* தியாகி இம்மானுவேல் சேகரன் தேவேந்திரனார் அவர்களின் நினைவஞ்சலியில் ஈழ தமிழர் தலைவர் திரு.சிவாஜி லிங்கம் அவர்கள்.
"...உலகில் எந்த தலைவருக்கும் இல்லாத அளவுக்கு இம்மானுவேல் சேகரனாரின் நினைவஞ்சலிக்கு அணி அணியாய் வரும் மக்கள் கூட்டம் எனக்கு வியப்பளிக்கிறது...." --- திரு.சிவாஜிலிங்கம்.
* கோ.க மணி, சட்ட மன்ற உறுப்பினர், ப.ம.க காணொளி கூறியவை
"...இம்மானுவேல் சேகரனார் அவர்களின் 55வது நினைவேந்தலை முன்னிட்டு, பாட்டாளி மக்களின் சார்பில், மருத்துவர் அய்யா அவர்களின் சார்பில், மலர் வளையம் வைத்து வீர வணக்கம் செலுத்தியுள்ளோம்.தென் தமிழ் நாட்டில், பறந்து விரிந்து வாழுகின்ற தேவேந்திர குல வேளாளர் மக்கள், இந்த நினைவு நாளை முழுமையாக கடைப்பிடித்து வருகிறார்கள்.1989 ஆம் ஆண்டு மருத்துவர் அய்யா அவர்கள் இந்த நினைவிடத்தை பராமரிக்க முதல் கட்ட நிதியாக சுமார் 11 லட்சத்தை கொடுத்தார்கள். மறுத்தவர் அய்யா அவர்கள் அவ்வப்போதும், நான் ஒவ்வொரு வருடமும் பாட்டாளி மக்கள் சார்பில் இங்கே வருகிறோம்..."
நினைவேந்தலில் கலந்துகொண்ட பிற தமிழக முக்கியஸ்தர்கள்
> செந்தமிழன் சீமான் – நாம் தமிழர் கட்சி
> விடுதலைச்சிறுத்தைகள் கட்சி
> பகுஜன் சமாஜ் கட்சி – சிவகங்கை மாவட்டம்
> திரு. முருகவேல் இராஜன், மக்கள் விடுதலை கட்சி
> திருமதி பவானி இராஜேந்திரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர், திமுக.
> சுப. தங்கவேலன், முன்னாள் அமைச்சர்,திமுக
> தங்கவேல், நாடாளுமன்ற உறுப்பினர்
> திருமதி தமிழரசி, முன்னாள் அமைச்சர்
> திராவிடர் கழகம்
> திரு. ம.பா. பாண்டியராசன், தே.மு.தி.க., சட்ட பேரவை உறுப்பினர்
> திரு. அதியமான், ஆதித்தமிழர் பேரவை
> நாயுடு மகாஜன சங்கம்
> செல்லூர் கே. ராசு, கூட்டுறவு துறை அமைச்சர்
> டாக்டர் சுந்தரராஜன், ஆதிதிராவிடர் நலத்துறை
> ராம்பிரபு, காங்கிரஸ்
நினைவேந்தலில் கலந்துகொண்ட இந்திய முக்கியஸ்தர்கள்
> ராம்விலாஸ் பஸ்வான்
> பகுஜன் சமாஜ் கட்சி
பஞ்சாப்பில் சிலை திறப்பு
நினைவேந்தல் நிகழ்வின் தொடர்ச்சியாக, தியாகி. இம்மானுவேல் சேகரனார் அவர்களின் திருவுருவச்சிலை பஞ்சாப் மாநிலத்தில், அம்மாநில மக்களால் திறந்து வைக்கப்பட்டு மரியாதை செய்யப்பட்டது.
பார்போற்றும் தியாகி இம்மானுவேல் சேகரனாரின் புகழ் எல்லை கடந்து இந்திய மக்கள் பலரிடம் பரவியுள்ளது என்பதையே இந்நிகழ்வுகள் வலியுறுத்துகின்றன.
மொழி கடந்து தியாகியின் அருமையும், பெருமையும் உணர்ந்தவர்கள் சிலை வைக்க அனுமதி தருகின்றனர். ஆனால் இங்கே தியாகி இம்மானுவேல் செகரனாரின் சிலை வைக்க அனுமதி பெறவே பல கட்ட போரட்டங்களை நடத்த வேண்டி உள்ளது. ஆனால் சில குறிப்பிட்ட சாதி வெறியனுக்கு மட்டும் சம்பந்தமே இல்லாத இடத்திலே கூட அரசியல் வாதிகளே (தி.மு.க மற்றும் அ.தி.மு.க இரண்டுமே விதி விலக்கல்ல ) உதாரணம் : திருச்சி மாவட்டத்தில் தேவேந்திர குல வேளாளர் (மள்ளர் ) மக்களும் , முத்துரையர் களுமே பெரும்பான்மை. ஆனால் திருச்சி மத்திய பேருந்து நிலையம் அருகே முத்துராமலிங்க மறவர் சிலை வைக்கப்பட்டுள்ளது. இங்கே மறவர்கள் சுத்தமாக கிடையாது. கள்ளர்கள் கொஞ்சம் லால்குடி பகுதிகளில் மட்டுமே உள்ளனர். ஆனால் அங்கேயும் தேவேந்திரர்களும் முத்திரையர்களுமே பெரும்பான்மை.
ReplyDeleteThaai Thamizh Naatil Muthukudi, Ventharkudi, Uzhavarkudi Thalaivar Immanuvelanarukku.. Yengenum Oru Village Panchayat-il Kooda Ooratchi, perooratchi, Nagaratchi, Maanagaratchil kood theermanam pottu... Silai engeyum Vaikka villai Ithu RTI Thagaval... aanal Oottu mattum Orukodi Thavaramal Podukireerkal Yetharkkuthaan , Yarukkuthaan. Podukireerkalo theriyavillai?
ReplyDeleteDevendrakula velalar is not sc list
ReplyDeleteதேவேந்திரர் எனும் ஓட்டு வங்கியை திமுக இதுவரை பயன்படுத்தி வருகிறதெனினும் பசும்பொன் கிராம அஞ்சலிக்கு வருடா வருடம் செல்லும் ஸ்டாலினோ முக்கிய திமுகவினரோ பரமக்குடிக்கு அஞ்சலி செலுத்த ஆஜரானதில்லை..குடும்பமார ஏமாளியாக்கும் திமுக
ReplyDelete