக் கொண்டு, நாமெல்லாம் புத்தரின் பிள்ளைகள் என்று சொன்னார். அப்படி என்றால் குறைந்த பட்சம் பெரியார் 'புத்தர்' யார் என்றாவது ஆராய்ந்து சொல்லி இருக்க வேண்டுமே? செய்தாரா...? அம்பேத்காரை வராலாற்று ஆசிரியராக ஏற்றுக் கொண்ட பெரியார் ,  பாவாணரை அவரின் ஆராய்ச்சியை ஒரு பொருட்டாக மதித்ததில்லையே. ஏன்? ஆனால், இன்று இருக்கும் தமிழ் அறிஞர்களுக்கு ஒரு வரலாற்று கையேடாக,ஆசானாக இருப்பது பாவாணர் தானே? அம்பேத்கார் இல்லையே....? எப்படி?

*தமிழன் தற்குறி, அவனுக்கு தலைவன் ஆக அவனுக்குள் யாருக்கு தகுதி கிடையாது என்று வாய்க்கு வந்ததை உளறி வைத்த பெரியார், சாக்ரடீஸ் என்று உலக நாகரிகம் பேசும் போதும், கிருத்தவ பாதிரிகளின் அறிவியலுக்கு எதிரான அட்டகாசத்தை எதிர்த்த அந்த நாட்டு அறிஞர்களை பேசும் போதும், தனது நாத்திக கருத்துக்கு மட்டும் வலு சேர்க்கும் வகையில் விசயங்களை பொருக்கி எடுத்து தான் பேசினாரே ஒழியக, அந்த கிரேக்க,ரோம் நாகரிகத்தில் தமிழன் இருந்ததை, அவர்களை ஆண்டதை எங்கையாவது சொல்லி இருக்கிறாரா...? அப்படி என்றால் அவர் பூத கண்ணாடி வைத்து எதை பார்த்தார்....? படித்தார்?
-----------
“The Sicambrian Franks, from whose female line the Merovingians emerged were associated with Grecian Arcadia before migrating to the Rhineland. As we have seen, they called themselves the Newmage —People of the New Covenant, just as the Essenes of Qumran had once been known. It was the Arcadian legacy that was responsible for themysterious sea beast — the Bistea Neptunis — as symbolically defined in the Merovingian ancestry. The relevant sea-lord was King Pallas, a god of old Arcadia... The immortal sea-lord was said to be 'ever-incarnate in a dynasty of ancient kings whose symbol was a fish - as was the traditional symbol of Jesus.” (Laurence Gardner, Bloodline of the Holy Grail, pp. 166, 175)
----------
Ref: http://watch.pair.com/dragon-lineage.html


பெரியார் உண்மையில் செய்திருக்க வேண்டியது:
===============================================
* பகுத்தறி பகுத்தறி என்று சொல்லும் பெரியார் 'மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து' முதலில் வெளியேறி இங்கே இந்தியாவில் குடியேறி நாகரிகமான சமூகம் 'திராவிடர்' என்றும், பின்னர் அதே மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வந்த ஆரியர்கள் காட்டு மிராண்டி என்றும் சொல்லி 'மாக்ஸ் முல்லரின்' ஆரிய கோட்பாட்டை எப்படி ஒத்து கொண்டார்? முதலில் வந்தவன் நாகரிகமானவன் என்றும், பின்னர் வந்தவன் காட்டுமிராண்டி என்ற இயற்கைக்கும் சற்றும் ஒவ்வாத கோட்ப்பாட்டை பெரியார் வம்படியாக பிடித்து தொங்க வேண்டிய அவசியம் என்ன? திராவிட கோட்பாட்டை நிலை நிறுத்த தானே?

* நால்வர்ண பேதத்தை உருவாக்கியவர்கள் பிராமணர்கள் என்று ஆங்கிலேயன் சொன்ன ஆரிய தியரியை அப்படியே வழி மொழிந்தது முதல் தவறு. அதை உருவாக்கியதே தமிழர்கள் தான் என்றும், அது மூவேந்தர்களுக்கும் முன்பே பழம் காலம் இருந்தே தேவையின் பொருட்டு இங்கே இருந்து வந்துள்ளது என்பதையும் சொல்லி இருக்க வேண்டும். சொல்ல வில்லை.

* மூவேந்தர் காலம் வரை இங்கே தமிழ் சமூகங்களில் இல்லாமல் இருந்த தீண்டாமை சிக்கலை, ஒரு உதாரணாக 'பறையரை தொட்டால் தீட்டு, சானாரை பார்த்தாலே தீட்டு' என்றும், பள்ளரை இழிவாக சித்தரிக்க பள்ளு இலக்கியங்களை எழுதியதும் தனது முன்னோரான நாயக்கர்க செய்த சதி என்பதை ஒப்புக் கொண்டு இருக்க வேண்டும்.

* நாயக்கருக்கும்,மூவேந்தருக்கும் இடையே நடந்தது இனப்போராட்டம் அல்ல, மொழி போராட்டம். தமிழர்கள் ஆட்சி மொழியை இருந்த தமிழை தூக்கி எறிந்துவிட்டு, தனது முன்னோரான தெலுங்கர்கள் தெலுங்கை இங்கே ஆட்சி மொழியாக கொண்டு வந்தார்கள் என்பதையும் பெரியார் ஒப்புக் கொண்டு இருக்க வேண்டும். அதற்க்கு பரிகாரமாக மீண்டும் தமிழ் வழி அரசியலை இங்கே நிறுவ உதவுவேன் என்று சொல்லி இருக்க வேண்டும். ஆனால் அவர் தமிழை மென்மேலும் இழிவு படுத்தியதோடு அல்லாமல், ஆங்கிலமே தமிழனுக்கு சியர்ந்தது என்று தனது முன்னோர் செய்த அதே அயோக்கிய தனத்தை செய்தார்.

* தனது முன்னோர்கள் இங்கே இருந்த நால்வர்ண அமைப்பை புரிந்து கொள்ளாமல், தனது இஷ்டம் போல இங்கே (தமிழ் நாட்டில் மட்டும்), அதை குழப்பியதோடு மட்டும் இன்றி, மண்ணின் மைந்தர்களை தாழ்த்தியும், தனது உதவி செய்த கருங்காலிகளை தனக்கு அருகிலும் வைத்திருந்தார்கள் என்ற உண்மையையும் சொல்லி இருக்க வேண்டும்.

* அதுவரை இருந்த குடும்பு ஆட்சி(ஈழத்தை இங்கே நினைவு கூறுங்கள்) முறையை ஒழித்துவிட்டு , மீண்டும் இந்த மண்ணில் தமிழரின் ஆட்சி வந்துவிட கூடாது என்பதற்காக இங்கே இருந்த ஆட்சி முறையை 'பாளையகங்கலாக' பிரித்து, ஒவ்வொரு பாளையத்துக்கும் தனது படை வீரர்களை நிறுத்தி (ஈழத்தில் சிங்களன் செய்வது போல), தனது வடுக இன மக்களின் குடியேற்றத்தை அங்கே நிகழ்த்திவிட்டு, தமிழரின் உடமைகளை தெலுங்கர்களுக்கு கொடுத்தனர் என்பதை பெரியார் ஒப்பு கொண்டு இருக்க வேண்டும். (குறிப்பு: PSG போன்ற கல்வி நிறுவனம் நடத்தும் நாயுடுகளுக்கு கோவையில் பல ஆயிரம் ஏக்கர் நிலம் இன்றும் இருப்பது இப்படி தான்). அப்படி ஒப்பு கொள்வதோடு அல்லாமல், அந்த அந்த உடமைகளை அந்த அந்த மக்களுக்கு இயன்றவரை பாடுபட்டு திருப்பி தர ஆவண செய்வேன் என்று சொல்லி இருக்க வேண்டும். (செயராரோ இல்லையோ, அது அடுத்த பிரச்சனை). ஆனால் ஒருபோதும் பெரியார் இந்த உண்மைகளை சொன்னது இல்லையே ஏன்?

* ஆக தாழ்த்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் என்று பெரியார் சொல்லி வந்தாரே ஒழிய, யார் தாழ்த்தினார்கள் என்றும் சொல்லவில்லை. ஆலைய நுழைவு போராட்டம் நடத்தி, பறையர்,நாடார் சமூக மக்களை உள்ளே அழைத்து செல்வேன் என்று முழங்கிய பெரியார் அப்படி அவர்களை உள்ளே விடாமல் செய்த அந்த புண்ணியவான் யார் என்று தெரிந்தும் அவரின் மனசாட்சி உறுத்தாது ஏன்?

* ஒடுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வாங்கி தந்தவர், தமிழனுக்கு அறிவுக்கண்ணை திறந்து வைத்ததே பெரியார் என்றே வைத்து கொள்வோம். அவனிடம் இருந்து பறித்த உடமைகளை அவனுக்கு திருப்பி தருவது முற்போக்கு சிந்தனையா...? இல்லை 'அதெல்லாம் முடியாது. வேணும்னா இந்த வச்சிக்க' என்று எலும்புத்துண்டு ஒதுக்கீட்டை கொடுத்தது முற்போக்கு சிந்தனையா....?

* அந்த இட ஒதுக்கீட்ட்லாவது நேர்மை இருக்கிறதா என்றால் அதுவும் இல்லை. எந்த தெலுங்கர்கள் தமிழனை வீல்த்தினார்களோ, அவர்களுக்கு குறிப்பிட தகுந்த அளவுக்கு இங்கே இட ஒதுக்கீடு இருக்கிறது. இது என்ன மண்ணாங்கட்டி முற்போக்கு சிந்தனை? இதை சிங்களன் செய்தால் அயோக்கிய தனம், பெரியார் கூட்டம் செய்தால் முற்போக்கு சிந்தனையா...?

ஏன் பெரியாரின் அரசியல் எல்லாம் மேலே சொன்ன எல்லா விசயங்களுக்கும் பார்ப்பனர் தான் காரணம், மூவேந்தர் தான் காரணம் என்று பழி போட்டு, தமிழன் தற்குறி என்று மட்டம் தட்டுவதிலேயே குறியாய் இருந்தார் என்பதற்கான அடிப்படை காரணம் அவரின் முன்னோர்களின் அயோக்கிய தனத்தை மறைப்பதோடு மட்டும் இன்றி, மென்மேலும் அவரின் சந்ததிகள் இங்கே தமிழனை மென்மேலும் ஒடுக்கி வைக்க தான் என்றி வேறு என்ன இருக்க முடியும்?

இன்றைய தமிழனின் சமூக சிக்கலுக்கு தீர்வு:


* இந்த நால்வர்ண சமூக கட்டமைப்பை உருவாக்கிய தமிழன் தான்,இன்று இருக்கும் சிக்கல்களுக்கும் தீர்வு சொல்ல முடியும். தீர்த்து வைக்கவும் முடியும். இதை முதலில் புரிந்து கொள்ள வேண்டும்.

* இந்த திராவிடர்கள் குழப்பி வைப்பதற்கு முன்பு இருந்த தமிழ் சமூக கட்டமைப்பை இங்கே இருக்கும் தமிழ் சமூகங்கள் புரிந்து கொள்ள வேண்டும். ஒரே நாளில் அது நடக்காது. பொறுமையாக தான் நடக்கும்.

* இங்கே இருக்கும் சாதி சிக்கல்களை தீர்த்து வையுங்கள் சாமி என்று 'திராவிடரிடம்' செல்வது வடிகட்டிய முட்டாள்தனம். ஏனெனில் தமிழனை வீழ்த்தி,அவனது சமூக கட்டமைப்பை குழப்பி, அவனை ஒழித்து கட்டுவதையே குறியாக கொண்டவர்கள் நாயக்கர்களின் வழி தொன்றிகலான திராவிட இயக்கங்கள்.

* திராவிடம் என்பது மாயை என்று தெரிந்தும், இந்த திராவிட இயக்கங்கள் மேலும் தமிழனை பிரித்தால 'ஆதி திராவிடர்' என்று அடுத்த கட்டத்துக்கு சென்று விட்டார்கள். இந்தன் விளைவாக, நாமெல்லாம் 'தாழ்ந்த சாதியினர், பிரபாகரன் பிள்ளைமார் போன்ற ஆதிக்க சாதியினர்' எனவே நாம் பிரபாகரனுக்கு ஒத்துழைப்பு கொடுக்க கூடாது, டக்ளசுக்கு தான் ஆதரவு கொடுக்க வேண்டும் என்று ஒரு கூட்டம் கிளம்பி மேலும் குழப்பி கொண்டு பிரிவினை பேசி வருகிறது.


இந்தியாவை ஆள்வது ஆரியம்.
அந்த ஆரியத்தை கண்ணும் கருத்துமாய் கட்டி காப்பது திராவிடம். இதன் அடிப்படை நோக்கம் நாயக்கர்களின் ஆட்சியை இங்கே தக்க வைப்பது தான். அதனால் தான் சாதிய்கள் எங்கிலும் இருந்தாலும் ஒரு மலையாளியால் அவனது பிரச்னைக்கு ஒன்று சேர முடிகிறது. இங்கே ஒரு தமிழன் ஆளும் போது, தமிழனும் ஒன்று சேர்வான். காவிரியில் தண்ணீர் ஒழுங்காய் வரும். முல்லை பெரியாரில் மலையாளி குதர்க்கம் செய்ய மாட்டான். தமிழக மீனவனை சிங்களன் தொட்டு கூட பார்க்க மாட்டான். என் கண் முன்னே இன்னொரு முள்ளி வாய்க்கால் நடக்காது.

திராவிட சூழ்ச்சியை புரிந்து கொள்வோம்.
தமிழராய் ஒன்று இணைவோம்.

--- முற்றும் ---



Sunday, May 5, 2013

பள்ளர்கள் தலித் அல்ல..!!!


தலித் வரையறைக்கு பொருந்தாத பள்ளர்கள்
-------------------------------------------------------------------
வரையறை#1: மாட்டு இறைச்சி உண்பவர் தலித்
முரண்பாடு: பள்ளர் மட்டும் அல்ல, உழவுத் தொழிலை ஆதிகாலம் தொட்டு செய்து வரும் எந்த சமூகமும் மாட்டு இறைச்சி உண்பது இல்லை.

வரையறை#2: தீண்டத்தகாதவர்கள் தலித், ஆலைய நுழைவு உரிமை அற்றவர்கள் தலித் 
முரண்பாடு: தமிழகத்தில் அதி முக்கிய கோவில்களின் முக்கியஸ்தர்களே பள்ளர்கள் தான்.
Ref: http://mallarchives.blogspot.in/2012_11_04_archive.html
(குறிப்பு: ஆலைய நுழைவு போராட்டம் நடத்தப்பட்டது பறையர்,நாடார் போன்ற மக்களுக்காக...!!! பள்ளர்களுக்கு அல்ல.)

வரையறை#3: பசுவை தெய்வமாக வணங்காதவர்கள் தலித்
முரண்பாடு: பசுவை பள்ளர்கள் தெய்வமாக வணங்குபவர்கள்.

வரையறை#4: இறந்தவர்களை புதைப்பவர்கள்
முரண்பாடு: பள்ளர்களின் குலத்தொழில் விவசாயம்

வரையறை#5: வறுமை உழல்வோர் தலித்
முரண்பாடு: பள்ளரை விட வறுமையில் உழலும் மற்ற சாதியினர் (உம்: நரிக்குறவர்) BC,MBC,FC பட்டியலில் இருக்கிறார்கள்

வரையறை#6 SC பட்டியலில் இருப்பவர்கள் தலித்
முரண்பாடு: பள்ளரின் பிரிவு (மூப்பர் BC , காலாடி BC , DC ,பண்ணாடி MBC )இல் இருக்கிறார்கள்
Ref: http://namvaralaaru.blogspot.in/2013/03/blog-post.html

#####
எனவே தலித் என்பது வர்கத்தையே குறித்தாலும், அதன் வரையறைக்குள் பொருந்தாத பள்ளர்களை, 'தலித்' என்று வழங்குவதன் மூலம், இந்த சமூகம் உண்மையான தலித் வர்க்கத்துக்கு தீங்கு இளைத்து வருகின்றனர். இது உண்மையில் கண்டிக்கத் தக்கது.

Friday, May 3, 2013

கலப்பு திருமணம்: முற்போக்கு சிந்தனையா? குரூர சிந்தனையா?



தமிழ் சமூகத்தில் சாதி:

குறிஞ்சி - குறவர்
முல்லை - இடையர்
மருதம் - பள்ளர்
நெய்தல் - பரதவர்
பாலை - எயினர்

இப்படி திணை வாரியாக உள்ள இனக்குழுக்கள் தான் கால ஓட்டத்தில் தங்களுக்குள் தேவையின் அடிப்படையில் கலந்து பல்வேறு அடையாளத்துடன் பல்வேறு இன குழுக்களை உருவாகினர். அந்த இனக்குழுக்கள் தான் இன்று இருக்கும் தமிழ் சாதிகள். உதாரணம்:

* 'கவுண்டர் என்ற பெயரே சுமார் 1000 வருடங்களுக்கு முந்திய இலக்கியங்களில்' இல்லை. -- பேரா.இரவி கவுண்டர், தொல்லியல் துறை, PSG கல்லூரி,கோவை
* கி.பி.12 ஆம் நூறாண்டுக்கு முன்பு தமிழில் 'பள்ளி' என்ற இனம் இல்லை.

இவற்றில் இருந்து, வெவேறு திணை மக்கள் தங்களுக்குள் தேவையின் பொருட்டு கலந்து வெவேறு இனக் குழுக்களை உருவாக்கி உள்ளது தெளிவு. இப்படி உருவான இனக் குழுக்களின் வாழ்வு முறை,பின்னணி,நிலைதன்மை என்பவை உறுதியானவை. காலம் கடந்தும் நிற்பவை. அவ்வாறு இனக்குழுக்கள் புதியதாய் உருவாகும் போது எந்த பிரச்சனையும் (அரிவாள் வெட்டு, கலவரம், ஊரை உடமையை எரித்தல்,கொலை) இல்லை.


    ஆனால் இன்று திராவிடம் என்ற பெயரில் ஆட்சி நடத்தி கொண்டு இருக்கும் வந்தேறி வடுகர்கள் முன்வைக்கும் 'கலப்பு திருமணம்' என்பது அவசர கதியில் வளர்க்கப்படும் 'பிராயிலர் கோழி'வகையை சார்ந்தது. அவர்களின் பிரச்சாரமே 'கீழ் சாதி ஆணுக்கும், மேல் சாதி பெண்ணுக்கும் திருமணம்' செய்து வைத்தால் சாதி ஒழிந்துவிடும். இதை பார்க்கும் போது, திராவிட கட்சிகள் அனைத்தும் ஏதோ 'கீழ் சாதி' மக்களுக்கு ஆதரவாக பேசுவது போல தோன்றும். ஆனால் உண்மை நிலை அது அல்ல. உதாரணம்:

* வட தமிழக மாநிலங்களில் வன்னியர் - பறையர் இடையேயும், தென் தமிழகத்தில் பள்ளர் - மறவர் இடையேயும் ஓயாத சாதி மோதல்கள் இருந்து வருகின்றன. வட மாநிலத்தில் ஒடுக்கப்பட்ட சாதி சார்பாக குரல் கொடுத்தும், ஊடகங்களில் ஊதி பெருக்கியும், அதை ஒரு மிக பெரிய அரசியலாக செய்து வரும் திராவிட கட்சிகள், இயக்கங்கள், ஆதிக்க சாதி என்று இவர்கள் சொல்லும் வன்னியரை (உண்மையில் இவர்களுக்கு தான் இழப்பு அதிகம்) சாதி வெறியர்கள் போல சித்தரிப்பதில் வெற்றியும் கண்டுள்ளனர். (மருத்துவர்  ராமதாஸ் அவர்களின் சுயநல அரசியலால் ஏற்ப்படும் பொது மக்கள் அசவுரியங்கள் இதில் சேராது. அது கண்டனத்துக்கு உரியது).

* ஒடுக்கப்பட்டோரின் காவலானாக விளங்கும் இந்த திராவிட இயக்கங்களின் உண்மை நிலை தென் தமிழகத்தில் தான் பல் இளிக்கிறது. இவர்கள் உண்மையில் யாருக்கு ஒத்துழைப்பு தந்து இருக்க வேண்டும்? இவர்கள் பார்வையில் கீழ் சாதி என்று சொல்லபப்டும் பள்ளருக்கு தானே? ஆனால், இவர்கள் ஆதிக்க சாதி என்று சொல்லப்படும் மறவர்களுக்கு தானே இன்றும் துணை நிற்கிறார்கள்.? மறவர் ஒட்டு என்பது அதிமுகவுக்கு சொந்தமானது என்பது எழுதப்படாத விதி. இருந்தாலும் திமுக,மதிமுக,தேமுதிக போன்ற ஓட்டுபொறுக்கி காட்சிகளுக்கு அங்கு என்ன வேலை? மறவர் முத்துராமலிங்க தேவர் அவர்களின் குருபூஜையை அரசு விழாவாக்கி, அனைத்து ஊடங்களிலும் பிரச்சாரம் செய்து, தங்க கிரீடம் தருகிறோம், விமான நிலையத்துக்கு பெயர் வைக்க மத்தய அரசை வலியுறுத்துகிறோம் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால் பரமகுடியையே ஸ்தம்பிக்க வைக்கும் சுமார் 4 லட்சத்துக்கும் மேலாக பள்ளர்கள் கூடும் இம்மானுவேல் சேகரன் அவர்களின் குருபூஜை நிகழ்வு எந்த ஊடத்திலும் வெளிவராமல் தடுக்கப்படுவதோ மட்டுமின்றி, ஏகப்பட்ட கெடுபிடிகளும் செய்யபடுகின்றன. பேருக்கு எல்லா கட்சி சார்பிலும் யாரவது ஒருவர் ஒப்புக்கு சப்பாணியாக வந்து அங்கு தலையை காட்டி விட்டு செல்வர். இது என்ன மாதிரியான முற்போக்கு சிந்தனை திராவிடர்களே? வட நாட்டில் ஒரு நிலை, தென் நாட்டில் ஒரு நிலை ஏன்? எப்போதெல்லாம் அங்கு மோதல் வருகிறதோ அப்போதெல்லாம் 'ஆதிக்க சாதிக்கும், தலித்துக்கும் மோதல்' என்று தான் பேசியும்,எழுதியும் வருகின்றனர். அதாவது இருவேறு வர்கத்தும் இடையே சண்டை என்று காட்டுவது தான் இந்த திராவிடர்களின் வேலை. கொஞ்சம் நெருங்கி சென்று பார்த்தால் மறவர் - பள்ளர் என்ற இரண்டு சாதிக்கு மட்டுமே அங்கு பிரச்சனை என்பது புலப்படும்.

* திராவிடர்கள் ஏதோ ஒட்டுமொத்த 'தேவர்' சமூக மக்களுக்கும் துணையாய் நிற்கிறார்கள் என்று தப்பு கணக்கு போட வேண்டாம். அங்கே தான் அவர்களின் உண்மையான கொடூர முகம் வெளிப்படுகிறது. கள்ளர்களின் விழாவான 'பெருங்காமநல்லோர் போராளிங்கள் மூக்கையா தேவர்' நினைவேந்தலுக்கோ, அகமுடையாரின் 'மருது சகோதரர்கள் குருபூஜைக்கோ', மறவர் முத்துராலிங்க தேவரின் குருபூஜை அளவுக்கு எந்த திராவிட கட்சியும் கண்டு கொள்வது இல்லை. இதில் இருந்து என்ன தெரிகிறது?

வட மாநிலத்தில் வன்னியருக்கு எதிராக பறையரை களம் இறக்குவதும், தென் மாவட்டங்களில் பள்ளருக்கு எதிராக மறவரை களம் இறக்குவதும் தான் இந்த திராவிட சக்திகளின் நோக்கம். இந்த அயோக்கியத் தனமான பின்னணியில் 'கலப்பு திருமண பிரச்சாரத்தை' நோக்கினால், திராவிட கட்சிகளின் உண்மை புலப்படும். என்ன அது?

* தமிழ் சாதிகள் தங்களுக்குள் எப்போதும் அடித்து கொண்டே இருக்க வேண்டும். பொன்,மண்,பெண் -- இதில் 'பெண்' என்பவள் மிகவும் sensitive விஷயம் என்பதால், அதில் கை வைக்கின்றனர் இந்த திராவிட சக்திகள். இதன் மூலம் இங்கே எப்போதும் பதட்டம் இருந்து கொண்ட இருக்க வேண்டும் என்பது தான் இவர்களின் எண்ணமே ஒழிய 'சாதி ஒழிப்பு' என்று சொல்வதெல்லாம் சுத்த ஹம்பக்.  'மறவரை வெட்டுங்கடா, மறவர் பெண்ணை கட்டுங்கடா' என்று பல ஆண்டுகளுக்கு முன்பு 'ஜான் பாண்டியன்' (தேவேந்திர சமூகம்) ஏதோ ஒரு சூழலில் பேசி இருந்தார். இதில் 'கலப்பு திருமண' குயுக்தி இல்லை. திட்டமிட்ட செயல் இல்லை. ஏதோ ஒரு கோபத்தின் காரணமாக அது வெறும் பேச்சோடு மட்டுமே நின்றுவிட்டது. --- இது தான் தானாகவே முன்வந்து செய்ய நினைத்தாலும், ஒரு இனக்குழு உருவாகதேவை இல்லாத காரணத்தால் அந்த கருத்து தவிடு பொடியாகும் என்பதற்கு ஒரு சரியான உதாரணம். ஆனால் உடும்பு பிடிக இந்த 'கலப்பு திருமண' விஷயம் திராவிட கட்சிகளால் எப்படி நடத்தப்படுகிறது?

"'கீழ் சாதி ஆண்' என் கையில் இருக்கான். அவனுக்கு நான் முழு சப்போர்ட்டு. மேல் சாதியான உன்னை பயமுறுத்த, அடக்கி வைக்க இந்த கீழ் சாதி ஆணை வைத்து உன் பெண் பெண்டுகளை அபகரிப்பதன் மூலம் உன் உடமைகள் மொத்தத்தையும் ஒழித்து விடுவேன்" என்பதை தவிர இந்த திராவிட சக்திகளுக்கு வேறு என்ன காரணம் இருக்க முடியும்?

தர்க்க ரீதியில் திராவிடர்களின் கலப்பு திருமணத்தின் நோக்கத்தை அலசினோம். இனி அதன் பின்னணியை வரலாற்று கண்ணோட்டத்தில் அலசுவோம்.

உண்மை நோக்கம்

நபர் - சாதி - இனம்
...............................................
பெரியார் ஈ.வே.ராமசாமி நாயக்கர் - பலிஜா நாயுடு - கன்னடர்
ராஜாஜி - தெலுங்கு பிராமணர்
மு.கருணாநிதி - சின்ன மேளம் - தெலுங்கர்
ஜெயலலிதா அம்மையார் - கன்னட அய்யங்கார்
வை கோபால்சாமி - நாயுடு - தெலுங்கர்
விஜயகாந்த் - நாயுடு - தெலுங்கர்

இவர்கள் யாரும் பிறப்பால்,மொழியால் தமிழர்கள் இல்லை. இவர்கள் தான் இன்றைக்கு தமிழ்நாட்டின் அரைசியல் தூண்கள். மேலே சொன்ன அனைவரும் ஏதாவது ஒரு வகையில் திராவிடத்தை சார்ந்தே வாழ்ந்தும்,தமிழகத்தில் அரசியல் செய்தும் வருகின்றனர் என்பது அனைவரும் அறிந்ததே.இதில் எவரிடமும் 'தமிழர்' என்ற அடையாளமோ, கட்சியின் பெயரோ கிடையாது.காரணம் இவர்களின் மேலே சொன்ன பின்னணி தான். இவர்களால் திராவிடம் பேசி தான் காலம் ஓட்ட முடியுமே தவிர,தமிழ் நாட்டில் தமிழர் என்று சொல்லி அரசியல் செய்ய முடியாது.

    பொதுவாக வந்தேறி வடுகர்கள் இன்று திராவிடம் என்ற பெயரில் தமிழனை ஆண்டு கொண்டு இருந்தாலும், எங்கோ யாரவது 'நீ யார் தமிழனை ஆள?' என்று இவர்களை பார்த்து கேட்டு கொண்டும், 'தமிழ் தேசியம்' பேசிக்கொண்டும், செயலாற்றி கொண்டும் தான் இருக்கிறார்கள். அதற்க்கு திராவிட சிகாமணிகள் கேட்கும் அடுத்த கேள்வியே 'தமிழன் யார்? அப்படி ஒரு இனமே கிடையாதே' என்பது தான். இப்படி கேட்கும் பல திராவிட சிகாமணிகள் 1947 ஆம் ஆண்டு பெரியார் அவர்கள் 'தமிழ் நாடு தமிழருக்கே' என்று கோரிக்கை வைத்ததை மறந்துவிட்டார்கள் போலும். யார் தமிழர்? அவரின் அடையாளம் என்ன என்று தெரியாமலேயே நாடு அமைக்க இவர்கள் கிளம்பி விட்டார்கள் போலும். விந்தை தான். :-)

இப்படி பல பேர் பல நேரங்களில் 'தமிழர்,தமிழ் தேசியம்' என்ற பெயரில் இயங்கி கொண்டு இருப்பது, திராவிடர்களுக்கு எப்பவுமே ஒரு கிலி தான். எனவே   'தமிழன்' என்பதற்கு அடையாளமாய் இருக்கும் இங்கே இருக்கும் பல்வேறு இனக்குழுக்களை எப்படி அழிப்பது? (சிங்களனின் அதே 'கலப்பு மண' டெக்னிக் தான்). இனத்தை இன குழுக்களின் அடையாளத்தை அழிக்க கத்தி சண்டை எல்லாம் வேண்டாம், திட்டமிட்ட கலப்பே போதும்.

தமிழ் நாட்டில் இருக்கும் இருவேறு பெரும் இன குழுக்கள்

1. தமிழை மட்டுமே தாய்மொழியாய் கொண்டு பல ஆயிரம் ஆண்டுகளாக இங்கே வாழும் இனக் குழுக்கள் (பள்ளர்,கவுண்டர்,பறையர்,கோனார்,முக்குலத்தோர் etc ...).


2. சுமார் 400 வருடங்களுக்கு முன்பு இங்கே வந்தேறிகளாக வந்த வடுக சாதிகளான நாயக்கர்,நாயுடு,கன்னட பிராமின்,சக்கிலியர்,சின்ன மேளம்(இசை வேளாளர்) போன்ற 'தெலுங்கை,கன்னடத்தை' தாய் மொழியாக கொண்ட, இன்றும் அந்த மொழிகளையே பேசி வரும், தமிழர் அல்லாத இனக் குழுக்கள்

மேலே சொன்ன இரண்டு வகையான இனக்குழுக்களும் ஒன்றோடு ஒன்று கலந்து விட்டால், 'தமிழன்' என்ற அடையாளம் நாளடைவில் நீர்த்து போய்விடும். பின்பு எவருமே 'நீ யார் என்ன ஆள' என்ற கேள்வியையே கேட்கமாட்டார்கள். அதற்க்கு அவசியமே இல்லாமேல் போய்விடும். திராவிடர்கள் தங்களது மேலாண்மையை தக்க வைத்து, தமிழனை நிரந்தரமாக அடிமையாக்கி விடுவார்கள்.


சாதி ஒழிப்பு: உண்மையில் செய்திருக்க வேண்டியது
* ஒவ்வொரு சாதிக்குமான வரலாறை அடையாளத்தை புரிந்து கொள்ளுதல்
* எந்த அடிப்படையில் ஒரு சாதி கீழ் என்றும், மேல் என்றும் பட்டியலிடுதல்
* அந்த அடிப்படையில் ஒவ்வொறாக களைதல்

(உதாரணம்: பறையர் சில இடங்களில் விவசாய கூலிகளாக,பறை அறைவோராக உள்ளனர். ஆனால் அவர்கள் தமிழ் சமூகத்தில் அறிவார்ந்த மக்களாக மட்டும் இன்றி, வேளாளர்களாகவும் இருந்து இருக்கின்றனர். அவர்களின் ஏற்றத்தாழ்வை போக்க, அவர்களின் நிலம் மற்றும் உடமைகள் அவர்களுக்கு திருப்பி தரப்பட்டாலே போதும்)

செய்து கொண்டு இருப்பது:
பறையர் சாதி ஆணுக்கும், வன்னியர்/கவுண்டர் சாதி பெண்களுக்கு 'கலப்பு திருமணம்' என்ற திட்டமிட்ட பிரச்சாரம். இது மென்மேலும் இந்த இனக்குழுக்களிடையே பிரிவையும் வெறுப்பையும் தான் விதைக்குமே தவிர, ஒரு போதும் இணக்கத்தையும், ஒற்றுமையையும் ஏற்ப்படுத்தாது.


கலப்பு திருமண பிரச்சார குழுவுக்கு தமிழரின் வேண்டுகோள்கள்:
* தமிழ் சமூகத்தில் காலத்திற்க்கேற்ப இனக்குழுக்கள் உருவாகி கொண்டு தான் இருக்கின்றன. அதன் ஆயுட்காலமும் அதன் நிலைப்புத் தமையும் (stability ) அதிகம். எனவே இங்கே புதிதாக, அதுவும் 'கீழ் சாதி ஆண், மேல் சாதி பெண்' என்று திட்டமிட்டு கலப்பு திருமணம் செய்து வைக்க நினைக்கும் உங்களின் உண்மையான நோக்கத்தை நீங்கள் விளக்க வேண்டும்.

* 'இல்லை இல்லை.கலப்பு மணத்தால் மட்டுமே சாதி ஒழியும்' என்று நீங்கள் விடாப்பிடியாக இருந்தால், இன்று கலப்பு மணத்தை முன் நின்று நடத்தும்,வந்தேறி வடுக திராவிட இயக்கங்கள், வந்தேறி வடுக திராவிட சாதிகளுக்கு இடையே (உதாரணமாக: ஆதிக்க சாதி நாயக்கர் பெண் , கீழ் சாதி அருந்ததியர் ஆண் ) முதலில் 'கலப்பு திருமணத்தை' முடுக்கி விட்டு, செய்து முடியுங்கள். அதன் பலனாக 'சாதி ஒழிப்பு' எந்த வகையில் வெற்றிகரமாக செய்யப்பட்டு விட்டது என்பதற்கான போதிய புள்ளி விவரங்களையும், அதனால் சமூகத்தில் ஏற்ப்பட்ட மறுமலர்ச்சியையும் பட்டியல் இடுங்கள்.

தமிழர்களாகிய நாங்கள் (பள்ளர்,பறையர்,வன்னியர்,கவுண்டர்,முக்குலத்தோர்,கோனார் etc ) தேவையின் பொருட்டு எங்களுக்குள் உருவாகிய இனக்குழு உருவாக்க கோட்பாட்டிற்கும், நீங்கள் கொடுக்கும் சமூக மறுமலர்ச்சி புள்ளி விவரங்களுக்கும் ஏதும் வேறுபாடோ, வித்தியாசமோ இருந்தால், அதை நாங்கள் திருத்தி கொள்கிறோம். பின்பு அந்த அடிப்படையில் எம்மில் இருந்து கால ஓட்டத்தில் வேறு வேறு இனக் குழுக்கள் உருவாகும் போது பயன்படுத்தி கொள்கிறோம். இதை விடுத்து, எடுத்த எடுப்பிலேயே எந்த அடிப்படை முகாந்திரமும் இல்லாமல், எம்முள் பிரச்னையை தூண்டுபடி,'கலப்பு திருமண பிரச்சாரத்தை'  செய்து,செயலாற்ற வேண்டாம்.

பின் இணைப்பு
காதல் திருமணம், கலப்பு திருமணம்: வேறுபாடு
காதல் திருமணம் -- சாதி மதம் கடந்து இயல்பாய் மனிதருக்குள் தோன்றும் உணர்வு. இது பல ஆயிரம் காலமாக இங்கொன்றும் அன்கோருமாய் நடந்து வருகிறது. ஆனால் பெரும்பாலும் நடக்கும், மக்களால் விரும்பப்படும் திருமணங்கள் (அது ஆதிக்க சாதியை இருந்தாலும், கட்டு வாழ் பழங்குடி மக்களாய் இருந்தாலும்) பெற்றோரால் நிச்சயிக்கப் படும் திருமணங்களே.

கலப்பு திருமணம்: கீழ் சாதி ஆணுக்கும், மேல் சாதி பெண்ணுக்குமான திட்டமிட்ட திருமணங்கள்.